"இந்த நெட்ஸ்கேப்புக்கு என ஆச்சுன்னே தெரியல்லையே, இப்ப வராமலே போயிருச்சே" புதிதாக வால் மார்டில் வாங்கிய ஒயர் லெஸ் அடாப்டரை install செய்து கொண்டிருந்தார் தந்தை.
"அப்பா" மகளின் குரல், "ஒரு முக்கியமான விஷயம் பேசனும்",
"சொல்லு, கேட்டுகிட்டே தான் இருக்கேன்"
"நான் ஒருத்தர விரும்புகிறேன்"
"ஓ! அதாவது..."
ஆமா, நான் அவரக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்"
-----
"என்ன விளையாடறியா? இப்பவே ஸ்ரீரங்கத்தப் போய் பிடிக்கிறதா ? நம் படைகள் மிகவும் களைப்பாக இருக்கின்றன, நாளை காலை வரை காத்திருக்கலாமே?" படைத்தளபதி கேட்டான்.
"நான் என்ன தில்லியிலிருந்து இங்கு வந்து ஓய்வெடுப்பதற்காகவா வந்தேன்?" உலுக் கான் கோபமானான். "அங்கே இறந்து கிடக்கும் படைவீரர்களைப்பார்! இப்போது இந்தக் கோவிலுக்குப் பாதுகாப்பு இல்லை, இப்பொழுதே ஊருக்குள் சென்று கோவிலைக் கொள்ளையடிப்போம், காபீர்களைக் கொன்று குவிப்போம், பின்னர் அவர்கள் சிலைகளை உடைப்போம்!"
"கோவில் எங்கெயும் போகாது!"
"ஆனால், அந்த காபீர்கள் சிலையைத் தூக்கி ஒளித்து வைத்துவிடுவார்களே ?, அதைத்தான் பல இடங்களில் பார்த்தோமே, திப்ருபூர், நாராயண்கஞ்ச், நர்சிபட்டனத்திலும் அதைத்தானே செய்தார்கள். நான் மறுபடியும் அதே தவறைச் செய்வதாக இல்லை. இவர்களுக்கு கலாச்சார, வரலாற்று முக்கியத்துவம் கொடுப்பதே இந்த சிலைகள் தானே, இதை உடைப்பது இவர்கள் மனோ பலத்தைத் தகர்க்கும், அல்லாஹ் நன் துணையிருந்தால் நம் இந்த ஜிஹாதில் வெற்றி பெருவோம்."
-----
"அவன் என்ன செய்யறான், அவன் பெயர் என்ன ?" அப்பா கேட்டார்.
"சுஹைல்" என்றாள் மகள், "இப்பத்தான் படிப்பு முடித்து வேலைக்கு apply செய்கிறார், கொஞ்சம் job offer ஸும் இருக்கு"
"அவன் ஒரு..."
"ஆமாம் பா, முஸ்லீம்". "இது ஒரு பிரச்சனையா ? நீங்க எங்களை நல்ல லிபரல் வேலியூஸோடத்தான வளர்த்தீர்கள் ?"
"எனக்கென்னம்மா பிரச்சனை ? infact நீ தான் யோசிக்கவேண்டிய விஷயம் இது."
"இல்லப்பா, அவன் ரொம்ப நல்லவன் பா, நம்மள மாதிரியே நல்ல லிபரல் வேலியூஸ மதிக்கிறவன், அவன் ஒண்ணும் fundamentalist எல்லாம் இல்லப்பா"
"அவன் இது வரை மதத்தைப் பத்தியே பேசுனது இல்ல, நாம அடிக்கடி சந்திக்கிறது, பார் பப் டேன்ஸ் பார்ல இப்படித்தான் போவோம், அவனோட career ல தான் அவனுக்கு interest."
"எனக்கு இப்பவே ஒரு சந்தேகமா இருக்கு" "முதல்ல அடிப்படைவாதின்னா நீ நினைக்கிற மாதிரி குண்டு வைக்கிறவன் இல்ல குண்டக்கட்டிக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிறவன் மட்டும் இல்ல, அமைதியா இதெல்லாம் பாத்துக்கிட்டே சும்மா இருக்குற, சமையத்துல சப்போர்ட்டும் பண்ற பெரும்பான்மை மக்களும் தான்"
"அப்பா, சும்மா, முஸ்லீம்னு சொன்ன உடனேயே முடிவுக்கு வந்துறாதீங்க, அவன கிட்ட பேசுங்க, பிடிக்குதான்னு பாருங்க, பிடிக்கலையான்னு அப்பறமா முடிவு பண்ணிக்கலாம்"
ம்ம்ஹூம் இவ கேக்குற மாதிரி இல்லைன்னு நினைத்துக் கொண்டே, லேப்டாபைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிடு மகள் பக்கம் திரும்பினார் தந்தை.
