February 26, 2007

வணக்கம்

இத்தோட படம் முடிஞ்சிருச்சுங்க...

வணக்கம் போட்டேன்...

ஒரு வாரம் என் அறுவைகளையும் அரசியல்களையும் தாங்கிக் கொண்டு அத்துடன் என் தமிழ்க் கொலைகளையும் (spelling mistakes) பொறுத்துக்கொண்டு எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி.

இந்த வாய்ப்பை எனக்குத் தந்த தமிழ் மணத்திற்கும் என் நன்றி.

I enjoyed that attention.!

அன்புடன்

வஜ்ரா

February 25, 2007

இயைதல் கோட்பாடு

"இந்த நெட்ஸ்கேப்புக்கு என ஆச்சுன்னே தெரியல்லையே, இப்ப வராமலே போயிருச்சே" புதிதாக வால் மார்டில் வாங்கிய ஒயர் லெஸ் அடாப்டரை install செய்து கொண்டிருந்தார் தந்தை.

"அப்பா" மகளின் குரல், "ஒரு முக்கியமான விஷயம் பேசனும்",

"சொல்லு, கேட்டுகிட்டே தான் இருக்கேன்"

"நான் ஒருத்தர விரும்புகிறேன்"

"ஓ! அதாவது..."

ஆமா, நான் அவரக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்"
-----
"என்ன விளையாடறியா? இப்பவே ஸ்ரீரங்கத்தப் போய் பிடிக்கிறதா ? நம் படைகள் மிகவும் களைப்பாக இருக்கின்றன, நாளை காலை வரை காத்திருக்கலாமே?" படைத்தளபதி கேட்டான்.

"நான் என்ன தில்லியிலிருந்து இங்கு வந்து ஓய்வெடுப்பதற்காகவா வந்தேன்?" உலுக் கான் கோபமானான். "அங்கே இறந்து கிடக்கும் படைவீரர்களைப்பார்! இப்போது இந்தக் கோவிலுக்குப் பாதுகாப்பு இல்லை, இப்பொழுதே ஊருக்குள் சென்று கோவிலைக் கொள்ளையடிப்போம், காபீர்களைக் கொன்று குவிப்போம், பின்னர் அவர்கள் சிலைகளை உடைப்போம்!"

"கோவில் எங்கெயும் போகாது!"

"ஆனால், அந்த காபீர்கள் சிலையைத் தூக்கி ஒளித்து வைத்துவிடுவார்களே ?, அதைத்தான் பல இடங்களில் பார்த்தோமே, திப்ருபூர், நாராயண்கஞ்ச், நர்சிபட்டனத்திலும் அதைத்தானே செய்தார்கள். நான் மறுபடியும் அதே தவறைச் செய்வதாக இல்லை. இவர்களுக்கு கலாச்சார, வரலாற்று முக்கியத்துவம் கொடுப்பதே இந்த சிலைகள் தானே, இதை உடைப்பது இவர்கள் மனோ பலத்தைத் தகர்க்கும், அல்லாஹ் நன் துணையிருந்தால் நம் இந்த ஜிஹாதில் வெற்றி பெருவோம்."
-----

"அவன் என்ன செய்யறான், அவன் பெயர் என்ன ?" அப்பா கேட்டார்.

"சுஹைல்" என்றாள் மகள், "இப்பத்தான் படிப்பு முடித்து வேலைக்கு apply செய்கிறார், கொஞ்சம் job offer ஸும் இருக்கு"

"அவன் ஒரு..."

"ஆமாம் பா, முஸ்லீம்". "இது ஒரு பிரச்சனையா ? நீங்க எங்களை நல்ல லிபரல் வேலியூஸோடத்தான வளர்த்தீர்கள் ?"

"எனக்கென்னம்மா பிரச்சனை ? infact நீ தான் யோசிக்கவேண்டிய விஷயம் இது."

"இல்லப்பா, அவன் ரொம்ப நல்லவன் பா, நம்மள மாதிரியே நல்ல லிபரல் வேலியூஸ மதிக்கிறவன், அவன் ஒண்ணும் fundamentalist எல்லாம் இல்லப்பா"

"அவன் இது வரை மதத்தைப் பத்தியே பேசுனது இல்ல, நாம அடிக்கடி சந்திக்கிறது, பார் பப் டேன்ஸ் பார்ல இப்படித்தான் போவோம், அவனோட career ல தான் அவனுக்கு interest."

"எனக்கு இப்பவே ஒரு சந்தேகமா இருக்கு" "முதல்ல அடிப்படைவாதின்னா நீ நினைக்கிற மாதிரி குண்டு வைக்கிறவன் இல்ல குண்டக்கட்டிக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிறவன் மட்டும் இல்ல, அமைதியா இதெல்லாம் பாத்துக்கிட்டே சும்மா இருக்குற, சமையத்துல சப்போர்ட்டும் பண்ற பெரும்பான்மை மக்களும் தான்"

"அப்பா, சும்மா, முஸ்லீம்னு சொன்ன உடனேயே முடிவுக்கு வந்துறாதீங்க, அவன கிட்ட பேசுங்க, பிடிக்குதான்னு பாருங்க, பிடிக்கலையான்னு அப்பறமா முடிவு பண்ணிக்கலாம்"

ம்ம்ஹூம் இவ கேக்குற மாதிரி இல்லைன்னு நினைத்துக் கொண்டே, லேப்டாபைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிடு மகள் பக்கம் திரும்பினார் தந்தை.


அவருக்கு அவர் மகள் மேல் தனி அன்பு, அவள் ஒரு மாதக்குழந்தையாக இருந்த போது சிரித்த சின்னஞ்சிரு சிரிப்பு அவர் மனதில் தொன்றி மறைந்தது, "ஆண்டவா, நான் என்ன பாவம் பண்ணேனோ, ஏன் என்ன இதெல்லாம் பாக்கவைக்கிற ?" மனதில் கேள்வியுடன் மகளைப் பார்த்தார். அவள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள், போர்களத்திலிருந்து வந்த செய்திகேட்டு. அவளது கணவன் உலுக் கானின் படையினரால் வீர மரணம் அடைந்தான் என்பது தான் அந்தச் செய்தி.

"பொன்னி, அழாதேம்மா, உன் புருஷன் சண்டையில செத்துருக்கார் -- ஒரு க்ஷத்திரியனுக்கு இதெவிட பெருமை ஏது ?"

"என்ன சொல்றீங்க, கஷ்ட காலத்துல க்ஷத்திரியன், சக்கிலியன்னு பேசிகிட்டு, ?" ஆசுவாசப்படுத்த வந்த பக்கத்துவீட்டுப் பெண் முணுமுணுத்தாள்.

"நான் இனிமே இருக்க விரும்பல, நானும் செத்து வைகுண்டம் போறேன், கிருஷ்ணா! என்னையும் எடுத்துக்கோ!" பொன்னி புலம்பி அழுதாள்.

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாதும்மா, எனக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்கா, எல்லாரும் ஊரைவிட்டுப் போயிகிட்டு இருக்காங்க. உலுக் கான் ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் அடுத்து தாக்கப் போறதா வேற சொல்றாங்க, முஸ்லீம்கள் வந்தாலே, ஊர்ல இருக்குற மக்களையெல்லாம் கொன்றுவிடுவார்கள், பெண்களை கற்பழிப்பார்கள். குழந்தைகளைக் கடத்திச் சென்று முஸ்லீம்கள் ஆக்கிவிடுவார்கள்"

"நாமளும் இந்த இடத்தைவிட்டுப் போவோம், புதுசா வேறு வாழ்க்கை ஆரம்பிப்போம்"


"கல்யாணம் பண்ணிக்கிறியா ?" அப்பா கேட்டார்.

"ஆமாம்" மகள்.

"இங்க பாரு " என்று தனது லேப்டப்பைக் காட்டி "இதுல புது software ஒண்ணு போட்டேன், அது வேலை செய்யணும்னா இருக்குற செட்டிங்ஸெல்லாம் மாத்தணுமாம், அப்ப நான் இதுக்கு முன்னாடி பண்ணுன எதையுமே பண்ண முடியாது. இப்ப இந்த softwareக்கு தகுந்த மாதிரி என் கம்ப்யூட்டர் செட்டிங்ஸையெல்லாம் மாத்திக்கவேண்டியிருக்கு, விக்கும் போது இது backwards compatible ன்னு சொன்னாங்க, அத நான் அப்புடியே நம்பிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.."

"அப்பா, விஷயத்துக்கு வாங்க"

"சரி, சுஹைல் என்ன plug and play டைப்பா, இல்ல இந்த software மாதிரி மக்கர் டைப்பா ?"

"அப்பா !"

"இதெல்லாம் உன்னை நீயே கேட்டுக்கவேண்டிய முக்கியமான கேள்வி. சுஹைல், நி நினைக்கிற மாதிரி plug and play டைப்னா, எந்தப் பிரச்சனையும் இல்ல".

"இல்லை! இந்த software மாதிரி எல்லாம் தனக்கேத்தமாதிரி மாத்திக்க நினைக்கிற டைப்னா பெரிய்ய பிரச்சனை தான்!"

அவளுக்குத் திடீர் என்று ஏதோ உரைத்தது. அழுகையை நிறுத்திவிட்டாள் பொன்னி.

அவளது தந்தைக்குப் புரிந்து விட்டது, இவள் ஏதோ மனதில் நினைத்துவிட்டாள், அவளை மாற்ற முடியாது என்று!

"உலுக் கான் படை எங்கே இருக்கிறது ?" அமைதியாகக் கேட்டாள்.

"குதிரையில் போனால் ஒரு மணி நேரம் ஆகும், இப்ப நம்ம கிட்ட நேரமில்ல, நம்ம தெற்கால போயி அந்த மலைக்குப் பின்னால ஒளிஞ்சுக்குவோம். ஓடி அடுத்த ஊருக்குப் போறதுக்குப் பதிலா ஒளிஞ்சுக்குறது நல்லது. அந்த மலைக்குப் பின்னாடி நிறைய இடம் இருக்கு, அங்கே ஸ்ரீரங்கத்துப் பெண்கள் எல்லாரும் ஒளிஞ்சுக்கலாம்"

"அப்ப ஆண்களெல்லா என்ன செய்வார்கள் ?"

"அரங்க நாதர் மூர்த்தியை என்ன செய்ய ?" பொன்னி கேட்டாள்.

"லோகாச்சார்ய பிள்ளை மூர்த்தியை மைசூர் பக்கத்துச் சத்திய மங்கலத்துக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே உடையாரிடம் பெரிய படை இருக்கிறது. உலுக் கான் அங்கே தாக்க மாட்டான். ஆனா, கானின் படை சீக்கிரமே கோவிலுக்கு வந்துருச்சுன்னா, அவங்களுக்கு மூர்த்தியை எடுத்துச் செல்ல நேரம் இருக்காது. நடு வழியில் சிக்கிவிடுவர். பகவான் தான் காப்பாத்தனும்."



"என்ன பிரச்சனைன்னு புரியல்லையா...?" அப்பா கேட்டார்.

"இப்ப ஒரு விளக்கத்தோட சொல்றேன், இப்ப இங்க அமேரிக்காவுல நடக்குற ஹலோவீன் எடுத்துக்கோ, ஒரு சில பேருக்குப் பக்கத்துவீட்டுக் குழந்தைகள் வந்து மணி அடிப்பதே பிடிக்காது, கதவுகளில் "do not disturb" எழுதிப் போட்டிருப்பார்கள். சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. இது 'சுத்தமாக எதையும் புதிதாக ஏற்றுக் கொள்ளத்தெரியாத' stage. கொஞ்ச பேருக்கு ஹாலோவீன் பார்டி காஸ்டியூம் போட்டு வர்ர பசங்களுக்கு இனிப்பு கொடுப்பதும் பிடிக்காது, அவுங்கள do not disturb னு போட்டு விரட்டவும் மனசில்லை. அதனால அவுங்க காலிங் பெல் அடிச்சாலும் போயி கதவைத் திறக்கமாட்டார்கள். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குற மாதிரி stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகளுக்கு இனிப்பும் கொடுக்கணும் ஆனால் அடிக்கடி தொந்திரவும் இருக்கக் கூடாது, அதனால அவுங்க, கதவுல இனிப்புக் பாக்கெட்டை மாட்டி வைத்திருப்பார்கள். ஹாலோவீன் பார்டிக்காக வரும் குழந்தைகள் இனிப்பு எடுத்துக் கொண்டு போயிவிடலாம். இந்த stage கொஞ்சம் 'ஒத்துக் கொள்ளும்' stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகள் சந்தோஷமும் மிக முக்கியம், ஆகயால் குழந்தைகளுக்கு இனிப்பு தாங்களே வழங்குவதோடு, இந்த spiderman காஸ்டியூம் நல்லா இருக்கு போன்ற appreciation கொடுப்பார்கள். இது முழுதாக அவர்களுடன் ஒத்துப் போகும், அவர்களுடன் இரண்டரக் கலக்கும் stage 'பங்கெடுத்துக் கொள்ளும்' stage. இப்படி இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வந்தாலும் அதற்கேற்றார் போல் இசைந்து வாழக்கூடியவர்கள். அதாவது, இன்று ஹாலோவீனுக்கு இனிப்பு வழங்குவது ஒரு பண்பாடாக இருக்கிறது, நாளை வேறேதாவதாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் தங்களை ஈசியாக adapt செய்து கொள்வர்."

"அப்பா, நீங்க பிள்ளை வாளுடம் மைசூருக்குச் சென்றுவிடுங்கள். தயவு செய்து அரங்க நாதர் மூர்த்திக்கு ஏந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எனக்குச் சில காரியங்கள் செய்யணும்." என்ற பொன்னி, பணிப்பெண்ணிடம் திரும்பி, "எனக்கு ஒரு குதிரை உடனே வேண்டும், தயார் செய்!" என்று கட்டளையிட்டாள்.

ஏன் ? எதுக்கு ? என்ன செய்யப் போகிறாய் ? முக்கியமா உன்னைப் போலுள்ள இளம் பெண்கள் தான் முதலில் ஓடி ஒளிய வேண்டும் !" என்று சொல்லிய அப்பா, பொன்னியின் கண்களைப் பார்த்து அமைதியானார், அவளின் அம்மாவின் கண்களில் தெரியும் அதே தீர்க்கம். இனி இவள் முடிவை மாற்றா ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும் முயற்சித்தார்.

"அப்பா, உலுக் கான் படைகளை ஒரு சில மணி நேரமாவது தாமதப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. முஸ்லீம் படைகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், அவர்கள் இந்து அரசர்களைப் போல அல்ல, மிருகங்கள் அவர்கள், அவர்கள் முதியவர்களைக்கூட விட்டு வைக்காமல் வெட்டிவிடுவர். யாராவது ஒருவர் அவர்களை நிறுத்தவேண்டும், யாராவது ஒருவர் இந்தப் புதுக்கஷ்டத்துக்கு ஏத்த மாதிரி இசைந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்"

"அதுக்கு நீ என்ன செய்யப் போகிறாய் ?"

"அதை என்னிடம் விட்டுவிடுங்கள், ஒரு க்ஷத்திரியப் பெண் என்ற முறையில் அவர்களை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயம் எனக்குள்ளது. உங்களுக்கு அரங்க நாதர் மூர்த்தியை மைசூருக்கு எடுத்துச் செல்ல போதிய நேரம் கிடைக்கும் படி நான் பார்த்துக் கொள்கிறேன், புறப்படுங்கள்.."


"இப்ப நீ எப்படி இந்த விஷயத்தைப் பார்த்துக்கப் போறன்னு பார்ப்போம்." அப்பா ஆரம்பித்தார். "உனக்கு இந்த ஓபெரா பிடிக்கும் இல்ல ?"

