April 26, 2007

Das leben der anderen

பிறரது வாழ்க்கை ஏன்று அர்த்தம் வரும் இந்தத் திரைப்படம் என்னை மிகவும் பாதித்த படமாகவே நான் கருதுகிறேன். ப்ஃளோரியான் ஹென்கெல் ஃபோன் டோன்னெர்ஸ்மார்க் என்ற இயக்குனரால் 2006 ல் இயக்கி வெளியிடப்பட்ட படம். இது அவரது முதல் படமும் கூட. முதல் படத்திலேயே ஆஸ்கரைத் தட்டிவிட்டார்.

GDR அல்லது DDR என்று அழைக்கப்பட்டு வந்த முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் நடக்கும் கதை. ஜார்ஜ் ட்ரேமன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார். சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டும் நாடகங்களை எழுதி இயக்கி வெளியிடுபவர். அவரது நாடகங்களில் நடிக்கும் நடிகை கிரிஸ்டா மரியா என்ற பெண்ணுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு முன்னேறிய நட்பு. இவருமே சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டுபவர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சோஷியலிச சித்தாந்த நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மேல் சந்தேகம் கொண்டு அவர்களை கண்காணிக்க உத்தரவு பிரப்பிக்கிறார் ப்ரூனோ ஹெம்ப் என்கிற மந்திரி. இத்தகைக ஆப்பிரேஷன்களைச் செய்யவே அப்போதய கிழக்கு ஜெர்மனியில் சிறப்பு காவல் படை இருந்திருக்கிறது. அதன் பெயர் STASI. இத்தகைய ஸ்டாஸி ஏஜண்டாக வருகிறார் வைஸ்லர் என்பவர். படத்தின் கதையே இவர் மூலமாகச் சொல்லப்படுவதாக அமைந்திருக்கிறது.

வைஸ்லர் ட்ரேமேனை கண்காணிக்க அவரது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் மைக்ரோஃபோன்களை மாட்டி 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டே கண்காணிக்கிறார். நித்தம் ரிப்போர்ட் டைப் செய்து அவரது சுப்பீரியருக்கு அனுப்புகிறார். ட்ரேமேன் மற்றும் க்ரிஸ்டா மரியாவின் வாழ்க்கையினால் கொஞ்சம் கொஞ்சம் அவரும் பாதிக்கப்படுகிறார். ட்ரேமேன் தன் சகாக்களுடன் இணைந்து மேற்கு ஜெர்மனியின் ஊடகதத்திற்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்புகிறார், அதுவும் எப்படி கிழக்கு ஜெர்மனியில் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று. ஸ்டாஸிக்கள் உஷாராகி, வைஸ்லரைக் கேட்கின்றனர். வைஸ்லர் சரியான சமயத்தில் ட்ரேமேனைக் காப்பாற்றிவிடுகிறார்.

ஒருவரை இப்படியும் ஒரு நாடு கண்காணிக்குமா என்று அதிர்ச்சியில் இருந்த எனக்கு கடைசியாக கிளைமாக்ஸில் மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன. ட்ரேமான் போன்ற பிரபலங்களை மட்டுமே கண்கானிக்கவில்லை, பல மில்லியன் மக்களையும் அவர்களது அந்தரங்க வாழ்க்கையையும் கண்காணித்துள்ளனர் என்பது தான் அந்த அதிர்ச்சி.

ஒரு கட்டத்தில் தன் காதலி கிரிஸ்டா மாரியாவை இழந்து நிற்கும் ட்ரேமேன் எழுதுவதை நிறுத்திவிடுவார். அப்போதுகூட அவருக்கு அவரது வீடு கண்காணிக்கப்படுகின்றது என்ற உண்மை தெரியாது. ஆனால் பெரில்ன் சுவர் உடைந்து கடைசியில் தான் நம்பிய அந்த மந்திரியே சொல்லும் போது அதிர்ந்து போய் விடுவார். அவரை யார் கண்கானித்தது என்ற உண்மை அறிந்து கொண்டு பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடுவார். அந்தப் புத்தகத்தை அந்த கண்காணிப்பாளரான வைஸ்லருக்கே சமர்பணம் செய்வார். இதில் ஐரனி என்னெவென்றால் வைஸ்லரும், ட்ரேமேனும் படத்தில் பேசிக் கொள்ளும் காட்சியே இல்லை. ஆனால் கடைசியில் தன் அந்தரங்கத்தை கண்காணித்த வைஸ்லருக்கே தன் புத்தகத்தை சமர்பணமாக்கும் அளவுக்கு மதிப்பு கொடுக்கிறார்.

எப்படி சோசியலிச நாட்டில் மேற்குலகைப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நாம் நம் அரசியல் வாதிகள் அதுவும் முக்கியமாக கம்யூனிஸ்டுகள் சொல்வது போலவே இருக்கிறது.

