November 7, 2007

HMV


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு பிரகாஷ் காரத் அவர்கள் சில நாட்கள் முன்பு தன் கட்சி ஏன் இந்திய அமேரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறது என்பதைத் தெளிவாக்கினார்.

அவர் கூறியது:

He said the US was trying to make India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of USA".

சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கத்தான் அமேரிக்கா இந்தியாவுடன் கூட்டு சேர்கிறதாம். 
இருக்கட்டுமே, அமேரிக்கா இந்தியாவுடன் சேர்வதனால் இலாபம் இந்தியர்களுக்குத்தானே ? 

அவருடைய 
சமீபத்திய சாதனையாக இதைச் செய்கிறார்

அவர் சொல்வது :

இப்போது தீபாவளி போனஸ் பீஜிங்கிலிருந்து வந்துவிட்டது போலும், இந்திய அமேரிக்க நட்பை முரிக்கக் கேவலமான செய்கைகளிக் ஈடுபடுகிறார்.

இது தேவையா, ஒரு தனிமனிதனாக எதைவேண்டுமானாலும் யாரைப்பற்றியும் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆளும் கட்சியின் member ஆக இருந்துகொண்டு இப்படி மற்ற ஜனநாயக நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கேவலமாகப் பேசலாமா ?

ராஜ தர்மம் என்பது இது தானா ? 

அதைச் சொல்லிய தருணம் ஒன்றும் தீபாவளி வாழ்த்துச் சொல்லும் போது அல்ல. ஏதோ புஷ் லெனினைக் கேவலமாகப் பேசிவிட்டாராம் அதற்காக இதைச் சொல்லியுள்ளார். அதுவும் ரஷ்யாவிலேயே லெனினின் சிலைகளை தூக்கி வீசிய பின்னர் இவர் லெனினின் திரு உருவச் சிலையைத் திறந்துவைத்து இப்படிப் பேசுகிறார்.

ஜார்ஜ் புஷ் ஒரு காந்தியையோ, நேருவையோ, கேவலமாகப் பேசியிருந்தால் அவரைத் திட்டுவதில் அர்த்தம் உண்டு. இல்லை, ஈராக் போர், 9/11 என்று அவரைத் திட்ட ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு உடைந்த சோவியத்தின் கடந்த காலக் கேவலங்களில் ஒன்றான லெனினைப் பற்றிச் சொன்னால் இவருக்கு ஏன் பற்றிக் கொண்டு வருகிறது ? 

அவருடைய செய்கைகள் எப்படி இருக்கோ இல்லையோ, இந்தியாவுக்கு மட்டும் ஆதரவாக இல்லை என்பது திண்ணம்.