"ஆமா, ரொம்பப் பிடிக்கும்"

"ஒரு argument க்காக சுஹைல் ஓபெராவுக்கே போனது இல்ல, ஆனா அது என்னன்னு ஏதோ தெரியும் ன்னு வெச்சிக்குவோம். கல்யாணத்திற்கு அப்பறம், இதுல ஏதாவது ஒண்ணு நடக்கும், ஒண்ணு, எனக்குப் இஷ்டமில்லாத வேலையை நீயும் செய்யக் கூடாது ன்னு சொல்லி ஓபெராவுக்கு நீயும் போகக்கூடாது, and ஓபெரா ங்குறது கதோலிக்க மதம் சார்ந்த விஷயம்ன்னு சொல்லி தடுக்கலாம்"

"அப்பா, அது intolerance, எதையும் ஏத்துக்காதது, சுஹைல் அப்படி இல்ல"

"இரு, நான் இன்னும் முடிக்கல்ல, ரெண்டாவது, அவனுக்கு இஷ்டமில்லன்னாலும் நீ போயிட்டுவா ன்னு உன்னை அனுப்பலாம். அது ஏத்துக்குறது, அடுத்தது, மூணாவது ஆப்ஷன்ல, அவன் உன்னையும் குழந்தைகளையும் ஓபெரா ஹவுஸுல ட்ராப் செய்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுப்பான், ஆனால் கூட வர மாட்டான். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குறது. நாலாவது ஆப்ஷன்ல அவன் உன்னுடன் ஓபெராவுக்கு வருவான், அவனும் ஓபெரா பற்றிப் படித்து தெரிந்து கொண்டு அதைப்பற்றி கருத்துச் சொல்வான். இது தான் நான் சொன்ன "ஒண்ணாக் கலந்து விடுகிற, பங்கெடுத்துக்குற" best stage. நீ என் பொண்ணு உனக்கு எல்லாத்துலயும் best ஆப்ஷன் தான் வேணும்."

"ofcourse!"

"அதே மாதிரி சுஹைலுக்கு முஸ்லீம் பண்டிகையெல்லாம் கொண்டடும்னு ஆசையிருந்தால், அவனுடன் நீயும் போகனும்.!"

"அதனாலென்ன, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, அப்படித்தான் நீங்கள் எங்களை வளர்த்தீர்கள்"

அதே மாதிரி நீ கோவிலுக்குப் போகணும்னா அவன் உங்கூட வரணும்"

".........." அவள் அமைதியானாள்.

பக்கத்தில் இருந்த கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார் அப்பா.

"அப்பா, அவங்க மதப்படி, அவங்க மத்த மத கோவில்களுக்கெல்லாம் போக முடியாது..!"

"என்ன முட்டாள் தனம், ஜனாதிபதி அப்துல் கலாம் செய்யலைய்யா ?!"

"அது exception ப்பா, சாதாரண முஸ்லீம் செய்ய முடியாது"

"ஏன் முடியாது ?"

"Well, அது தேவையே இல்லையே, நான் தனியாக்கூட கோவிலுக்குப் போவேன்"

"அப்ப உனக்கு எல்லாத்துலயும், best option வேண்டாம். அவனுக்காக விட்டுக் கொடுக்க தயாராயிட்ட "

"அப்படி இல்லையே, "

"அப்படித்தான் இருக்கு"

"அதனால என்ன இப்ப"

"கல்யாணத்துக்கப்புறம் கொஞ்ச நாள் இப்படித் தனியாப் போவ, அப்பறம் போறதே நிறுத்திருவ, உனக்குப் பிறக்கிற குழந்தைகளும் இந்துவாக இருக்க மாட்டார்கள், அவர்களும் முஸ்லீம் ஆயிடுவார்கள். அது தான் நடக்கும்".

"அதுல என்ன தப்பு, எந்த மதமா இருந்தா என்ன ?"

"ஆமா, இதெல்லாம் natural தானேப்பா"

இங்கே அமேரிக்காவுல இனம் மாறிக் கல்யாணம் பண்ணிப் பிறந்த குழந்தைகளெல்லாம் பார்த்திருக்கிறியா ? அவர்கள் எந்த இனத்த்தை போல் இருப்பார்கள் ? அப்பாவா, இல்ல அம்மாவா ?"

"ரெண்டு பேர் மாதிரியும் தான் இருப்பாங்க"

"Nature ஒருத்தர் மாதிரித்தான் இருக்கணும் னு ஒண்ணும் கண்டிஷன் போடுறதில்ல. மசூதிலில தொழுகை பண்ணாத்தான் கடவுள் ஏத்துக்குமா? கோவில்ல பண்ணா ஏத்துக்காதா ?"

"அவங்க ரெண்டையும் பண்ணவேணாமே!" என்றாள்.

"Excellent, அவங்க எங்கெயும் போயி சாமி கும்பிட வேண்டாம், அவங்க பேஸ்பாலும் பாக்கவேணாம், ஓபெராவுக்கும் போகவேணாம், அவங்க பீஃபும் சாப்பிடவேணாம், போர்க்கும் சாப்பிடவேணாம். உன் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னாலயே அவங்களுக்கு கொடுக்குற ஆப்ஷன்ஸக் கட் பண்ணிட்ட, ரொம்ப நல்லது!"

"I am sorry ப்பா, அவரும் எல்லாத்துலயும் எங்கூட பங்கெடுத்துக்கணும், அதே மாதிரி நானும் அவர் கூட எல்லாத்துலயும் பங்கெடுத்துக்கணும்" என்று சொல்லிவிட்டு அவள் மனம் சுஹைலுடனான முதல் சந்திப்பிற்குச் சென்றது.

பாதை கரடுமுரடான பாதை, நன்கு குதிரை ஓட்டத்தெரிந்தவரால் தான் அந்த வழியாகச் செல்ல முடியும், பொன்னி அந்த வழியாக உலுக் கான் படைகள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

ஒரு சில மணி நேரத்தில் உலுக் கான் படைகள் இருக்கும் இடத்தை அடந்தாள், வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். நேராகச் சென்று அங்கே நின்றாள்,

"உங்கள் தலைவன் எங்கே" என்றாள்.

ஒரு பெண்ணிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுப் பழக்கமில்லாத போர் வீரர்கள் அவளின் பின் புறத்தைப் பிடித்து அவளை குதிரயின் மீதிருந்து இறக்குனர்.

"நான் உங்கள் தலைவருக்குச் சொந்தமான பொருள்" என்று சொன்னாள்.

உடனே அவர்கள் பயந்து தங்கள் பிடியை தழர்த்தி தலைவருக்கு செய்தி அனுப்பினர். உள்ளிருந்து அழைத்துவரச்சொல்லி உத்தரவு வந்தது.

"ஹலோ! " அப்பாவின் குரல்...சுஹைலுடனான முதல் சந்திப்பிலிருந்து திரும்பி வந்தாள்...

"நான் என்ன கேக்குறேன்ன்னா, அவரைக்கட்டிகிட்டா, உன் குழந்தைகளுக்கும் உனக்கும் இப்ப உனக்கு கிடைக்கிற best option கிடக்குமா, அவர் முழுசா ஒத்துப் போவரா, adapt பண்ணிக்குவாரா ?"


ஏம்பா, இந்த adaptation ல யே வந்து நிக்குறீங்க ?"

"adaptation தான் வாழ்க்கையே!, அப்படிப்பட்ட மன நிலை இருந்தால் தான் "நம்மளவிட வித்தியாசமாம் யோசிக்கிறவங்களோட நம்ம ஒத்துப் போக முடியும், இப்ப, பெண்கள் ஏன் ஆண்களைவிட அதிக நாள் வாழ்கிறார்கள் தெரியுமா ? அவர்கள் உடல் காலத்திற்கேற்றார் போல் இசைந்து கொடுக்கும். வயசுக்கு வர்ரப்ப ஒரு மாதிரி, பிள்ளை பெத்துக்குறப்ப ஒரு மாதிரி, வயசானப்பிறகு ஒரு மாதிரின்னு adapt செய்து கொள்ளும் பெண்ணின் உடல். எங்கே இந்த இசைந்து கொடுப்பதைப் பார்க்குறியோ அங்கே தான் தொடர்ச்சி இருக்கும், நான் இதை கிஷோர்-பாலு phenomenon ன்னு சொல்லுவேன்"

"கிஷோர்- என்னது?"

"பெரிய பெரிய பாடகரகள் எல்லாம் வந்து போயிட்டே தான் இருந்தார்கள். முகேஷ், ரஃபி, மன்னாடே ஹேமந்த் குமார்., ஆனா கிஷோர் குமார் மாதிரி யாருமே நிக்கல. ஏன் தெரியுமா, adaptation. அவர் அவரோட குரல ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்திப் பாடுவார். அதே மாதிரி தான் SPB யும். ஆனா SPB ஹீரோவுக்கு ஏத்த மாதிரி குரலை மாற்றுவது மட்டுமில்லாமல் பல மொழியிலயும் பாடுறார், அவர் சல்மான் கான் குரலுக்கேத்த மாதிரி மாடுலேட் செஞ்சு ஹிந்தில கூட பாடுறார், ஆனா, ஜெயச்சந்திரன், ஏசுதாஸ், பி.பீ. ஸ்ரீனிவாஸ் எல்லாம் இவர மாதிரி செய்ய முடியல."

"அவங்க adapt பண்ணிகிட்டாங்க, அதனால ஃபீல்டுல நின்னாங்க"
"எந்தச் சமுதாயம் இது மாதிரி மாறும் சூளலுக்கு adapt செஞ்சுக்குறதோ அது தான் பெரிய நாகரீகமா வளர்ச்சி அடையும்"
"இன்றைய சூளல்ல, மக்களாட்சிக்கு எந்த நாடு இசைகிறதுங்குறது தான் கேள்வி. எவ்வளவோ குறை நிறை இருக்கலாம் ஆனால் மக்களாட்சி இருந்தால் நல்லது. இன்னிக்கு நம்ம மேற்காசியாவில் பார்க்கும் பிரச்சனைக்கெல்லாம் காரணம் இஸ்லாம் கொடுத்த இந்த adaptation இல்லாத சமுதாயம் தங்களை புதிய உலகுடன் எப்போதும் பிரச்சனைக்குள்ளாக்கொள்கிறது என்பதனால் தான். கிறுத்தவத்திற்கு ஒரு renaissance தேவைப்பட்டது என்றால் யூதத்திற்கு ஒரு ஹோலோகாஸ்ட். இஸ்லாமுக்கு இன்னும் அந்த அறிவு வரவில்லை. இந்த அடிப்படை தான் தனி மனிதனுக்கும் ..."
"கல்யாணம்...அதப்பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருக்கோம் நம்ம, நீங்க தான் எதுலெயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டீங்க.."

"ம்ம்ம், கல்யாணம், இந்த விஷயத்துல தான் முஸ்லீம்கள் கொஞ்சம் தெளிவா நடந்துக்குறாங்க." அப்பா தொடர்ந்தார். " முக்கியமா இஸ்லாமியப் பெண்களை வெளியில் கல்யாணம் செய்துகொள்ள இஸ்லாத்தில் தடை உள்ளது, இல்லைன்னா கட்டிக்கப் போற பையன் இஸ்லாத்துக்கு மாறனும், அதே தடையை ஆண்கள் மீது விதிப்பதில்லை. ஏன்னா, பெண்கள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் மெஷின்கள் என்ற எண்ணம் தான் காரணம். எந்த நாட்டுல பார்த்தாலும், இப்படித்தான் இருக்கும், முஸ்லீம் ஆண்கள் தான் வேறு நாட்டுப் பெண்களை மணமுடிப்பர். ஆனால் முஸ்லீம் பெண்கள் வேறு நாட்டு ஆண்களை மணக்க மாட்டார்கள். இந்தியாவில் நடந்த 600 ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியில் ஒரு முகலாய மன்னனும் தனது பெண்ணை ஒரு இந்து அரசனுக்கு மண முடிக்கவில்லை. அந்த காலத்துல அடிக்கடி போருக்குச் செல்லும் அரச குடும்பங்கள் திருமணம் மூலம் ஒன்றிணைவது நடந்துவந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மாதிரி. கிரேக்கர்கள், ஹுன், என்று யாரெல்லாம் இந்தியாவுக்குள் படை எடுத்துவந்தார்களோ எல்லோரும் அப்படிச் செய்தனர். கிரேக்க அரசர்கள் இந்திய அரச பரம்பரைப் பெண்களையும், அதே போல் இந்திய அரசர்கள் கிரேக்கப் பெண்களையும் மணமுடித்தனர். ஆனால் இதெல்லாம் இஸ்லாமியர் வந்த பிறகு நடக்கவில்லை. இந்து ராஜாக்கள் தான் பெண்களை முகலாய மன்னர்களுக்குக் கொடுத்தனர். பதிலுக்கு அவர்கள் வீட்டில் பெண் எடுக்க முடியவில்லை. கொடுக்கல் இருந்தால் வாங்கலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்சனை தான். இஸ்லாமியர் இருக்கும் எல்லா நாடுகளிலும் இதே பிரச்சனை தான். அவர்கள் கொடுக்க இசையாததால் வரும் பிரச்சனை இது. பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஐரோப்பா என்று எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைக்குள்ளாகின்றனர்."

"சுஹைல் அப்படித்தான் இருப்பான்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க?"

"இப்ப அப்படி இல்லாம இருக்கலாம். ஆனா, வயசாக ஆக அப்படி மாறலாமில்லையா ? இங்கே, இங்கிலாந்து, நெதர் லாந்து, ஆஸ்திரேலியா ல எல்லாம் முஸ்லீம் ஆண்கள் வெள்ளை இனப்பெண்ணை மண முடித்துப் பெண் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் திடீர் என்று அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு, சவுதி, பாகிஸ்தான் னு காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் நல்ல லிபரலாகத்தான் இருந்தார்கள், சின்ன வயதில் ஆனா ஒரு 45 ஐ த்தாண்டும் போது அடிப்படை வாதிகள் ஆயிடுறாங்க, இதை, Midlife crisis ன்னு சொல்லுவாங்க. இந்த 45 வயசுக்கப்பறம் இருக்குற காலத்துல அவங்க அடி மனசுல என்னவா இருந்தாங்களோ அப்படி மாறிவிடுவார்கள். சிலர், வேலை, வேலை என்று workaholic ஆயிடுவார்கள், சிலர் சின்ன வயதுப் பெண்கள் பின்னாடி அலைவார்கள். இதெல்லாம் எந்தச் சமுதாயம் adaptation செய்யத் தெரியாமல் இருக்கிறதோ அந்தச் சமுதாயத்து ஆண்கள் செய்யும் வேலை. எந்தச் சமுதாயத்தில் இசைந்துகொடுத்துப் போதல் ஒரு கொள்கையாக இருக்கோ அங்கே, midlife crisis ன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அவங்களுக்கு, பாலக் கொதிக்க வைக்கணும்னா பாலைக் கொதிக்கவைப்பார்கள், குப்பையை சுத்தம் செய்யணும்னு தோனினா அதைச் செய்வார்கள். குப்பைன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது...!"

"அப்பா...! இப்ப அதவிட முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கோம்....அத அப்பறம் பாத்துக்கலாம்"

சரி, நான் சொல்ற மாதிரி adapt பண்ணிக்கத் தெரிஞ்ச ஆளாப்பாரு. மத்ததெல்லாம் தானா வந்துரும்!"

"சுஹைல் அப்படி எல்லாம் இருக்கமாட்டான் பா! ஏன் நீங்க கவலைப்படறீங்க?"

அவன் நல்லவனாவே இருக்கட்டும், ஆனா, நீ அதை சரியான்னு பாத்துக்க. ஒரு சோதனை பண்ணிப்பாரு..!"