April 25, 2007

தமிழ்மணம்

Dear Admin,

I have been an avid reader of tamil blogs since april 2006. And thamizmanam gave great opportunity to find several different kinds of blogs at one place. Now i find thamizmanam to be increasingly partial towards a group of bloggers who express their disagreement in a democratic way and increasingly ading and abeting leftist radicals, naxalites, and anti-national anti-indian elements. Those who write rejoinder to these anti national blogs are labelled without any basis as hindutva goons, fascists and what not. I am sick and tired of reading the same kind of nonsense that thamizmanam treats as best blogs and hosts in poonga. All of them invariably contain anti-state, anti-national rhetoric.

People who write such blogs are sometimes paid to do so. People who write rejoinders are doing so out of their own will and spending their own time.

It is well within your purview to decide what befits good and bad according to your own understanding. I have no intentions of changing that. But the recent actions of thamizmanam is clearely showing what it favors and what it wants to reject. The delisting of nesakumar who just questioned thamizmanam's integrity is just an example of how thamizmanam is tackling its opponents.

By silencing them!

I feel that the attitude of thamizmanam is it selectively promotes leftist, marxist, anti-india, anti-hindu bloggers.

This happens only when a group controls the whole. It is increasingly becomming clear that the group is the "be all" and "end all" of thamizmanam. What the group feels as bad is considered bad, those who disagree are prosecuted.

This trend is worrying and i increasingly feel i do not want to be part of this intellectual terrorism.

Fortunately the world of blogs is bigger than thamizmanam and i, having a free will to choose, choose to get out of what i consider to be a terrorist den.

So, I hereby request you to delist my blog from your site. I have done the necessary things from my side.

Sincerely
sankar

mailed to: adm@thamizmanam.com

tamil version:

நிர்வாகிகளுக்கு,

தமிழ் வலைப்பதிவுகளை நான் கடந்த ஏப்ரல் 2006 முதல் படித்துவருகிறேன். தமிழ்மணம் இந்த விஷயத்தில் பல நல்ல பதிவுகளைப் பார்த்து படிக்கக் கூடிய இடமாக விளங்கிற்று. சில காலமாக தமிழ்மணம் ஒரு சாராரை, அரசியல் சார்புடையவர்களை அதுவும் அவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்புகள் தெரிவித்ததற்காக அவர்களைத் தூக்குவது, மற்றும் இடது சாரி அல்ட்ராக்கள், நக்ஸலைட் இயக்க அடிவருடிகளுக்கு முன்னுரிமை மற்றும் முதல் உரிமை கொடுப்பது கேவலமாக உள்ளது. இது போன்ற தேச விரோதப் பதிவுகளுக்கு பதில் எழுதுபவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் ஹிந்துத்வாவாதிகள் ஃபாசிஸ்டுகள் என்று முத்திரை குத்தி வருகிறது தமிழ்மணம். போதாததற்கு தமிழ்மணம் வாராவாரம் தேர்ந்தெடுத்து தொகுக்கும் பூங்கா வலையிதழ் முழுக்க இந்த நக்ஸலைட்டு அடிவருடித்தனமும், கம்யூனிஸ தேச விரோதப் பதிவுகளுமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு பணம், பொருள் ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்த இந்திய எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில், பொன்னான நேரத்தை வீணாக்கி பதில் எழுதுகிறார்கள்.

தமிழ்மணத்திற்கு நல்லது கொட்டது சொல்லிக் கொடுத்து மாற்றுவது என் வேலையல்ல. அதன் வரம்புகள் உணர்ந்து செயல்படத் தெரியாத அளவுக்குத் தமிழ்மணமும் மோசமானதாக இருந்ததில்லை. ஆனால் சில காலமாக தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் சோபை அளிப்பதாக இல்லை. அதன் விருப்பு வெறுப்புகளின் வரம்புகள் என்ன என்பதை அது தெளிவாக்கிக் கொண்டே வருகிறது. நேசகுமாரை நீக்கியதன் மூலம் தமிழ்மணம் தன் எதிர் கருத்துள்ளவர்களை எப்படி அடக்குகிறது என்பது தெளிவாகிறது.

எதிர்கருத்துள்ளவர்களை ஓழித்துவிடுவது!!

தமிழ்மணத்தின் எண்ணம் கம்யூனிசம், மார்க்ஸ்வாதம், இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு வலைப்பதிவர்களையே முன்னிருத்துவதாக உள்ளது.

இத்தகைய செயல்கள் ஒரு குழு முழுதையும் கட்டுப்படுத்து வல்லமை பெற்றதையே காட்டுகிறது. அந்தக் குழுவின் விருப்புகள், வெறுப்புகளும், அரசியல் சார்புகளுமே சரி, மற்றவை தவறாகிவிடுகின்றது. அந்தக் குழுவை எதிர்ப்போரின் கதி, தமிழ்மணத்திலிருந்து நீக்கம்.

