டேனியல் பெர்ல் என்ற அமேரிக்க பத்திரிக்கையாளரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் டாகுமெண்டரி.
The journalist and Jihad என்று தலைப்பு வைக்கப் பட்டிருக்கும் இந்த டாகுமெண்டரி, எட்டு பகுதிகளாகக் கொடுக்கப் பட்டுள்ளது.
daniel perl யார் என்று மறந்துபோயிருந்தால், இதோ, நன் நினைவுகளைத் தட்டி எழுப்ப,
Wall street பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் 9/11 பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது 2002 ல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இஸ்லாமிய ஜிஹாதிக்களால் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டவர். கூகிளில் daniel perl கொடுத்துப் பாருங்கள்.
அவர் தலை துண்டிக்ப்பபடுவதற்கான காரணம், அவருக்கு அல்-காயிதா வுக்கும் பாகிஸ்தானிய ISI க்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி பல அந்தரங்க விஷயங்கள் அவருக்குத் தெரிந்துவிட்டதால் தான் என்கிறது இந்த செய்திப் படம்.
இதெல்லாம் ஏன் பதித்தேன் என்று கேட்டால்,
இவ்வளவு நடக்கிறது, நம் இந்தியாவின் விமானத்தைக் கடத்தி நம் ஜெயிலிருந்து தப்பும் ஜிஹாதிகள் இது போல் பாகிஸ்தானில் போய் ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அமேரிக்க பத்திரிக்கையாளரையே கடத்துகிறார்கள். அவனை வெட்டி அதை டீவியில் ஒளிபரப்பிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் நாட்டு சர்வாதிகாரி அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து உலகத்தில் நடக்கும் தீவிரவாதத்தினை எதிர்க்கும் நாடுகளுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக் கொள்கிறார்.
நம் வெத்துவேட்டு அரசியல்வாதிகளோ, உலக நாடுகளுக்கு நம் மண்ணில் நடக்கும் தீவிரவாதத்திற்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான் என்பது திண்ணமாக நிறுவிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அரசியலை நடத்தாமல், முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செலவு, சோப்பு விற்பது, நரேந்திர மோடியைத் திட்டுவது, இல்லை, ஓசியில் படியளப்பது போன்ற வெட்டிக்காரியங்கள் செய்துகொண்டு அவர்களையும் ஏமாற்றிக் கொண்டு நம்மளையும் ஏமாற்றுகின்றனர்.