"இது தான் எனக்குச் சோதனைக்காலம்." கணவனை இழந்த பொன்னி மனதில் நினைத்துக் கொண்டே உலுக் கான் கூடாரத்தில் நுழைந்தாள். அவள் ஆடைகளை விலக்கிவிட்டிருந்தாள்.

உலுக் கான் கண்களாலேயே அவளை கற்பழித்துக்கொண்டே, "பெண்ணே, என்னவேண்டும்?"

"என் கணவனை உங்கள் படை கொன்றுவிட்டது ?"

உலுக் கான் கூடாரத்துக் காவலாளிகள் உஷார் ஆயினர். ஏதாவது கொலை முயற்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில். "எங்கள் சட்டத்தின் படி, வெற்றி கொண்டவர்கள் என்னை இந்த இரவுக்குள் ஏற்றுக் கொள்ளவேண்டும், இல்லையென்றால் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று விடவேண்டும், எனக்கு அப்படிப் போக இஷ்டமில்லை"

"இந்த நாடைப் புரிந்துகொள்ளவே முடியல்லையே!" தாடியைத் தடவிக்கொண்ட உலுக் கான் மனதில் கேள்வி எழுந்தது. "எங்கிருதாவது ஒரு 40 மைல் தள்ளிப்போனால் புது சட்டம், புது விதி, சில பெண்கள் அவர்கள் கணவனின் சிதையில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். சிலர் போர் களத்திற்கு வந்து இறந்த கணவனின் ஆயுதம் எடுத்தே சண்டைக்கு வருகிறார்கள்..இன்னும் சிலர் இப்படி!" பாரசீகத்திலிருந்து அல்ஜீரியா வரை ஒரே கடவுளை வணங்கி ஒரே மொழி பேசும் மக்களை அறிந்த உலுக் கானுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.

"இன்று இரவு போருக்குச் செல்ல வேண்டும், ஆக நீ காத்திருக்கவேண்டும்!" அவன் கண்கள் அவள் இடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"இன்று இரவு இல்லையென்றால் நீங்கள் என்னை வலுக்கட்டாயமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும், உங்கள் போரை சற்று தாமதப்படுத்தினால் நான் உங்களுடையவளாகிவிடுவேன் இப்போதே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்"

"இந்த முடிவு தான் உன் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவு" என்றார் தந்தை. "உனக்கு நல்லது எதுவோ அதை நீ தான் செய்யணும், நான் வழி தான் சொல்ல முடியும். நூற்றாண்டுகள் இசைந்து கொடுத்து வாழும் கலாச்சாரத்தில் பிறந்த உனக்கு எப்போதுமே பிரச்சனைக்குள்ளாகும் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறந்தவனை கல்யாணம் செய்துகொள்ள முடியுமா ?"

"அப்பா, நான் என் இந்துக் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துத்தான் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று என் நினைக்கிறீர்கள் ?"

"இந்துக்கலாச்சார, முஸ்லீம் கலாச்சார, அமேரிக்க கலாச்சாரம் என்றெல்லாம் இல்லை. இரண்டே விதமான கலாச்சாரம் தான் இருக்கிறது. சரியான கலாச்சாரம், தவறான கலாச்சாரம். முதலாவது இசைந்து வாழக்கூடியது, இரண்டாவது இசைந்து கொடுக்கத் தெரியாதது. அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொல்வாது தவறாக கலாச்சாரம். வேற்று மதப் பெண்களை வழைத்துப்போட்டுக் கொள்வதும் அதே வேளையில் தன்னினப் பெண்களை வெளியில் போகத் தடை விதிப்பதும் தவறான கலாச்சாரம். முஸ்லீம்கள் அப்படி இருப்பதனால் இது முஸ்லீம் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. நீ கேக்கவேண்டியது என்னனா, சுஹைல் சரியான கலாச்சாரத்தை உடையவனா ? என்ற கேள்வி தான்"

"நான் இப்பப் போகணும் பா, நிறையவே பேசிட்டோம்!"

"அவனப்பாக்கப் போறியா..."

"ஆமா...இன்னும் ஒரு மணி நேரத்துல.."

"சு" என்றார்...

"என்ன ?"

சமஸ்கிருதத்தில் "சு" என்றால் சுபம் என்பதற்கான வேர்ச்சொல், "நல்ல" என்ற பொருள் வரும். சுப்பிரபாத என்றால் நல்ல காலைப்பொழுது சுபாஷா என்றால் நல்ல வார்த்தைகள், அதே மாதிரி சுஹைலும் இருக்கட்டும்! அவரைப்பற்றிய என் பயமெல்லாம் தவறாகட்டும், அவர் ஒன்றும் 100% adapt பண்ணிக்கிற ஆளாக்கூட இருக்கவேணாம், நாம யாரும் அப்படி இல்ல. கொஞ்சம் திறந்த மனது இருந்தால் போதும்...just in case..!" தந்தை அங்கிருந்த chest ல் இருந்த draw வைத்திறந்து அதைக் கொடுத்தார்...

"இது எனக்குத் தேவைப்படாதுப்பா.."

"இருக்கட்டும் வெச்சுக்கோ, எதுக்கும்...."

கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்தாள். "இந்த முன் விளையாட்டை ரொம்ப நேரம் வெச்சிக்கணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டாள் பொன்னி. பிள்ளைவாளுக்கு ஸ்ரீரங்கத்துச் கிருஷ்ணர் மூர்த்தியை மைசூருக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நேரம் கொடுக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

"அடுத்ததா என்ன பண்ணப்போறோம் ?" சுஹைல் கேட்டான். அப்போது தான் காரின் பின் சீட்டில் ஒரு முத்தம் கொடுக்கும் படலம் முடிந்திருந்தது. அவள் உடனே பதில் சொல்லவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள், பார்கிங் லாட்டில் கடைசியாக இருந்தது கார்.

"சீக்கிரமே.." என்றாள் சிறிது நேரம் கழித்து.

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர். படு பயங்கர traffic ரோட்டில்.

"ஏதாவது Accident நடந்திருக்கணும். நம்ம பார்ட்டிக்கு கரெக்ட் டைமுக்குப் போகணும்னா வேகமாப் போகணும்னு நினைக்கிறேன்."

"சொல்ல மறந்துட்டேன், என் கசின் ரெண்டு பேரை வரச்சொல்லிருக்கேன் பார்ட்டிக்கு, சுபோத், பிரணை. பிரச்சனையில்லையே?"

"ஓ, sure, தாரளமா வரட்டும், எந்தப் பிரச்சனையுமில்ல"

"நீ ஏன் உன் கசின் ஷமீமை கூப்பிடக்கூடாது. அவ நல்லப் பொண்ணு actually, பிரணைக்கு ரொம்பப் பிடிச்சப் பொண்ணு. அவளுக்கும் பிரணையைப் பிடிச்சிருக்கு போலருக்கு. போன get together ல அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குறத நீ பாத்திருக்கணும்."

"Damn, traffic" என்று ஸ்டியரிங் வீல் மீது கையால் இடித்தான். அவள் கேட்டதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை.

"அப்ப, ஃபோன் பண்ணிக் கூப்பிடறியா ?" அவள் கேட்டாள்..

"யாருக்கு ஃபோன் போட்டு யாரைக் கூப்பிடுறது "

"ஷமீம்! நான் சொன்னதக் கேட்டியா இல்லையா?"

"ஓ, அதுவா, அது நடக்காது..thats not going to work out"

"ஏன் ?"

"ஆமா அது அப்படித்தான் விடு, அப்பறம் ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க, அதுவும் சின்ன அபார்ட்மெண்ட் தான்"

"சரி, நாம ஒரு இடத்துக்குப் போகணும், வர்ர ரைட்ல கட் பண்ணிக்கிறியா ?"

"Sure, எங்கே?"

"கோயிலுக்கு"

"நான் உன்ன ட்ராப் பண்ணிடறேன்"

"நீ என்ன ட்ராப் பண்ணவேணாம், நாம சேர்ந்து போகணும்"

"என்ன சொல்ற ?"

"நீ எங்கூட வரணும்னு சொல்றேன்..! நான் உங்கூட கடைசி வரை வரணும்னு எதிர்ப்பார்க்குறல்ல ?"

"ஆனா என்னால அது முடியாது"

"அது தான் ஏன் ?"

"நீ ஏன் இப்படி behave பண்ற "

"வண்டியை நிறுத்து.." பக்கத்து மாலின் பார்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தினான் சுஹைல்.

"ஏன் உள்ள வர மாட்டேன்னு சொல்ற? நீ மசூதிக்குப் போற தானே ?"

"ஆமா, ஆனா நான் ஏன் கோவிலுக்கு வரணும் ? நீ என்ன பண்ணனுமோ அதை நீ பண்ணிக்க உனக்கு உரிமையிருக்கு"

"சுஹைல்" காரின் கதவைத் திறந்து வெளியேறியபடி தொடர்ந்தாள் " நான் உன்னப் பாக்க விரும்பல"

"என்ன சொல்ற...? ஏன் ?"

"நான் விரும்பல அவ்வளவுதான்.." கொஞ்ச நேரத்திற்கு முன்பு சுஹைல் பேசிய அதே தோறணையில் இந்தப் பதில் அவளிடமிருந்து வந்தது.

"நீங்க என்ன, அவ்வளவு தானா ? " உலுக் கான் தன் உடைகளை சரி செய்துகொண்டிருந்தான்.

"நான் இப்ப போகணும், ஸ்ரீரங்கத்து சிலையில் ரெண்டு ரத்தினக்கற்கள் இருக்கிறதாம், நீ இங்கேயே இரு, நான் அதை உடைத்து எடுத்து வருகிறேன். அதை வைத்து நீ பிழைத்துக் கொள்ளலாம்"

ஒரு வெற்றிப் புன்னகை தான் உலுக் கானுக்கு அவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

"அது இன்னேரம் மைசூருக்குப் போயிருக்கும், அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சில மணி நேரம் கிடைத்துவிட்டது" என்றாள்.

"அடித் தே$%$%, என்னை ஏமாற்றிவிட்டாயா ?" உலுக் கானின் முகம் கோபத்தில் சிவந்தது.

"ஸ்ரீரங்கத்துப் பெண்கள் உன் இந்த முகத்தைப் பார்க்க காசு கொடுப்பார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் பொன்னி.

"உன்ன என்ன செய்கிறேன் பார்..."

"என் கணவரை கொன்று விட்டார்கள் அதைவிட கொடிய தண்டனை வேறேது. உன்னால் என்ன செய்ய முடியும் ?"

"யாரங்கே, இவள் உங்களுக்குத்தான்...என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்!, சீக்கிரம் குதிரைகளைத் தயார் செய்யுங்கள், கோவிலைப் பிடிக்கவேண்டும்"

எட்டு காவலாளிகள் அவளை நெருங்கிவந்தனர, பசியால் தவிக்கும் ஓனாய்க்கூட்டம் போல.

"கிருஷ்ணா, திரௌபதியின் மானத்தைக் காத்தது போல என்னையும் காக்க மாட்டாயா " என்று எண்ணிக்கொண்டே தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கடித்து அதிலிருந்த வைரத்தை முழுங்கினாள். வன்புணர்ச்சி நடக்கும் முன்னரே அவள் அவளது கணவனை அடைந்தாள்.

"நில்லு" சுஹைல் கத்தினான்.

"முடியாது"...அவள் நடந்து கொண்டிருந்தாள்.

"நீ இப்படிப்பண்ண முடியாது"

"பாத்துகிட்டே இரு.."

"நில்லுடீ" கையைப் பிடித்து இழுத்தான்...

அவள் உதரிவிட்டு வேகமாக நடந்தாள். அதைப் பார்த்து பார்க்கிங் லாட்டில் யாரோ 911 க்கு ஃபோன் செய்தனர்.

"வாடீன்னா..."

சடார் எனத் திரும்பி டேசரைக் காண்பித்தாள்.

"நீ செய்ய மாட்ட!" என்றான்

அவனது நெஞ்சில் வைத்து fire செய்தாள், ஐம்பதாயிரம் வோல்டேஜ் அவன் மூளையையும், உடலையும் 15 நிமிடத்திற்குப் பிரித்துவிட்டது. ஒரு வினாடியில் மூர்ச்சையாய் கீழே விழுந்தான். 3 நிமிடத்தில் போலீஸ் அங்கே வந்தது.

அவள் பக்கத்திலிருந்த pay phone ல் அப்பாவை அழைத்தாள். அவர் வந்து இவளை பிக்கப் செய்துகொண்டு இருவரும் வீடு திரும்பினர்.

(இது ஒரு சுறுக்கப்பட்ட கதை. மூலம் இங்கே)

February 24, 2007

நான் இங்கேயே இருக்கிறேன்

'நான் யார் என்று இந்த வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது?'

'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'

'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'

'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'

தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.

'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'

'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'

- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.

இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.

'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.

ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.

நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.

தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.

தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.

அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.

'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'

இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.

'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.

அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.

'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'

சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.

'என் கை, என் கால் என்று சொல்வது...'

'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'

கையைப் பார்த்துக் கொண்டார்.

'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'

'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'

'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'

வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.

மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.

அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.

'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'

வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.



வெளியே ஏகக் கலவரம்.

தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.

'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.

வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.

'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.

முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.

''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.

"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.

"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"

வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.

"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"

பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.

தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.

அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.

விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.

ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.

வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.

"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"

"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.

"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.

"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.

எங்கும் நிசப்தம்.

தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.

உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.

(நிறைந்தது)

நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.

யார் நீ ? எங்கிருக்கிறாய் ?

அந்த ஊரின் பெயர் அழகாபுரி. பெயருக்கேற்ப மிக அழகான ஊரது. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலுமாய் வளம் செழிக்க மக்கள் குறையொன்றும் இல்லாமல் வாழ்ந்திருந்தனர்.

இயற்கை குறை வைக்காவிட்டாலும் மனிதன் எதையாவது உருவாக்கிக் கொள்வது வழக்கம் அல்லவா? அந்த ஊரிலும் அப்படி ஓர் அக்கப்போர் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடையே ஒற்றுமை குலைந்தது.

ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்று இரு குழுக்கள் ஏற்பட்டு அந்த ஊரின் நிம்மதி பறி போனது. இரண்டு பக்கங்களிலும் மூடர்களும், அயோக்கியர்களும், சிந்தனாவாதிகளும் இருந்தனர். ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை.

ஆனால் நாத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களும் அயோக்கியர்களும் சும்மா இருக்காமல் ஊரை அடிக்கடி கலகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிந்தனாவாதிகளும் பல நூதனமான கருத்தாக்கங்களை உண்டாக்கிக் கலகம் விளைவிக்கக் காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

ஆனால் பெருவாரி ஆத்திக மக்கள் அவர்கள் பக்கம் கூட போவது கிடையாது. அவர்களை ஆத்திகர்களாக மாற்ற முயற்சி செய்யவும் இல்லை. ஆனாலும் நாத்திகர்கள் தாங்களாகவே ஓர் எதிரியைக் கற்பித்துக் கொண்டு ரகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகமாகி வந்தது.

அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த ஊரின் தலைவர் இந்த நாத்திகவாதிகளின் அட்டகாசங்களின் மூலம் பதவியைப் பிடித்தவர். ஆதலால் இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் காணாதது போல இருந்து விடுவார்.

'கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது நாங்கள்தான்' என்று கூறிக் கொண்டு மக்களை மிரட்டத் தொடங்கினர் நாத்திகர்கள். தலைவர் உதவியால் கோவில் நிர்வாகிகளாகவும் மற்றும் கோவில் சம்பந்தமான பொதுநிதியைப் பராமரிக்கும் குழுவிலும் அவர்கள் ஊடுருவி இருந்தனர். ஆண்டவனுக்கு எதற்கு செல்வம், ஏழைகளுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றித் தாங்கள் செல்வந்தர்களாக மாறி வந்தார்கள். திருவிழாக்களில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை மானபங்கப் படுத்திவிட்டு 'ஆண்டவன் வந்து உங்களைக் காப்பாற்றுவான் பாருங்கள்' என்று கேலியும் பேசினர்.