இத்தகைய செயல்கள் அதிகரிப்பது நல்லதல்ல. இத்தகைய அறிவார்ந்த அடாவடித்தனத்திற்கு துணை போக நான் விரும்பவில்லை.

கடவுள் புன்னியத்தில், தமிழ் வலைப்பதிவுகள் உலகம் தமிழ்மணத்துடன் நிற்பதில்லை. அது பறந்து விரிந்து கிடக்கிறது. என் சுய சிந்தனை எனக்கு இன்னும் இருப்பதால், இந்தத்த் தீவிரவாதக் கூடம் என நான் கருதும் தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்.

ஆகவே, என் வலைப்பதிவுகளை உங்கள் வலைத்திரட்டியிலிருந்து நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,

ஷங்கர்.

April 2, 2007

சமீபத்தில் பார்த்த படங்கள்

1. Happy Feet
2. The Departed
3. Children of Men

happy feet:

அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் emperor penguin கள் தங்கள் குரல் வழத்தால் ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஏக இறை கொள்கை போல் கடைபிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காஃபிர் போல் குரல் வளம் இல்லாத ஆனால் நன்கு நடனமாடக்கூடிய ஒரு குட்டி பிறக்கிறது. அது தன் வாழ்கையில் எத்தகைய கஷ்ட நஷ்டங்கள் அனுபவிக்கிறது, எதனால் தன்னினம் அழிவின் விழிம்பிற்குத் தள்ளப்பட்டுவருகிறது என்ற காரணத்தை அறியத் துடித்து தேடலில் ஈடுபடுவது என்று animated திரைப்படம் என்றாலும் விருவிருப்புக்குச் சற்றும் குறைவின்றி அதே நேரத்தில் இடையே gobal warming funda க்களையும் நுளைத்து அருமையான படம். எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.

The Departed:

குற்றவாளிக்களிடையே ஒரு போலீஸ் ஒற்றன், போலீஸ்களிடையே ஒரு கிரிமினல் ஒற்றன், இருவரும் சந்தித்தால் ? லியொனார்டோ டிகாப்ரியோவும், மாட் டிமொன்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நல்ல ஆக்ஷன் த்ரில்லர்.

237 முறை fu*k என்ற பதத்தைப் பயன்படுத்திய படம் ஆஸ்கார் வாங்கி சரித்திரம் படைத்திருக்கிறதாம்...சொல்கிறார்கள்.

Children of Men:

பதினெத்து ஆண்டுகள் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை என்றால் ?

2027 ல் நடக்கும் இந்த sci-fi thriller ல், க்ளைவ் ஓவன் முக்கிய கதாப்பாத்திரமான தியோ வாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது ஒரு காஃபி ஷாப்பில் தொலைக்காட்சி செய்தியில் உலகின் மிக இளமையான மனிதர் கொலைசெய்யப்பட்டார் என்பது. அவருக்கு வயது 18. அந்த செய்தி முடிந்து சில நொடிகளில் தியோ வெளியில் வந்து காஃபியில் தன் பிரியமான "விஸ்கி" மிக்ஸிங்க் செய்யும் போது "பூம்"!! வெடிகுண்டு, தற்கொலைப்படைத் தாக்குதல். அல்லாஹ் ஹு அக்பர் கோஷங்கள். ப்ரொலெடேரியட் புரட்சிகள் என்று படம் எக்கச்செக்க திடீர் திருப்பங்களுடன் செல்கிறது. தியொவின் ex காதலி ஜூலியன் பிரிட்டனில் immigrants rights க்காகப் போராடும் ஒரு புரட்சிகர அமைப்பின் அங்கம் வகிக்கிறாள். அதில் ஒரு கருப்பினப் பெண் கர்பமாக இருப்பது தெரியவே அரசியல் லாபத்திற்காக ஜூலியனை கொன்றுவிடுகின்றனர்..எப்படி அந்த கர்பமான பெண்ணை அரசியல் லாபத்திற்காக புரட்சி செய்யும் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. 2007 ஆஸ்கருக்காக நாமினேஷனில் இருக்கும் படம். சமீபத்தில் தான் DVD வெளிவந்துள்ளது.


P.D. James ன் இதே பெயரில் வெளிவந்த நாவல் கதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஏன் மனித குலத்துப் பெண்கள் கருத்தரிக்காமல் போனார்கள் ? இந்த infertility க்கான காரணம் என்ன ? என்றெல்லாம் எந்த விளக்கமும் இல்லை! என்பது உருத்திக் கொண்டே இருக்கும் கேள்வியாக இருந்தது.