ஆத்திகர்கர்களோ, ஆண்டவன் உண்மையிலேயே ஏதாவது அவதாரம் செய்து தங்களைக் காப்பாற்ற வரமாட்டானா என்று ஏங்கி வேண்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாற்போல் அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்து சேர்ந்தார். ஆத்திகர்கள் அவரைத் தங்கள் துன்பம் துடைக்க ஆண்டவனே நேரில் வந்ததாய்க் கருதினர். எல்லோரும் அவரிடம் நாத்திகக் கோஷ்டியின் அட்டகாசத்தை எல்லாம் ஒரு பாட்டம் சொல்லி அழுதனர். அற்புதம் ஏதாவது நிகழ்த்தியாவது தங்களைக் காக்க வேண்டினர்.

அந்தச் சித்தர் சிரித்தார்.

'நாத்திகக் கோஷ்டியில் இருக்கும் உண்மையான அறிஞர்களையும் சிந்தனையாளரையும் வாதத்தால் திருத்திவிட முயற்சி செய்கிறேன். அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அயோக்கியர்களைத் திருத்துகிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. பார்ப்போம். நீங்கள் போய் அவர்களை அழைத்து வாருங்கள்' என்றார்.

நாத்திகர் பக்கமிருந்து அறிஞர்களும் சிந்தனையாளரும், இந்தச் சித்தரை வாதத்தில் வென்று அவரை இந்த ஊரை விட்டே துரத்துவோம் என்ற ஆவலில் வாதம் செய்ய முன்வந்தனர்.

மலையடிவாரத்திலுள்ள குகை ஒன்றின் வாசலில் கூட்டம் நடந்தது. தன்னைப் பெரிய சிந்தனையாளனாகக் காட்டிக் கொண்ட தலைவரும் கலந்து கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. நாத்திகக் கோஷ்டியின் பல விதண்டாவாதங்களுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்தார் சித்தர்.

நேரம் போகப்போக விதண்டாவாதம்தான் வளர்ந்ததே ஒழிய நாத்திகர் தரப்பு எதையும் ஏற்பதாயில்லை. கடவுளையும் அவருடைய சக்தியையும் நேரில் கண்டால்தான் அடங்குவார்கள் போலத் தோன்றியது.

சித்தரும் கடைசியில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் குகை வாயிலில் ஒரு கல்லை நட்டு ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாரணம் செய்து இதுதான் கடவுள் என்று சொல்லி நாத்திகவாதிகளின் கேள்விகளுக்குக் கடவுளே இனி பதில் சொல்வார் என்றார்.

நாத்திகவாதிகள் சிரித்தனர். கல் எப்படித் தங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என்று கேலி பேசினர். சிலர் சித்தரைத் திட்டவும் செய்தனர், தங்களைக் கேவலப் படுத்துகிறார் என்று. ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்போம் என்று தலைவர் சம்மதிக்க, அதற்குப் பதில் வராவிட்டால் சித்தர் ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.

சித்தர் சம்மதம் என்றார்.

நல்ல குரல்வளம் கொண்ட தலைவர், நாத்திகர் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முன்வந்தார்.

எங்கும் நிசப்தம்.

தலைவர் கல்லின் முன்னால் போய் நின்று உரக்கக் கேட்டார்.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'



யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லிடமிருந்து பதில் வந்தது. அதுவும் ஒரு கேள்வியாக.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'

அது கடவுளே கேட்டாரா அல்லது வெறும் எதிரொலியா என்று யாருக்கும் புரியவில்லை. தலைவரின் அல்லக்கைகள் இது ஏமாற்று வேலை என்று கூவ ஆரம்பித்தன. ஆனால் தலைவர் மட்டும் சற்று அயர்ந்து போயிருந்தார். அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அமைதியாய் நின்றிருந்தார். அருகிலிருந்து
கேட்ட அவர் காதுகளில், ஒலித்த குரல் சித்தர் குரல் போலவும் தோன்றியது.

திரும்பிப் பார்த்தார்.

பின்னால் தொலைவில் அவர் கண்மூடிக் கைகூப்பி நின்றிருப்பது தெரிந்தது.

கண்திறந்த அந்தச் சித்தர் தலைவரை அருகில் அழைத்து அவர் தோள்மேல் கைபோட்டு குகைக்குள் அழைத்துப் போனார்.

'வா என் செல்லமே!' என்று அவர் வாஞ்சையாய் அழைத்தது தந்தையையே பார்த்து வளர்ந்திராத தலைவருக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே போனார். உள்ளே போனதும் அவரை அருகில் அமர்த்தி அந்தச் சித்தர் சொன்னார். 'குழந்தாய், கல்லின் மூலம் கடவுள் எப்படிப் பேசினார், அது என் குரலா, கடவுளின் குரலா, அல்லது வெறும் எதிரொலியா என்று ஆராய்ச்சி செய்யாதே. அது வீண்வேலை. ஆனால் திருப்பிக் கேட்ட அந்தக் கேள்வியை மட்டும் மனதில் வை!

உண்மையில் நீ யார் எங்கிருக்கிறாய் என்று தேடிக் கண்டுபிடி. கடவுளைச் சுலபமாய்க் கண்டுபிடிக்க அது ஒன்றே வழி' என்று சொல்லி, தலைவர் கையில் ஒரு பெரிய வெங்காயத்தைக் கொடுத்தார்.

ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு ஆச்சரியம்.


தொடரும்..

"மு"ம்மதமும் சம்மதம் 2

இதற்கு முன் ஜெரூசலம் பற்றி மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன்.

ஜெரூசலம்
ஜெரூசலம்
மும்மதமும் சம்மதம்

இந்தப்பதிவில் முன்னரே சொல்லியிருந்த church of holy sepulchre பற்றியும் அதன் படங்களும்.

மன்னன் constantine ன் தாயார் ஹெலெனா பிஷம் மகாரியஸிடமிருந்து தெரிந்துகொண்டதற்கிணங்க, கொல்கொத்தா (Golgotha) எனப்படும் ஏசு சிலுவையில் அறைந்து நிறுத்தப்பட்ட இடமும், ஏசுவின் உடல் புதைக்கப் பட்ட இடமும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்ற விஷயத்தை 325 ACE ல் அறிந்தார். கான்ஸ்டாண்டீன் உடனே அகழ்வாராய்ச்சியைத் துவங்கி அதில் கண்டெடுக்கப் பட்ட சிதிலத்தின் மீது தேவாலயம் எழுப்பினார். இந்த முதல் தேவாலயம் 614 ACE பாரசீக மன்னர் படையெடுத்து வந்தபோது அழிக்கப்பட்டது. பின்னர் இதே இடத்தில் கட்டப் பட்ட தேவாலயம் 1009 ACE ல் கலீபா அல் ஹகீம் பி அமர் அல்லாஹ் வால் அழிக்கப் பட்டது, பின்னர் பைசாந்தியர்களால் மறுமுறை சீரமைத்துக் கட்டப் பட்டு இன்று நிற்கிறது.

இந்தத் தேவாலயம் ஆறு கிறுத்தவ மதப்பிறிவினர்களால் ஆழப்பட்டுவரும் இடம். The Greek orthodox, Roman catholic, Armenian, Coptic, syrian and Abyssinian congregation.

உள்ளே நுளைந்த உடன் தெரிவது The stone of unction.

இந்தக்கல்லில் தான் ஏசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கி வைத்தார்களாம்.

அடுத்தது, Chappel of Cruxifixion மற்றும் Cavalry.

அங்குதான் ஏசு கிறிஸ்துவின் சிலுவை நிறுத்தப்பட்டதாம்.


அடுத்தது ஏசுவின் கல்லறை.



(ஏசுவின் கல்லறை மற்றும் Dome of rock படம் தேடிப்பார்த்ததில் கிடைக்காததால் கூகிளிடமிருந்து பெற்று பதிகிறேன்)

மற்ற படங்கள் என் கேமிரா படங்களே.

February 22, 2007

"மு"ம்மதமும் சம்மதம்

ஜெரூசலம்.

அக்கேடியன் மொழியில் உருஷலம் என்றும், பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் "ஷலெம்" என்றழைக்கப்படும் இடம், 1700 BCE (before common era) ல் ஆபிரஹாம் முதன் முதலில் உர் என்ற இடத்திலிருந்து அவர் மனைவி மக்களுடன் வந்த இடம் இந்த ஷலெம். பின்னர் வரும் பழைய/புதிய ஏற்பாட்டின் கதைகளை எழுதி போரடிக்க நான் விரும்பவில்லை.

ஜெரூசலம் ஃபிலிஸ்தீனியர்கள் எனப்படுபவர்கள் எகிப்திய ஃபாரோவின் ஆஸ்தான மக்களாக வாழ்ந்துகொண்டிருந்த இடமாக மாறியிருந்தது மோசஸ் தன்னின மக்களை அழைத்து "பாலும் தேனும்" வடியும் நிலத்திற்கு செங்கடலைப்பிழந்து வந்த போது. பின்னர் போர்கள், சண்டைகள், அமைதிக் காலங்கள் என்று அன்றிலிருந்தே ஒரு பிரச்சனைக்குறிய பூமியாகவே இருந்துவந்துள்ளது இந்த "இறைவனின் அருள் பெற்ற" இடம். இந்த இடத்தைத் தான் யூத மன்னர்கள் தங்கள் நாட்டின் தலமை நகராகக் கொண்டுச் செயல் படுத்தியுள்ளனர். இன்றும் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் தான் (டெல் அவீவ் அல்ல!).

ஓமாரின் மஸூதி என்றழைக்கப்படும் இந்த Dome of Rock, ஜெரூசலத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்காகச் சிந்தப் பட்ட ரத்தம் உலகில் நடந்த எல்லாப் படுகொலைகளைக் கணக்கில் கொண்டாலும் குறைவாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். பழைய ஏற்பாடு காலம் முதலே இந்த இடம் சர்ச்சைக்குறிய இடமாகவே இருந்துவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்த dome of rock பகுதியைச் சுற்றி அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டு சில கட்டிடங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதன் உள்ளே செல்ல முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை. ஜுமா நாள் என்பதால்.



இங்கிருந்து தான் முகம்மது புராக் வாகனம் ஏறி வானுலகம் சென்றதாக இஸ்லாமியர் நம்புகின்றனர்.

கிறுத்தவமும், இஸ்லாமும் போட்டி போட்டு ஜெரூசலத்தைப் பிடித்து இந்த இடத்தின் மீது தங்கள் கோவிலைக் கட்ட நினைத்தனர். இஸ்லாமிய கலீபா ஓமர் கட்டிய இந்த சின்னம், கிறுத்தவர் ஆட்சியின் போது தேவாலயமாக மாற்றப்பட்டு இருந்தது. பின்னர் சலாதீன் என்ற மன்னன் அதை முஸ்லீம்களுக்கே திருப்பிக் கொடுத்தான்.

இந்த இடத்தில் தான் ஆப்ரஹாம் தன் மகன் ஐசக்கை பலி கொடுக்கச் சொல்லிக் கட்டளை வந்ததாம் கடவுளிடமிருந்து, பின்னர் இந்த இடத்தில் தான் யூதக் கோவில்கள் கட்டப் பட்டு பின்னர் போர்கள் நடந்து இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டும் உள்ளது.

இந்த மசூதியின் மேற்குச் சுவர் பகுதி பழைய யூதர் கோவிலின் எஞ்சியிருக்கும் பகுதி என்று சொல்லி அதைத் தான் யூதர்களின் மிக முக்கிய மற்றும் ஒரே புனித இடமாகக் கருதப்பட்டுவருகிறது.



இந்தச் சுவரின் அந்தப் பக்கத்தில் தான் மேலே சுட்டியுள்ள மசூதி உள்ளது.

ஜெரூசலம், நகரமே யூதர்கள் பகுதி, இஸ்லாமியர் வாழும் பகுதி, மற்றும் கிறுத்தவர் வாழும் பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

ஏசு தன் சிலுவையை சுமந்து சென்ற Via dolarosa என்ற பகுதியில் எங்கெல்லாம் அவர் கால் தடுக்கி விழுந்தாரோ, எங்கெல்லாம் அவர் சுமை தாங்காமல் விழுந்தாரோ அங்கெல்லாம் தேவாலயம் கட்டிவைத்துள்ளனர். (தடுக்கிவிழுந்தால் தேவாலயம் தான்!!) அந்தப் பாதை வந்து முடியும் இடம், church of holy sepulchre. இங்கு தான் ஏசு சிலுவையில் அரையப்பட்டு இறந்தார். அவர் கல்லரை இந்த தேவாலயத்தில் உள்ளதாக கிறுத்தவர்கள் நம்புகிறார்கள். (அடுத்த பகுதியில் இந்தத் தேவாலயத்தின் உள்பகுதிப் படங்கள் வரும்)


சும்மா தலைப்பு மட்டும் தான் secularized தலைப்பு. உண்மையில் மதக்கலவரம் அடிக்கடி வரும். ஏதாவது இஸ்ரேல் பிரச்சனை செய்தால் உடனே, இந்த ஊரில் தான் மதக்கலவரம் வெடிக்கும்.

வேத காலத்து Pi

பண்டைகாலத்து எகிப்தியர்கள் pi ன் அறுமை தெரிந்து அதனை அவர்கள் கணிதத்தில் பயன் படுத்தியதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. கிரேக்கர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தியதாக வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Place value system எனப்படும் decimal system பத்து என்ற எண்ணை அடிப்படை எண்ணாக வைத்து எழுதப்படும் எண்களின் முறையை கண்டுபிடித்துப் பயன் படுத்திய இந்தியர்கள் pi ன் மகத்துவம் அறியாமல் இருந்திருப்பார்களா ?

गोपिभाग्यमधुव्रात - श्रुग्डिशोदधिसन्धिग ।।
खलजीवितखाताव गलहालारसँधर ।।

கோபி பாக்ய மதுவ்ரத ஸ்ரீங்கிசொ ததி சந்திக
கல ஜீவித காதாவ கால ஹாலா ரசந்தார.

இதன் அர்த்தம் ஆங்கிலத்தில்

O Lord anointed with the yogurt of the milkmaids' worship (Krishna), O savior of the fallen, O master of Shiva, please protect me

சமஸ்கிருத "அனுஸ்துப்" இது. இதில் pi யை பத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணைக் குறிப்பிடுகிறார்களாம். எப்படி ?

எண் கணிதம் போல் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படும் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களுக்கு உரிய எண்களைக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர். அதன் படி இதில் வரும் எழுத்துக்களுக்கு எண்களை சரியாகப் போட்டால் கிடைப்பது,

pi/10 = 0.31415926535897932384626433832792

இது முற்றிலும் co incidental ஆக இருக்க probablity யை கணித்தால் 1/10^32 அதாவது 10 க்குப்பிறகு 32 பூஜ்யங்கள் அதில் ஒரு வாய்ப்பு உள்ளது! நிச்சயம் இது எதேச்சையான ஒன்று அல்ல.

இது போலுள்ள பல விஷயங்கள் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று திட்டி ஒதுக்கிவைக்காமல் தேடினாலே கிடைக்கும்.
என்ன, அதுவும் நம் மொழிதான், நம் சரித்திரப் பெருமை சொல்லும் மொழி என்ற சுய கவுரவத்துடன் அதனைப் படிக்கவேண்டும். இதெல்லாம் பள்ளிகளில் சொல்லித் தந்தால் Saffronization என்று ஒரு வெத்து வேட்டு கோஷ்டி கத்திக் கொடி பிடிக்கும்.

21 ம் நூற்றாண்டு இந்தியாவின் சாபக்கேடு எது என்றால் சுய ஏளனத்தின் உச்சத்தை தொடும் "சிந்தனா வியாதிகளை" அறிவு சீவிகளாக ஆக்கி வைத்திருப்பது தான்.

http://www.vedicmaths.org/

February 21, 2007

GN ராமச்சந்திரன்

மனித, மிருகத்தோலில் இருக்கும் ஒரு விதமான connective tissue வில் இருக்கும் முக்கிய புரதம் collagen. அது எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து முதலில் சொல்லியவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த GN ராமச்சந்திரன் என்பவர். ஆண்டு 1954.


எர்ணாக்குளத்தில் 1922 ஆம் அண்டு நாராயண ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்து அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருச்சி St. Joseph's ல் பௌதீகத்தில் B.Sc hons முடித்து 1942ல் பங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்றார். அங்கேயே தன் முதுகலைப்படிப்பை முடித்து கேம்ப்ரிட்ஜ்ஜில் W.A.Wooster என்பவருடன் இரண்டாண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பங்களூருக்கே வந்து பௌதீகத்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியைத் துவக்கினார்.





அதே வேளையில் சென்னைப் பல்கலைக்கழகம் அவரை வரவேற்றுக் காத்திருந்ததால் சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு நாள் ஜே. டி பெர்னல் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது கொலாஜெனின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ளவிதம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது. உடனே, மத்தியத் தோல் ஆராய்ச்சிக்கழகத்தின் உதவியுடன் collagen ன் மூலக்கூறுகள் எவ்வாறு அடுக்கப் பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து, 1954-55 ல் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகப் புகழ்பெற்ற nature இதழில் வெளியிட்டார். அதன் காரணமாக புரதங்களின் மூலக்கூறான அமினோ அமிலங்கள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அமைந்து புரதத்தை உருவாக்குகிறது போன்ற மிக அடிப்படை அறிவு நமக்குக் கிட்ட வழிவகுத்தார்.

அதன் காரணமாக இன்று பயன் படுத்தும் ஒருவித Graph plot க்கு ராமச்சந்திரன் plot என்றே பெயர்.

புரதங்களின் database ஆன PDB ல் புரதங்களின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ள முறை இயற்கையில் சரியானதாக உள்ளதா என்று சரிபார்க்கக் கூட இந்த ராமச்சந்திரன் plot பயன் படுகிறது.





புரதங்களில் அமைந்த அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று கொண்ட கோணங்கள் எவ்வாறு அமையக்கூடும் எவ்வாறு அமையக்கூடாது என்பதை உணர முடிந்தது ராமச்சந்திரன் அவர்களின் ஆராய்ச்சியின் விளைவே.

கெலிச்சான் மோடி

Special economic zones என்கிற சிறப்பு வணிகவளாகங்கள் நாடெங்கும் அமைக்கப் பட்டு வருகின்றது. ஒரு SEZ (special economic zone) நிருவுவதற்கே பட்டாச்சார்யா, அதாங்க மே. வ கம்யூனிஸ்ட் முதல்வருக்கு தாவு தீர்ந்துவிடுகிறது.

விவசாயிகள் ஆர்பாட்டம் ஒரு பக்கம் என்றால் எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இன்னொரு பக்கம் என்று மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் பந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவிருகின்றனர்.

இதே வேளையில் இந்தியாவின் மேற்குக் கரையில் (west coast !!) அதாங்க, குஜராத்தில், ஊடகங்களின் வில்லன், செகுலரிசத்தை நசுக்கிய அரக்கன் மோடி ஆளும் மாநிலத்தில் 33 SEZ களை சத்தமின்றி சேங்க்ஷன் செய்திருக்கிறார். அவரால் மட்டும் எப்படி முடிந்தது என்று outlook ல் R.K Mishra கேள்வி எழுப்பியுள்ளார் .

அந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்க்கையில்,

மோடி செய்த நல்லவிஷயம், அரசு விதிமுறைகள் என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்தாமல் லிபரல் எகனாமிக்ஸ் படி நிறையவே தனியார் நிறுவனங்கள் கூட்டுவைத்து மாநிலத்தில் முன்னேற்றத்தை அதிகரித்தது. குஜராத்தின் entrepreneurial skill கொண்ட மக்கள் அதை மிகவும் வரவேற்று முன்னேறினர். இன்று FDA அதிகம் கொண்டுவரும் மாநிலம் மே.வங்கமோ, கேரளமோ அல்ல, குஜராத்.

இன்னொன்றும் எனக்கு strike ஆனது, குஜராத்தில் நிறையவே விவசாயத்திற்கு உதவாத சதுப்பு நிலங்கள், கட்ச், சௌராஷ்டிரா பகுதிகளில் அதிகம், அதை நன்றாகப் பயன் படுத்தி SEZ களை கடலோரப் பகுதி, விவசாயத்திற்குப் பயன் படுத்த முடியாத நிலங்களில் அமைத்தது மோடியின் புத்திசாலித்தனம்.

பட்டாச்சார்யா ஆளும் மே. வங்கத்தில் கம்யூனிஸம் என்று தழைக்க ஆரம்பித்ததோ அன்றே பிடித்தது சனி. 30 ஆண்டுகால ஆட்சியில் கல்கத்தாவைத் தவிர எந்த நகரமும் சொல்லிக் கொள்ளும் படி முன்னேற்றாம் அடையவில்லை. பெரும் நிறுவனங்கள் trade union பிரச்சனை என்று சொல்லி முதலீட்டினைக் குறைத்துவிட்டன. வங்கதேசம் போன்ற வளமையான தேசம் நாட்டில் இல்லை, தஞ்சை போன்ற டெல்டா பகுதி அது. கங்கை, பிரம்மபுத்திரா வந்து வங்கக்கடலில் கலக்கும் பகுதி அது. வெள்ளைக்காரன் வந்து இறங்கிய உடன் கைவைத்த இடங்கள் தமிழக தஞ்சையும், வங்க தேசமும் தான். ஏனென்றால் அங்கே தான் டெல்டா பகுதி விளை நிலங்கள் அதிகம். 18ம் நூற்றாண்டின் SEZ சிறப்பு வணிக வளாகங்கள் தஞ்சையும், வங்காளமும். அதை வெள்ளையன் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டான். இன்று வெள்ளையனே A joke of an ideology என்று சொல்லித் தூக்கி எரிந்துவிட்ட கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறார் பட்டாச்சார்யார். இவர்கள் எதிர்கட்சியாக இருந்து என்னென்ன செய்தார்களோ அதையே செய்து மம்தா பானர்ஜீ அரசியல் ஆதாயம் தேடுகிறார். அது தெரியாமல் விவசாயிகளும் அவர் பின்னால் செல்கின்றனர்.

பந்த், Strike, உண்ணாவிரதம் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அந்த கசப்பு மருந்தை ஆட்சியில் இருந்துகொண்டு அனுபவிக்கவேண்டிய நெருக்கடி அவர்களுக்கே வந்துவிட்டது வேடிக்கையான உண்மை.

அதே அவுட்லுக் கட்டுரையில், மிஸ்ரா சொல்வது,

Another reason why setting up SEZs have been trouble-free is because the government has left it to the promoters to purchase the land directly from farmers. So, the farmer can demand market price for his property and not settle for the lower prices offered by the state when it acquires land.

மோடியிடமிருந்து ஒரு சில மேனேஜ்மெண்ட் பாடங்களை பட்டாச்சாரி கற்கலாம். சும்மா அவரை தூற்றுவதை கொஞ்சம் தில்லி, மும்பை, மற்றும் தமிழகத்தில் உள்ள Tabloidகள் நிறுத்தலாம்.

Journalist and Jihad

டேனியல் பெர்ல் என்ற அமேரிக்க பத்திரிக்கையாளரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் டாகுமெண்டரி.

The journalist and Jihad என்று தலைப்பு வைக்கப் பட்டிருக்கும் இந்த டாகுமெண்டரி, எட்டு பகுதிகளாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

daniel perl யார் என்று மறந்துபோயிருந்தால், இதோ, நன் நினைவுகளைத் தட்டி எழுப்ப,

Wall street பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் 9/11 பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது 2002 ல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இஸ்லாமிய ஜிஹாதிக்களால் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டவர். கூகிளில் daniel perl கொடுத்துப் பாருங்கள்.

அவர் தலை துண்டிக்ப்பபடுவதற்கான காரணம், அவருக்கு அல்-காயிதா வுக்கும் பாகிஸ்தானிய ISI க்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி பல அந்தரங்க விஷயங்கள் அவருக்குத் தெரிந்துவிட்டதால் தான் என்கிறது இந்த செய்திப் படம்.


















இதெல்லாம் ஏன் பதித்தேன் என்று கேட்டால்,

இவ்வளவு நடக்கிறது, நம் இந்தியாவின் விமானத்தைக் கடத்தி நம் ஜெயிலிருந்து தப்பும் ஜிஹாதிகள் இது போல் பாகிஸ்தானில் போய் ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அமேரிக்க பத்திரிக்கையாளரையே கடத்துகிறார்கள். அவனை வெட்டி அதை டீவியில் ஒளிபரப்பிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் நாட்டு சர்வாதிகாரி அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து உலகத்தில் நடக்கும் தீவிரவாதத்தினை எதிர்க்கும் நாடுகளுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக் கொள்கிறார்.

நம் வெத்துவேட்டு அரசியல்வாதிகளோ, உலக நாடுகளுக்கு நம் மண்ணில் நடக்கும் தீவிரவாதத்திற்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான் என்பது திண்ணமாக நிறுவிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அரசியலை நடத்தாமல், முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செலவு, சோப்பு விற்பது, நரேந்திர மோடியைத் திட்டுவது, இல்லை, ஓசியில் படியளப்பது போன்ற வெட்டிக்காரியங்கள் செய்துகொண்டு அவர்களையும் ஏமாற்றிக் கொண்டு நம்மளையும் ஏமாற்றுகின்றனர்.

February 20, 2007

ஏக "இரை" கொள்கை

மு. கு., இந்தப் பதிவு மத நம்பிக்கையின் காரணமாகவோ, உடல் நலத்தின் காரணமாகவோ வெஜிடேரியன்களாக இருப்பவர்களைப் பற்றி அல்ல.

புலால் உண்ணாமை என்பது தொன்று தொட்டு இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வாழ்க்கை முறை. இதில் எந்த வித கட்டாயமும் இல்லை. சிலருக்கு இந்த புலால் உண்ணாமை என்ற உணவுப் பழக்கம் கட்டாயமாக இருக்கலாம் ஆனால் vast majority மக்கள் வெறும் மரக்கறி சாப்பிட்டுக் கொண்டு காலம் தள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை நிலை.

இப்போது சொல்லவந்த விஷயம் புதிய வெஜிடேரியன்களைப் பற்றியது. இவர்கள், நேற்றுவரை கறி இல்லாமல் சோறு சாப்பிடாத மிருக ஜாதிகள். இன்று Fashion என்பதற்காக வெஜிடேரியன்களாக மாறித் திரிபவர்கள்.

அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வெள்ளையர்கள் என்றால் நம்மூரில் சில ஜந்துக்கள் இப்படி இருக்கிறார்கள்.

அவர்கள் இது போல் வெஜிடேரியன்களாக மாற எடுத்து வைக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். விக்கியில் கிடைத்த இந்த புள்ளிவிபரத்தைப் பார்க்க

மிருக வதையைத் தடுக்கிறார்களாம். (10%)

ஒரு பவுண்ட் பீஃப் steak செய்யத் தேவைப்படும் தண்ணீரின் அளவு 20,000 லிட்டர், இதைவைத்து ஒரு ஊரே தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழலாம். வெஜிடேரியன்களில் 4% ஆட்கள் இந்த சிந்தனைக்காக வெஜிடேரியன்களாக மாறியவர்களாம்

1% வெஜிடேரியன்கள் உலகில் நிலவும் பசிக்கொடுமைக்கும், வரட்சியைக் குறைக்கவும் வெஜிடேரியன்களாக மாறினார்களாம்.


இந்த 10 + 4 + 1 சதவிகித ஆட்கள் தாங்கள் வெஜிடேரியன்களாக இருப்பதில் என்தப் பிரச்சனையும் எனக்கில்லை. ஆனால், நான் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்று சொல்லி தெருக்களில் ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்துவது, பஞ்சத்தைத் தடுக்க ஆடு, மாடுகளை சாப்பிடாமல் இருக்கச் சொல்லி campaign கள் செயவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகின்றனர். PETA India இதில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

இவர்களின் முதல் மற்றும் முற்றிலும் hypocritical வாதம், சுற்றுப் புரச் சூளல் மாசு (pollution).


between 15 and 20 per cent of the methane gas emissions worldwide are produced by animals raised for food. These gases contribute to global warming and can sicken the people who live in communities around farms.


இந்த மடையர்களில் எத்தனைபேர், கார், ஸ்கூட்டர் ஓட்டிச் செல்பவர்கள் ? அதில் வராத pollution ஆ மாட்டின் மெதேன் வாயுவினால் வந்துவிடப் போகிறது ? சுற்றுப் புரச் சூளல் மேல் அக்கரை என்றால் முதலில் சைகிளில் போகட்டும் வேலைக்கு! அதற்கு பிறகு வெஜிடேரியனாகட்டும்!


மிருகவதை தடுப்பு!
அடுத்து, ஏதோ, கறி சாப்பிடாதனால் மிருகவதை நடப்பதில்லை போன்ற மாயையை உருவாக்குகின்றனர். மேலும் கறி சாப்பிடுபவர்கள் பாவச் செயல் செய்வதனால் நரகத்திற்குசத் தான் போகப் போகிறார்கள் என்று கூடச் சொல்வார்கள், இவர்களிடம் ஒன்று கேட்கவேண்டும்,

என்னைப் போன்றவர்கள் சாப்பிடத்தான் மிருகங்களைக் கொல்கிறோம், உங்களைப் போலுள்ள வெஜிடேரியன்கள் சாப்பிடும் கோதுமை, அரிசி, பருப்பு விவசாயம் செய்யப் பயன் படுத்தும் பூச்சிக் கொல்லிகளால் பல இன பூச்சிகளே முற்றிலுமாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது தவிற, அமேரிக்கா போன்ற நாடுகளில் பயிர்களை காட்டு விலங்குகள் வந்து நாசம் செய்யாமல் இருக்க hunting pass கள் வழங்கப் படுகின்றன பல மான், முயல் போன்ற உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. இந்தியாவில் சொல்லவே வேண்டாம், பயிர்களை நாசம் செய்தால் அன்னிக்கு மான், மயில், முயல் கறி தான் வீட்டில் !

எது இப்போது அதிக பாவச் செயல்? கூண்டில் உணவுக்காகவே பிரதேயேகமாக வளர்க்கப் படும் மிருகத்தைக் கொல்வதா ? அல்லது சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும் மிருகங்களைக் கொல்வதா ?


என்னைக்கேட்டால் ஒரு கொலை செய்தாலும் 10 செய்தாலும் தூக்கு ஒண்ணுதான்.!!

ஆகவே, மிருகவதை என்றெல்லாம் புருடா விட்டுக் கொண்டு வெஜிடேரியன் கொள்கைக்கு ஆள் சேர்ப்பது, குற்ற உணர்ச்சியைத் தூண்டுவது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்.

அது போல் இவர்களுக்கு மிருக வதையைத் தடுக்க வேண்டும் என்று தான் நோக்கம் என்றால் தாங்கள் உண்ணும் பயிரை தாங்களே விவசாயம் செய்து தான் உண்ணவேண்டும்! முடியுமா ?

பஞ்சம்

அடுத்தது கறி சாப்பிடுபவர்களால் தண்ணீர் பஞ்சம் வருகிறது. வரட்சி வருகிறது என்பது. இந்த குற்றச்சாட்டைக் கொஞ்சம் ஆராயலாம்.


It takes 20,940 litres of water to produce 1 kilogram of meat, but only 503 litres of water to produce 1 kilogram of wheat.


ஒரு ஆடோ, மாடோ தன் வாழ் நாளில் பல லிட்டர் தண்ணீர் உட்கொள்கிறது. அந்த மாட்டை வளர்க்கவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் வராதாக்கும் ?

இப்ப ஒரு மாடு இவ்வளவு லிட்டர் தண்ணீரைக் குடிக்கிறது என்றால் என்ன ஆகிவிடப் போகிறது. உலகத்தில் என்ன தண்ணீர் இல்லாமலா போய்விடும் ?

5 பில்லியன் வருஷத்திற்கு முன் எவ்வளவு தண்ணீர் இந்த உலகில் இருந்ததோ அதே அளவு தான் இன்றும் உள்ளது. அஞ்சாப்பில் வாடர் சைகிள் சொல்லிக் கொடுத்திருக்கவில்லையா ?


பஞ்சம் பற்றிய இன்னொரு விஷயம்,


Raising animals for food is grossly inefficient because, while animals eat large quantities of grain, they produce only small amounts of meat, dairy products or eggs in return. Scientists estimate that animals must be fed up to 10 kilograms of grain to produce just 1 kilogram of meat. The world’s cattle alone consume a quantity of food equal to the caloric needs of 8.7 billion people – more than the entire human population on Earth.


இது மஹா சொத்தை வாதம்.

உலகில் 80% திற்கு மேல் தயாராகும் பயிர்கள் not fit for human consumption!! மனிதர் உட்கொள்ள ஏற்றவையல்ல. ரப்பர் போலுள்ள அரிசி, கல் போலுள்ள கோதுமையை இது போல் Fashion வெஜிடேரியன் மடையர்களுக்குத் தான் உணவாகக் கொடுக்கவேண்டும். அவை மிருகங்கள் உட்கொள்ளவே ஏற்ற உணவாகும். மேலும், இந்தியாவிலோ, வேறு எந்த நாட்டிலோ எவ்வளவு நிலம் விழை நிலம் என்ற கணக்கில் வரும் ? விவசாயிகளுக்கோ, ஆடு, மாடு வளர்க்கும் பண்ணை வைத்திருப்பவர்களுக்கோ ஏதேனும் Choice உள்ளதா ? மனிதன் உண்ணத்தகு பயிர்வகைகளையும் தானியங்களையும் மட்டுமே வளர்க்க முடிவு எடுக்க முடியுமா ?

இது போல் இவர்களது சொத்தை வாதங்களை உடைத்துக் கொண்டே போகலாம்.

சுற்றுப் புரச்சூளல் பாதுகாப்பு கருதி, மிருக வதையைத் தடுக்க வேண்டுமென்று வெஜிடேரியன்களாக "மதம்" மாறும் கூட்டம், தங்கள் நிலையை ஞாயம் என்று கற்பிக்க அபத்த வாதங்களைச் செய்து சாதாரண புலால் உண்ணும் சாமான்ய மனிதனைக் கேவலப் படுத்துகின்றனர் என்பதற்காகவே என் கோபம்.

இது போன்ற Fashion வெஜிடேரியன்களுக்கும் ஏக இறை கொள்கை மதக்காரகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர்களுக்கு அவர்கள் மதம் தான் சிறந்தது மற்ற மதமெல்லாம் "பொய்" மதங்கள் என்றால் இவர்களுக்கு இவர்கள் உண்ணும் வெஜிடேரியன் உணவே சிறந்தது மற்றதெல்லாம் "தீங்கான" உணவுகள். முட்டாள் தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

February 19, 2007

கல்யாணப் பரிசு

சில நாட்கள் முன்பு ndtv ல் bone of contention என்ற பட்டி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, "இந்தியர்கள் திருமணத்திற்காக மிக அதிகமான செலவு செய்கிறார்களா ?". கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "ஆம்" என்றும், லக்னோ விலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "இல்லை" என்றும் வாதிட்டனர்.

கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள், இந்தியர்கள் தன் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டனர் அதற்கு புள்ளிவிபரம் என்று ஒன்றைக் காட்டினர். ஒரு சராசரி இந்தியன் கல்யாணத்திற்கு, தன் வருமானத்தைவிட 3 மடங்கு அதிகம் செலவு செய்கிறான் அதாவது வருமானம் 12,000$ கல்யாணச்செலவு 34,000 $, ஆனால் ஒரு சராசரி அமேரிக்கனின் வருமானம் 20,000 $ என்றால் கல்யாணச்செலவு 24,000 $ எனபதே அந்தப் புள்ளிவிபரம்.

ஆனால் உண்மையில் என்னைக் கேட்டால் புள்ளிவிபரங்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே கருதுகிறேன். இந்தியர்களுக்கு திருமணம் என்று வரும் போது அதிகமான செலவு தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொன்றும் accountable செலவு. பாத்திரங்கள், சீர், தங்கம், நில புலன் என்றெல்லாம் பார்த்தால் அது செலவு என்று கருத முடியாது.

ஏனென்றால், அதெல்லாம் அன்றாடம் பயன் படக்கூடிய பொருட்கள், தங்கம் என்பது liquifiable asset, நிலம் என்பது investment. இன்றைய ரியல் எஸ்டேட் நிலவரத்தின் படி 5-10 ஆண்டுகளில் ஒரு கிரவுண்டின் விலை 10 மடங்கு கூட ஏறும். பண வீக்க விகிதத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நிச்சயம் இலாபம் தான். சீராக வரும் பாத்திரம் எல்லாம் வீட்டில் பயன்படுத்தத்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், அமேரிக்கர்கள் திருமணச்செலவு என்று செய்வது குறைவு என்றாலும், ஒவ்வொரு டாலரும், இசை, பாட்டு, தண்ணி என்று செலவு செய்யப்படுகின்றது. Fixed asset செலவே அதில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது car அல்லது வேறுவிதமான பொருளாக இருக்கும். அதை பின்னாளில் விற்றால் குறைந்த் விலையில் தான் விற்க முடியும். Flat, villa பொன்ற பரிசுகள் பெற பணக்காரப் பெண்ணைத் (ஆணைத்) திருமணம் செய்து கொண்டால் தான் கிடைக்கும்.

இதையெல்லாம் அந்த லக்னோவிலிருந்து வந்தவர்கள் அதிக அழுத்தம் கொடுத்துச் சொல்லவில்லை. அவர்கள் over defensive ஆகவும், புள்ளி விபரமே தவறு என்று வாதிட்டு தோற்றுப் போயினர்.

தமிழ் வலைப்பதிவுலகில் என்ன நினைக்கிறார்கள் ? இந்தியர்கள் திருமணத்திற்கு மிக அதிகச் செலவு செய்கிறார்கள் என்றா ?

ஆத்தா, நான் ஸ்டார் ஆயிட்டேன் !

வணக்கம்,

என்னையும் ஸ்டார் பதிவராக ஒரு வாராம் இருக்கச் சொல்லி வேண்டியிருக்கும் தமிழ்மணத்திற்கு என் நன்றிகள்.

இந்த வாரத்தில் என் அறுவைப் பதிவுகளையும், அரசியல் சார்புகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளேன், அதைப் பொறுமையாகக் கேட்டு பதில் சொல்லப் போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.

பழைய தமிழ் படங்களில் பாத்திரம் கழுவும் அம்மாவைக் காட்டியபிறகு, அங்கே தூரத்தில் ஹீரோ ஓடி வந்து "ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!" ன்னு சொல்லிகிட்டே வருவார்...அது போல நானும் வர்றேன்...!!

உயிர்தொழில்நுட்பவியல் (biotechnology) துறை ஆராய்ச்சியில் ஆரம்பித்து biophysics பக்கம் தாவி கொஞ்சம் bioinformatics என்று என்னென்னமோ படித்துவிட்டேன். கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது, என் வாழ்க்கையில், வலைப்பதிவு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் கூட இன்னும் ஆகவில்லை.

எனக்கு நிச்சயமாக "புது உலகம்" படைக்கும் ஆசை, another world is possible போன்ற"நம்பிக்கை" சித்தாந்த அடிப்படை புத்தி இல்லை.

Take life as it comes, attitude தான்.

இந்தப் பதிவில் சொல்ல வேறேதும் இல்லை என்பதாலும், இப்போது எழுத வேறேதும் இல்லை என்பதாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

February 13, 2007

அறிமுகம் - ஹோலோகாஸ்ட் மறுப்பு

ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது தமிழ் பதிவு உலகிற்கு இப்போது புதிய பரிணாமத்தில் அறிமுகமாகிவருகிறது. அதன் தோன்றலிலிருந்து பல பரிணாம வளர்ச்சிகள் பெற்று இப்போது அது mainstream ஊடகங்களில் அந்தஸ்துள்ள ஒரு மாற்றுக் கருத்தாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் உலவிக் கொண்டிருக்கிறது. தமிழில் நண்பன் என்பவர் பதிவைப் பார்த்துவிட்டு இதை எழுதுகிறேன்.

ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்களுக்கு பதில் சொல்லி புரியவைப்பது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்குச் சமம். எந்த விதமான சான்றுகள் கொடுத்தாலும், ஆணித்தரமான வாதங்கள் வைத்தாலும், சித்தாந்தப் பித்துத் தலைக்கேறி தெளியாத கேசுகள் போல் வாதத்தையும் சான்றுகளையும் ஏற்க மறுப்பார்கள்.

ஹோலகாஸ்ட் என்பது இவ்வளவு கொடூரமான முறையில் நடந்ததா ? என்றால் ஆம், அது அப்படித்தான் நடந்தது, அவர்கள் எவ்வாறு சொல்கிறார்களோ அப்படியே நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆறு மில்லியன் உயிர்கள் பலி வாங்கிய ஒரு முட்டாள், சோசியலிச பித்துப் பிடித்த சர்வாதிகாரி, கொண்ட கொளகையாம் நாஜிக் கொள்கை, அவன் இறந்த பிறகு புதிய பரிணாமத்தில் neo-nazism என்று சொல்லப்பட்டு சில ஐரோப்பா நாடுகளிலும் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளிலும் படு தீவிரப் பிரச்சாரம் செய்யப் பட்டு கடைபிடிக்கப் படுகின்றது. ஐரோப்பிய கூட்டு நாடுகளில் சட்டப்படி தடை செய்யப் பட்டது இந்த புதிய நாஜிக் கொள்கையும் (neo-nazism) மற்றும் அதன் வளர்ப்பு மகனான ஹோலோகாஸ்ட் மறுப்பும்.

இப்போதுள்ள ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்கள், யாரெல்லாம் ஹோலோகாஸ்ட் மறுப்புக் கொள்கையை கேள்வி கேட்கிறார்களோ அவர்களையெல்லாம் அமேரிக்க, இஸ்ரேலிய கூலிப் படை, அறிவிலிகள், அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கத் தெரியாத, சான்றுகளை சரியான முறையில் பகுத்தறியத் தெரியாத/விரும்பாதவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டும் ஞாயமற்ற வெத்து வேட்டு வாதம்.

ஹோலோகாஸ்ட் நடந்ததற்கான சான்றுகள் கண்ணால் கண்ட சாட்சிகள், நாஜிக்களின் பல அரசு ஆணைகள், ஹிட்லரின் கட்டளைகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என்று நிரூபிக்கப் பட்டுவிட்ட உண்மை. அதில் எவ்வளவு உண்மை என்பதைத்தான் கேட்கிறோம் என்றால் அது அத்தனையும் உண்மை. அதில் பொய் இல்லை.

இதில் எவ்வளவு உண்மை என்பதைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை பதிவு செய்து, யாத் வெ ஷெம் என்ற மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஆங்காங்கே ஹோலோகாஸ்ட் மெமோரியல் என்று நினைவுச் சின்னத்தையும் வைத்திருக்கிறார்கள். ஹோலோகாஸ்ட் மாயை என்றால் அந்த "உண்மைகளை" தொகுத்து வழங்கவேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. சும்மா, தர்கவாதம் மூலம் ஞாயப் படுத்திவிடலாம் என்று எண்ணுவது குள்ள நரித்தனம்.

ஹோலோகாஸ்ட் மறுப்பு/மறுபரிசீலணையைத் தமிழ் வலைப்பதிவில் பார்க்கையில், டெபோரா லிப்ஸ்டாட் (deborah lipstadt) என்பவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது,


We need not waste time or effort answering the deniers' contentions. It would be never-ending to respond to arguments posed by those who freely falsify findings, quote out of context and simply dismiss reams of testimony. Unlike true scholars, they have little, if any, respect for data or evidence. Their commitment is to an ideology and their 'findings' are shaped to support it



இந்த ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்கள் பற்றிய விக்கி சுட்டி

ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது என் பார்வையில் குப்பைத் தொட்டியில் இருக்கவேண்டிய கண்ணோட்டம், வலைப்பதிவில் எழுதி அழகு பார்க்க வேண்டியது அல்ல.

February 4, 2007

கடவுளின் கோபம்

நண்பர் திருமலை ராஜன் மூனிக் (டோண்டுவிடம் கேட்டால் மூன்ஷன் என்பார்) படம் பார்த்துவிட்டு எழுதிய மடல். அதை அப்படியே பதிகிறேன். தலைப்பு தான் என்னுடையது. Operation wrath of God என்றழைக்கப் பட்ட இந்த ராஜதந்திர நடவடிக்கையைத்தான் தலைப்பாக வைத்துள்ளேன்.


அன்புள்ள வஜ்ரா,

வெகு நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ம்யூனிச் சினிமாவை நேற்றுதான் பார்க்கக் கிடைத்தது. படத்தை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள், இது வரை பார்க்கவில்லையெனில் அவசியம் பாருங்கள். நான் இந்தப் படம் பற்றிய சில குறிப்புகளை எனது வலைப்பதிவில் பதிவதற்காக எழுதியிருந்தேன், நீங்கள் இஸ்ரேலில் இருப்பதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். படத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.

அசாதாராணமான படங்களையே எடுக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு பிரமாதமமன படம் 2005 ஆண்டு வெளி வந்த ம்யூனிச். ஹாலிவுட் பிரமாண்டங்களை அள்ளித் தந்த இதே இயக்குனர் ஒரு சர்ச்சைக்குரிய, தன் இனத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப் படக் கூடிய சாத்தியமுள்ள இந்த அரசியல் திரில்லரரக் கொடுத்துள்ளார்.

கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 1972ம் ஒலிம்பிக்கின் பொழுது 11 இஸ்ரேலிய தடகள வீரர்கள் அரேபிய தீவீரவாதிகளால் முதலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப் பட்டு, பின்னர் ஜெர்மன் போலீஸ் செய்த குழறுபடிகளால் அனைவரும் கொலல செய்யப் படுகிறார்கள். இஸ்ரேலுக்குப் படுகொலைகளும் கடத்தல்களும் துரோகங்களும் புதிதல்லதான். ஆனால் நாட்டுக்காக விளையாடச் சென்ற வீரர்களின் சிதறிய உடல்கள் யூதர்களிடம் கடுமையான கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. பிரதமர் கோல்டா மேயர் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார். இஸ்ரேலிய ஒலிம்பிக் போட்டியாளர்களின் கோரக் கொலையைச் செய்தவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்யப் படுகிறது. பழிக்குப் பழிதான். இஸ்ரேலின் பிரதமர், இரும்புப் பெண்மணி கோல்டா மேயர்., உலக நாடுகளின் போலி நாகரீகங்களளப் புறக்கணித்து விட்டு தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ என்ன செய்தால் தன் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு மனச் சமாதானம் கிட்டுமோ, எதைச் செய்தால் இஸ்ரேலை அழிக்க நினனக்கும் எதிரிகளுக்கு தன் நாட்டின் சுயமரியாதையை இருப்பை அறியச் செய்யுமோ அதைச் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தீவீரவாதிகளை இனங் கண்டு ஒழிக்கக் கட்டளையிடுகிறறர், பிரதமரும், மொசாட் மற்றும் ரரணுவத் தலைவர்களும் தங்கள் ரகசிய ஆலோசனைக்குப் பின், பிரதமரின் முன்னாள் பாதுகாவலரும் ஒரு மொசசட் ஏஜெண்டுமான அவ்னெரின் தலைமையில் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அதிகாரபூர்வமற்ற ஒரு தீவீரவாத ஒழிப்புப் படட உருவாக்கப் படுகிறது. எவ்வளவு செலவானாலும் சரி, அத்தெலெட்களின் கொலைக்குக் காரணமான 11 இஸ்லாமியத் தீவீரவாதிகளையும் கண்டு பிடித்துக் கொல்லும் பணி 5 பேர் கொண்ட ரகசிய குழுவிடம் ஒப்படைக்கப் படுகிறது. அவர்களும் 11 பேர்களில் 9 பேர்களை பல நாடுகளுக்கும் சென்று வேட்டையாடுகின்றனர். மீதம் உள்ள ஆட்களை இஸ்ரேல் தொடர்ந்து கொல்ல உறுதி பூணுகிறது.



பாலஸ்தீனியத் தீவீரவாதிகளால் "ப்ளாக் செப்டம்பெர்" என்று பெயரிடப் பட்ட தீவீரவாதம். பணயக் கைதிகளாக எடுக்கப் பட்டுப் பின்னர் கொலை, செய்யும் காட்சிகளள பீட்டர் ஜென்னிங்ஸ் நிஜ ஏ பி சி வர்ணனை மூலமாக நம்மை உறைய வைப்பதில் தொடங்குகிறது படம்.

ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் எடுத்து யூதர்களின் பாராட்டைப் பெற்ற சினிமா உலகின் இணையற்ற இயக்குனர் ஒரு யூதர். இந்தப் படத்தில் இஸ்ரேலின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களின் கடுமையான் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்பீல்பெர்கின் துடிப்பான இயக்கத்தில் ஒரு தத்ரூபமான திகில் படம் உருவாகியுள்ளது. படத்தின் முன்னே இயக்குனர் இது ஒரு டாக்குமண்டரி அல்ல. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட தி வெஞ்சன்ஸ் என்ற 1984 வெளிவந்த புத்தகத்தை ஆதாரமாக வைத்து எடுக்கப் பட்ட உலகை உலுக்கிய ஒரு பரபரப்பான அரசியல் படுகொலைத் திரைப் படமே என்கிறார். இதில் தான் எந்தவொரு நீதியையையும் சொல்ல முயலவில்லை என்றும், யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எடுக்கவில்லலயென்றும், நடந்த சம்பவங்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன், எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்கிறார். மேலும் தான் இந்தப் படத்தின் மூலம் எந்தவொரு தீர்வையும் கொடுக்க முயலவில்லை என்றும், அது தன் வேலையென்றும் திட்டவட்டமாக அறிவிக்கிறார். ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் அழிப்புப் படைத் தலைவன் அவ்னெராக எரிக் பானா அற்புதமாக நடித்துள்ளார். மேலும் நமக்கு புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகமாயிருக்கும் டேனியல் க்ரெய்க், குறி பார்த்துச் சுடும் மொசாட் வீரராகவும், லின் கோகன் என்ற பிரபல டி வி நடிகை இஸ்ரேலியப் பிரதமராகவும் பிரமாதமாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை வசனத்தை ஷ்ண்லெர்ஸ் லிஸ்ட் படத்தின் வசனகர்த்தாக்களான டோனி கிரெக், எரிக் ரோத் அமைத்துள்ளனர். இந்தப் படம் மூன்று உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்கிறா இயக்குனர். 11 தடகள வீரர்கள் கொல்லப் பட்டது உண்மை, அதற்கு பதிலடியாக கோல்டா மெயர் நடவடிக்கை எடுத்தது உண்மை, 12 தீவீரவாதிகளில் 10 பேர் கொல்லப் பட்டது உண்மை. இந்த உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு சங்கடமான கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர், பதிலை பார்வையாளர்களிடம் விட்டு விடுகிறார்.




தன் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தேசத்தின் கட்டளையை ஏற்று நாட்டை விட்டு தாய்நாட்டின் இருப்பையும், மானத்தையும் காக்கும் பொருட்டும் எதிரிகளை ஒழிக்கும் பொருட்டுமான முக்கியமான கடமையாற்ற இஸ்ரேலை விட்டு நாடு நாடாக செல்கிறார் அவ்னெர். அவர் கிளம்பும் முன்பே இஸ்ரேலின் மொசாட்டுக்கு அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்கப் பட்டு, பதவி விலக்கப் பட்டு, அனுப்பப் படுகிறார். இந்தக் குழு எந்த நாட்டிலாவது கொலைக் குற்றத்திற்காக பிடிபட்டாலும் இஸ்ரேலும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இஸ்ரேல் சட்டத்தை மீறித் தன் ஒற்றர் படையை பிற நாடுகளுக்கு அனுப்பாது என்ற்ய் காட்டவும் இந்தக் குழு ஆரம்பத்திலேயே கை கழுவி விடப் படுகிறது. விளையாட்டு வீரர்களின் படு கொலைக்குக் காரணமான தீவீரவாதிகள் எப்படியாவது கண்டு பிடிக்கப் பட்டு கொலை செய்யப் பட வேண்டும், உலகிற்கு இஸ்ரேலின் இரும்புக்கை, உறுதி புலப்பட வேண்டும் அதே நேரத்தில் இஸ்ரேல் மீது உலக நாடுகள் எவ்விதக் குற்றசாட்டும் வைத்து விடக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. அவ்னெருக்கான பணம் ஒரு ஸ்விஸ் வங்கியில் ரகசியமாக டெப்பாசிட் பண்ணப் படுகிறது, ஆகும் ஒவ்வொரு நயாப் பைசாவுக்கும் துல்லியமாக கணக்கும் ரசீதும் இருக்க வேண்டும் என்றும் ஊதாரித்தனமான செலவுகளுக்கு இஸ்ரேல் அரசின் கஜானாவில் இடமில்லை என்றும் கறாராகச் சொல்லப் படுகிறது.

We deposit money from a fund that does not exist, into a box that we dont know about, in a bank that we never set our foot in


என்கிறார் எப்ராகிம் என்ற மொசாட் தலைவர்.


இந்தப் பணியை ஆவ்னெரே அவரது குழுவோ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, மிகவும் ஆபத்தான பணி, அரசின், ராணுவத்தின் உதவியும் கிடைக்காது, எவ்வித பாராட்டோ, மெடலோ, பதக்கமோ கிடைக்காது, செத்துப் போனால் எடுட்துப் போட நாதி கிடையாது, பேரும் புகழும் கிடைக்காது, இவர்களின் பணி ரகசியமாகவே வைக்கப் படும், பெரும் பதவிகளோ, செல்வமோ, செல்வாக்கோ இருக்ககது, உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறிய குழு மேற்கொள்ளப் போகும் பணி ஒரு ஈ காக்கைக்குத் தெரியப் போவதில்லை, பதவி உயர்வு இருக்காது, இலக்கில் வெற்றி பெற்றால் ஒரு நன்றி, ஒரு கை குலுக்கல் அதோடு சரி, மறு நாள் அவர்கள் சாதாரணர்கள். இருந்தாலும் இஸ்ரேலுக்குத், தங்கள் தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கேள்வி கேட்காமல் உயிரைப் பணையம் வைத்து சிரமேற்கொண்டு செய்கிறார்கள், தங்கள் நாட்டுக்காக தங்கள் உடல் , பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட அந்த 5 தேசபக்தர்கள். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, அல்லது யாரும் சொல்லிக் கொடுத்தோ வருவதில்லை அவர்களது தேசபக்தி.


பழிவாங்கும் கடமையினை ஏற்றுக் கொண்ட யூதர்கள் அது தமது ஒவ்வொருவரின் வீட்டினை, தாய் நாட்டினை நிலை நிறுத்திக் கோள்வதின் ஒரு அங்கம் என்பதை மறுக்கவில்லை, ஆனால் ஸ்பீல்பெர்கின் என்ற இயக்குனர், பழிவாங்குவதிலும், மரண தண்டனையிலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லல, அமைதியும் கிட்டப் போவதில்லை, பழி வாங்குதல் என்பது மேலும் மேலும் அழிவைத்தான் வளர்க்கும், கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாய் விடும் என்னும் தன் காந்தியவாத சிந்தனைகளைப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் படம் பார்ப்பவர்களிடம் திணிக்கிறார். தீவிரவாதிகளை அழிக்கக் கிளம்பும் 4 பேர்களிடம் பெருத்த சஞ்சலம் நிலவுவதாக காட்சிகளையும் வசனங்களளயும் அமைத்துள்ளார். தங்கள் தாய் நாட்டின் கட்டளையை எப்படியாவது செயல் படுத்தவேண்டும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய உறுதி இருக்கிறது ஆனால் தாம் செய்வது சரியான காரியம்தானா ? இது சட்ட விரோதக் கொலையல்லவா ?, தர்மம்தானா?, மனசாட்சியின் படி நியாயமான செயல்தானா ? நாம் கொல்லப் போகும் அரபுத் தீவீரவாதிகள்தான் நிஜமாகவே அந்த விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமானவர்களா ? அல்லது இஸ்ரேல் தங்கள் அரசியலுக்கு தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறதா ? தீவீரவவதிகளின் அருகில் வேறு யாரும் இருந்தால் அவர்களைக் கொல்லுவது தர்மம் தானா என்று அர்ஜுனனுக்கு ஏற்பட்டக் குழப்பம் போல், போர்க்களத்தில் தர்மனுக்கு ஏற்பட்ட குழப்பம் போல் படம் முழுவதும் அவ்னெரின் குழுவினருக்கு சுய விசாரணைகள் நடை பெறுவதாக இயக்குனர் ஸ்பீல் பெர்க் அமைத்துள்ளார். ஆனால் உண்மையில் இந்தக் கடமையினை மேற்கொண்ட வீரர்கள் அப்படி எந்தவொரு சஞ்சலத்துக்கும் உள்ளாகவில்லையென்றும், மிகத் துணிவாகவும், உறுதியுடனும், தாங்கள் செய்யும் கொலைகளின் நியாயத்தை உணர்ந்தும், தங்கள் தாய் நாட்டின் இருப்புக்கு இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்தும்தான் எதிரிகளள அழித்தனர் ஸ்பீல்பெர்க் தேவையில்லாமல் தனது கருத்துக்களை இஸ்ரேல் வீரர்கள் மேல் ஏற்றி தவறான ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார் என்று இஸ்ரேல் தரப்பு ஸ்பீல்பெர்க் மீது தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அங்குதான் வருகிறது அவர் மேல் வரும் சுய விமர்சன குற்றசாட்டுக்கள். இந்தப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தேச பக்த யூதர்கள் நிஜமாகவே அவ்வாறு நினைத்திப்பார்களா ? இருக்கலாம் இல்லாதும் இருக்கலாம். நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வித குழப்பம் ஒவ்வொரு கொலையை, ஒவ்வொரு பழிவாங்கலை நிகழ்த்தும் முன் அந்தக் குழுவினர்களுக்கு ஏற்படுவதாகக் காட்டுகிறார் ஸ்பீல்பெர்க். அது போன்ற குழப்பங்கள் சாத்தியம் தான்,. நிச்சயம் சுயமாய் சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு யூத இனத்தவருக்கும் அவ்விதமானா குழப்பங்கள் ஏற்பட்டிருக்க அதிக பட்ச வாய்ப்புகள் உள்ளனதான். ஒவ்வொரு கொலையின் போதும் ஒரே ஒரு யூதரைத் தவிர, தலைவன் உட்பட பிறருக்கு தர்ம சங்கடங்களும், சுய பரிசோதனைகளும், நியாய அநியாய, தர்க்க விவாதங்களும் நிகழ்கின்றன. அது போல் கேள்வி எழுப்பும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொலையும் செய்யப் படுகின்றனர். அது போன்ற கொலைகளை இஸ்ரேல் செய்கிறதா எதிரிகள் செய்கிறார்களா என்பதை ஸ்பீல் பெர்க் கூறுவது இல்லை. அதத பார்வையாளர்களின் தீர்வுக்கு விடுகிறார். பழிவாங்கும் கடமையை ஏற்று செய்யும் கடமையினை ஏற்கும் தலவவனுக்கும் அவ்வித ஆத்ம பரிசோதனைகள் நிகழ்கின்றன. இருந்தாலும் அவன் தாய் நாட்டின் கட்டளையை எந்தவொரு சமயத்திலும் மறக்காமல் தன் கடமையில் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்.

படம் மிகுந்த விறுவிறுப்புடன் எடுக்கப் பட்டுள்ளது. படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே நிர்ந்தரமாக அமர்த்தி விடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப் பட்டுள்ள விதமும், கேமரா கோனங்களும், விறுவிறுப்பை ஊட்டும் இசையும் பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தன திகில் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமில்லை. படத்தின் பல காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. பாலஸ்தீனியத் தீவீரவாதியின் மூளையாகச் செயல் படும் ஒருவரை அவரது வீட்டுத் தொலை பேசியிலேயே குண்டு வைத்துக் கொல்லத் திட்டமிடும் பொழுது, தவறுதலாக தொலைபேசியை தீவீரவாதியின் மகள் எடுத்து விட, ரிமோட்டை அழுத்தி விட வேண்டாம், வெடித்து விட வேண்டாம் என்று பதறிக் கொண்டு காரில் இருக்கும் தன் கூட்டாளிகளை நோக்கி அந்த வயதான ஒற்றர் கார்ல் ஓடி வரும் பொழுது நாமும் நெஞ்சு பட படக்க கூடவே ஓடுகிறோம். இலக்கைத் தவிர வேறு ஒரு சிறு புழுவுக்குக் கூட ஆபத்து வந்து விடக் கூடாது, அநாவசியமாகக் கொலை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் மாறாக அரபுத் தீவீரவாதிகளோ அப்பாவி விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி எதிர் படும் அப்பாவிகளைக் கொல்வதில் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. இரண்டு இனத்தவருக்கும் உள்ள வேறு பாடுகளை இயக்குனர் இது போன்ற காட்சிகள் மூலம அழுத்தமாக அதே நேரம் மறைமுகமமகவும் சொல்லுகிறார். அந்தச் சிறுமியை காத்தவுடன், அவள் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேறியவுடன் மீண்டும் அழைத்து, இந்த முறை தீவீரவாதியை மட்டும் குண்டு வெடிக்க வைத்துக் கொல்லும் இடம் திகிலின், பரபரப்பின் உச்ச கட்டம். அது போலவே தீவீரவாதியின் தலைவர் சலாமியைக் கொல்லச்செல்லும் பொழுது அவனுடன் கூட வரும் பாதுகாப்புப் படையினரையும் சுட வேண்டுமா கூடாதா என்பது குறித்து குழுவினரிடம் பலத்த ஆலோசனை நிலவுகிறது. அவர்கள் நம்மைத் தாக்கினால் மட்டுமே சுடவேண்டும் என்கிறான் அவ்னெர். சலாமியை மழையின் ஊடே துரத்தும் இடம் அற்புதமானப் படப் பிடிப்பு. அவன் கொலை செய்யப் படாமல் தடுத்து விடுபவர்கள் இஸ்ரேலின் நண்பனான அமெரிக்காவின் சி ஐ ஏ ஆட்கள். தீவிரவாதிகளை அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க சி ஐ ஏவும், ரஷ்ய கே ஜி பியும் பாதுகாக்கின்றன. உலக அரசியல் சதுரங்கத்தில் தீவீரவாதிகளுக்குத் தீனி போட்டு வளர்ப்பது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் என்பதை மிகத் தெளிவான காட்சிகள் மூலம் காட்டுகிறார். கே ஜி பியினால் பாதுகாக்கப் படும் தீவீரவாதியைத் தீர்த்துக் கட்டும் இடத்தில் அவ்னெர் குழுவினர் காட்டும் மனிதாபிமானம் அவர்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது. கொல்லப் பட வேண்டியது தீவீரவாதிகள் மட்டுமே என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.

படத்தில் பாலஸ்தீனீயர்களின் விளக்கங்களும் தீவீரவாதத்திற்கு அவர்களின் சப்பைக் கட்டுகளும் பல இடங்களில் வைக்கப் படுகின்றன. ஒரு தீவீரவாதியய பேட்டி காண்பது போல் நடிக்கச் செல்லும் காட்சியில் அவனும் அவனது மனனவியும் மிகவும் ஆக்ரோஷமாக இஸ்ரேலுக்கு எதிரான தங்களது வாதங்களை அவர்களளக் கொல்ல நிருபர் வேடத்தில் வரும் அவ்னெரிடமே வைக்கின்றனர். பொறுமையாக அவன் கேட்டுக் கொள்கிறறன். ஏதென்ஸில் தாங்கள் தங்க வைக்கப் பட்டுள்ள அதே இடத்தில் பாலஸ்தீன கொரில்லாக்களும் தங்க நேர்ந்து விட , இவர்களை மொசாட் படையினர் என்பதை அறியாத பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் அழிக்கப் பட வேண்டும் , யூதர்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்று மிகுந்த கொந்தளிப்புடன் அவ்னெரிடமே வாதிடுகின்றனர். இது போல் பல இடங்களில் பாலஸ்தீனியர்களின் தீவிரவாதத்திற்கான நியாயங்களும் வைக்கப் படுகின்றன. என்னதான் ஸ்பீல்பெர்க் அமைதி மார்க்கம் பேசினாலும்., பழி வாங்குதல் தவறு என்று தன் பாத்திரங்கள் மூலம் கூறினாலும், காட்சி அமைப்புகளின் தீவீரத்திலும், இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொடூரமாகக் கொலை செய்யப் படும் தத்ரூபமான காட்சிகளின் மூலமாகவும், கோல்டா மேயர், மொசாட் தலைவர், அவ்னெரின் அம்மா போன்றவர்களின் வசனங்கள் மூலமாக இஸ்ரேல் பக்கம் உள்ள நியாயத்தை தெள்ளத் தெளிவாக பார்வையாளர்களுக்கு எவ்விதச் சந்தேகமும் ஏற்படாத வண்ணம் மிகத் திறமையாகக் காட்டி விடுகிறார். அந்த விஷயத்தில் தனது இனத்தினருக்கு எவ்விதக் குறையையும் வைத்து விடவில்லை ஸ்பீல்பெர்க். சாய்வு நிலை எடுக்காத ஒரு பார்வையாளரிடம் இந்தப் படம் இஸ்ரேல் தரப்பு நியாயத்தத மிகுந்த உக்கிரத்துடன் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

படத்தின் முக்கியமான காட்சியாக நான் கருதியது, இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவசரமாக தனது வீட்டில் கூட்டப் படும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மெயர் அமைதியாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் போபத்துடனும் மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர் பேசும் வசனங்கள்தான். அந்த இடத்தை பல முறை ரீ வைண் செய்து பார்த்திருப்பேன். சுய மரியாதையும், தேச நலனில் அக்கறையின்மையும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும், ஊழலும், கையாலாகத்தனமும், பேடித்தனமு, போலித்தனமும், போலி மதச்சார்பின்மையும், ஒழுங்கீனமும், பேராசையும், லஞ்ச லாவண்யமும், ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக, பிரதமராக, ஜனாதிபதிகளாக, முதலமைச்சர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக, பெறப்பற்ற ஒரு சபிக்கப் பட்ட தேசத்தின் குடிமகன் என்ற முறையில் , எனக்கு கோல்டா மெயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும்., கழிவிரக்கத்தையும், சுய வெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தின. நாம் என்ன பாவம் செய்தோம் கீழ்த்தரமான பிறவிகளை நம் தலைவர்களாகப் பெற ? இந்தியாவுக்கு ஏன் இந்த சாபம் ? சதிகாரர்களையும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும், வெளிநாட்டினரரயும் நம் தலைவர்களாகப் பெற்றிருப்பது யார் போட்ட சாபம் ? ஏன் நமக்கு கோல்டா மெயர் போன்ற ஒரு துணிவுள்ள தலைவர் கிட்டவில்லை ? நம் விதிப்பயன் ஏனிப்படி இழிவாக அமைந்தது ? கோல்டா மெயர் வேதனையின் உச்சத்தில் இருந்த போதிலும் தனக்கு பாதுகாவலானாக வேலை பார்த்த ஒரு சாதாரண அரசு ஊழியனை, ஆரத்தழுவி வரவேற்கிறார், காப்பி வேண்டுமா என்று கேட்டு உபசரித்து அவரே காபி போட்டுத் தருகிறார். குடும்பத்தைப் பற்றி பரிவாக விசாரிக்கிறார். அப்பொழுது அவர் பேசும் வசனங்கள் படத்தின் உயிர்நாடி. எந்தவித சட்டத்திற்கும் பிடிபடாத, இஸ்ரேலின் இருப்பையே ஒத்துக் கொள்ளாத கொலை வெறிக் கூட்டத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் நிதானித்து,
"These people vowed to destroy us, Every civilization finds it necessary to compromise with its own values, forget peace now, we need to show we are strong"
என்று கூறி தங்கள் நாடு சட்ட திட்டங்களை நீதி நியாயங்களை மீற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மிகுந்த வேதனையுடன் கூறுகிறார். கொல்டா மெயராக நடித்துள்ள பெண்மணி கொகன் ஒரே காட்சியில் மட்டுமே வந்தாலும் அப்படியே கோல்டா மெயர் என்னும் தலைவரர, அவர் உறுதியை, மன திடத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நான் தியேட்டரில் இந்தப் படட்தைப் பார்த்திருந்தால் அந்தத் தலைவரின் உறுதிக்கு எனது அஞ்சலியாக கரவொலி எழுப்பியிருப்பேன். நமது நாட்டில் எந்தவொரு தலைவருக்கும் இப்படிச் சொலும் திராணி உண்டா ? நெர்வ் உண்டா ?

குழுத் தலைவனாக அவ்னெராக வரும் எரிக் பானா சில காட்சிகளில் நம்மை உலுக்கி விடுகிறார். தான் உயிர் பிழைப்போமா, குழந்தையைப் போய் பார்ப்போமா என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில், தான் ஒரு கொலைகாரனாக மாறி எதிரிகளைக் கொன்று வரும் நிலையில் தன் குழந்தையின் குரலைக் கேட்டவுடன், சொல்லவியலாதா சொகத்தைக் கொட்டி, குலுங்கி அழும் காட்சியில் நம்மை உலுக்கி விடுகிறார். என்னதான் உறுதியான கொலைப் படைத் தலைவனாக இருந்தாலும் தான் பிறவிக் கொலைகாரன் அல்ல, குருதியும், சதையும், மனிதாபிமானமும் நிரம்பிய ஒரு சாதாராண பாசமுள்ள தந்தைதான் என்று உருகுகிறார். மிகச் சிறப்பான நடிப்பு அது.

ஆனால் எந்தவிதமான தர்ம சங்கடங்களிலும் தன் கடமையில் எந்தவொரு யூதனும் தவறி தன் மனசாட்சியின் கேள்விகளை விட தன் தாய் நாட்டின் கட்டளையைப் பெரிதாக மதித்து இடப் பட்டக் கடமையைத் தம்மால் முடிந்தவரை தவறாமால் செய்கின்றனர். 11 பேரில் 9 பேர் கொல்லப் படுகிறார்கள். தீவீரவாதக் குழுத் தலைவன் இரண்டு முயற்சிகளுக்குப் பின்னும் தப்பித்து விடுகிறான். இஸ்ரேல் அரசாங்கம் அவனை விடுவதில்லை என்ற உறுதி பூணூகிறது.

தான் செய்த கொலைகளும், மனசாட்சியின் கேள்விகளும், துர்க்கனவுகளும், முக்கிய தீவிரவாதியைத் தவறவிட்ட குற்ற உணர்வும், தன்னையும் குடும்பத்ததயும் மொசாட் கொன்று விடுமோ என்ற அச்சமும், மாஃபியாக்கள் துரத்துகிறார்களோ, பி எல் ஓ துரத்துகிறதோ, சி ஐ ஏ துரத்துகிறதோ என்று அறியாமல் குழம்பித் தவிக்கும் அவ்னெர் சொல்லொனாத மனக் கலக்கத்துக்கு ஆளாகும் காட்சியை இதை விட அருமையாக யாரும் காட்டி விட முடியாது. இறுதியில் அவ்னெர் மூலமாக ஸ்பீல் பெர்க் என்னும் இயக்குனர் பேசுகிறார். பழிவாங்குவதால் நாம் என்ன சாதிக்கிறோம், மீண்டும் மீண்டும் தீவீரவாதிகள் முளளக்கின்றனர் ? நம்மால் அமைதியை வாங்க முடிந்ததா ? ஒவ்வொரு உயிருக்கும் பதில் நூறு உயிர் என்பது எதில் போய் முடியும் ? என்ற கேள்விகளை இஸ்ரேல் மொசாட் கேஸ் ஆபீசர் எப்ரகிமிடம் எழுப்புகிறார். எப்ராகிம் ஆம், நம் நகத்தை வெட்டினால் கூடத்தான் மீண்டும் முளைக்கிறது அதற்காக வெட்டாமல் இருக்க முடியுமா ? அந்த லக்சுரி நமக்கு உள்ளதா ? அது போன்ற பெருந்தன்மமயைக் கைக் கொள்ளும் நிலையிலா நம் தேசம் இருக்கிறது என்கிறார். அவ்னெரின் அம்மாவோ இஸ்ரேல் தரப்பு நியாய்த்தை இன்னும் அழுத்தமாகக் கூறுகிறார். நம் வீட்டை யாரும் தரப்போவதில்லை, அதை எடுத்துக் கொள்வதையும், பாதுகாப்பதையும் நாம் தான் செய்ய வேண்டும் என்கிறார். குழம்பித் தவிக்கும் தன் மகனன ஆசுவாசப் படுத்தி அவன் செய்தது சரியானதொரு செயல் தான் என்று அழுத்தமாகச் சொல்லுகிறார். அவ்னெரைப் போலவே ஸ்பீல் பெர்கும் குழம்பித் தவிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

என்ன தான் தன் இனத்தின் பழிவாங்கும் போக்கை ஸ்பீல்பெர்க் விமர்சித்தாலும், நம்ம ஊர் கமலஹாசன்களிடமும், தீபா மேத்தாக்களிடமும், அமீர் கானிடமும், , அருந்ததி ராயிடமும் அருகில் கூட வர முடியாது இவரால். யூதராக இருந்தாலும் சாய்வு நிலை எடுக்காமல் நியூட்டரல் ஜல்லி அடித்திருப்பது போல் தோன்றினாலும் பார்வையாளர்கள் மனதில் இந்தப் படம் நிச்சயமாக இஸ்ரேல் மீது அனுதாபம் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. மிக சாமர்த்தியமாக வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்தாலும் உள்ளுக்குள் மக்கள் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறார் ஸ்பீல்பெர்க். உலகின் தலைச்சிறந்த இயக்குனரின் படம் என்பதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகின்றன. படத்தில் அவ்னெருக்கு தகவல் தரும் இன்ஃபார்மரான லூயியும் அவரது தந்தையும் மீண்டும் மீண்டும் தாங்கள் எந்தவொரு அரசாங்கத்தைச் சார்ந்த ஒற்றர்களுக்கும் உதவ மாட்டோம் என்று மறுக்கிறார்கள். அவர்களுக்கு அவ்னெர் யார் என்று தெரியாதா என்ன ? இது போன்ற சிறு குறைகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.

கொலையானது என்னவோ நாட்டின் விளையாட்டு வீரர்கள்தான், 11 பேரேதான், ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் விலை உண்டு, எந்தவொரு யூதனின் உயிருக்கும் மதிப்புண்டு, அவர்களின் ரத்தத்திற்கும், உயிர் பலிக்கும் பதில் சொல்லப் பட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அந்தப் பிரதமர். பாழாய்ப் போன இந்த பாரத தேசத்திலோ, உச்ச நீதி மன்றமே குற்றவாளி என்று சொன்னாலும் தண்டனையை நிறைவேற்றும் திரரணியற்று இருக்கிறோம். தொடை நடுங்கி வெளியுறவு அமைச்சர்கள் தீவீரவாதிக்கு பணம் கொண்டு செல்கிறார்கள் பயணக் கைதிகளை விடுவிக்க,
நம் மாநிலத்தின் ஒரு சின்ன பகுதியாக இருக்குமா இந்த இஸ்ரேல் ? இத்தினிக்கூண்டு இஸ்ரேலுக்கு எத்தனை நெஞ்சழுத்தம், மன உறுதி ? கொலையுண்டது 11 விளையாட்டு வீரர்களே ஆனாலும் அவர்கள்: உயிருக்கும் விலை உண்டு என்று நினைத்த அந்த கோல்டா மேயர் எங்கே, தாகக்ப் பட்டது பாராளுமன்றமே ஆனாலும் விடுதலை செய் என்று சொல்லும் அப்துல் கலாம் எங்கே, சோனியா எங்கே, கம்னியுஸ்டுகள் எங்கே ?

ஒரு யூத உயிரின் விலை மிக மிக அதிகமானது என்ற உண்மையை நிலை நாட்ட எத்தனை கோடி டாலர்களும் செலவானாலும் பரவாயில்லை என்று உறுதி பூணும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் எங்கே, மதுவுக்காகவும், மங்கைகளுக்காவும் நாட்டை விலை பேசும் நம் அதிகாரிகள் எங்கே ?

பழிக்குப் பழி வாங்குவதால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை என்பது கோல்டா மேயருக்கும், இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. இருந்தாலும் தன் நாட்டின் , தன் இனத்தின், இருப்பை நிலை நிறுத்த அதை விடச் சிறந்த வழி எதுவுமில்லை என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நாம் என்ன செய்கிறோம் ? இந்திய விமானம் கடத்தப் பட்ட பொழுது நாம் வெளிபப்டுத்திய கோழைத்தனம் என்ன ? சிவாஜி பிறந்த தேசம், நேதாஜி பிறந்த தேசம், ராஜ புத்திரர்களின் தேசம் என்பதெல்லாம் ஏட்டளவில்தான், நம் வீரமெல்லாம் அடுப்பங்கரை வரையில்தான் என்பதை நாம் மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறோம்.

எனக்கு இஸ்ரேல் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த தேசம் எல்லாவிதமான இடர்பாடுகளையும் தாண்டி நிமிர்ந்து நிற்கத்தான் போகிறது. ஆனால் கேவலம் அப்சலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியாவின் எங்கே சென்று கொண்டிருக்கிறது ? இந்தியாவின் எதிர்காலம் எந்த மாதிரி தலைவர்களின் கையில் உள்ளது ?

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இந்த படத்தில் உள்ளன. அவசியம் பார்க்க வேண்டியதொரு படம். உலக அரசியலில் ஆர்வமில்லாவிட்டாலும் கூட ஒரு தரமான த்ரில்லர் என்ற அடிப்படையிலும் இந்தப் படம் நிச்சயம் பார்க்கத் தகுந்த ஒரு படமே.



அன்புடன்
ச.திருமலை