அவருக்கு அவர் மகள் மேல் தனி அன்பு, அவள் ஒரு மாதக்குழந்தையாக இருந்த போது சிரித்த சின்னஞ்சிரு சிரிப்பு அவர் மனதில் தொன்றி மறைந்தது, "ஆண்டவா, நான் என்ன பாவம் பண்ணேனோ, ஏன் என்ன இதெல்லாம் பாக்கவைக்கிற ?" மனதில் கேள்வியுடன் மகளைப் பார்த்தார். அவள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள், போர்களத்திலிருந்து வந்த செய்திகேட்டு. அவளது கணவன் உலுக் கானின் படையினரால் வீர மரணம் அடைந்தான் என்பது தான் அந்தச் செய்தி.
"பொன்னி, அழாதேம்மா, உன் புருஷன் சண்டையில செத்துருக்கார் -- ஒரு க்ஷத்திரியனுக்கு இதெவிட பெருமை ஏது ?"
"என்ன சொல்றீங்க, கஷ்ட காலத்துல க்ஷத்திரியன், சக்கிலியன்னு பேசிகிட்டு, ?" ஆசுவாசப்படுத்த வந்த பக்கத்துவீட்டுப் பெண் முணுமுணுத்தாள்.
"நான் இனிமே இருக்க விரும்பல, நானும் செத்து வைகுண்டம் போறேன், கிருஷ்ணா! என்னையும் எடுத்துக்கோ!" பொன்னி புலம்பி அழுதாள்.
"அப்படியெல்லாம் சொல்லக்கூடாதும்மா, எனக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்கா, எல்லாரும் ஊரைவிட்டுப் போயிகிட்டு இருக்காங்க. உலுக் கான் ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் அடுத்து தாக்கப் போறதா வேற சொல்றாங்க, முஸ்லீம்கள் வந்தாலே, ஊர்ல இருக்குற மக்களையெல்லாம் கொன்றுவிடுவார்கள், பெண்களை கற்பழிப்பார்கள். குழந்தைகளைக் கடத்திச் சென்று முஸ்லீம்கள் ஆக்கிவிடுவார்கள்"
"நாமளும் இந்த இடத்தைவிட்டுப் போவோம், புதுசா வேறு வாழ்க்கை ஆரம்பிப்போம்"
"கல்யாணம் பண்ணிக்கிறியா ?" அப்பா கேட்டார்.
"ஆமாம்" மகள்.
"இங்க பாரு " என்று தனது லேப்டப்பைக் காட்டி "இதுல புது software ஒண்ணு போட்டேன், அது வேலை செய்யணும்னா இருக்குற செட்டிங்ஸெல்லாம் மாத்தணுமாம், அப்ப நான் இதுக்கு முன்னாடி பண்ணுன எதையுமே பண்ண முடியாது. இப்ப இந்த softwareக்கு தகுந்த மாதிரி என் கம்ப்யூட்டர் செட்டிங்ஸையெல்லாம் மாத்திக்கவேண்டியிருக்கு, விக்கும் போது இது backwards compatible ன்னு சொன்னாங்க, அத நான் அப்புடியே நம்பிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.."
"அப்பா, விஷயத்துக்கு வாங்க"
"சரி, சுஹைல் என்ன plug and play டைப்பா, இல்ல இந்த software மாதிரி மக்கர் டைப்பா ?"
"அப்பா !"
"இதெல்லாம் உன்னை நீயே கேட்டுக்கவேண்டிய முக்கியமான கேள்வி. சுஹைல், நி நினைக்கிற மாதிரி plug and play டைப்னா, எந்தப் பிரச்சனையும் இல்ல".
"இல்லை! இந்த software மாதிரி எல்லாம் தனக்கேத்தமாதிரி மாத்திக்க நினைக்கிற டைப்னா பெரிய்ய பிரச்சனை தான்!"
அவளுக்குத் திடீர் என்று ஏதோ உரைத்தது. அழுகையை நிறுத்திவிட்டாள் பொன்னி.
அவளது தந்தைக்குப் புரிந்து விட்டது, இவள் ஏதோ மனதில் நினைத்துவிட்டாள், அவளை மாற்ற முடியாது என்று!
"உலுக் கான் படை எங்கே இருக்கிறது ?" அமைதியாகக் கேட்டாள்.
"குதிரையில் போனால் ஒரு மணி நேரம் ஆகும், இப்ப நம்ம கிட்ட நேரமில்ல, நம்ம தெற்கால போயி அந்த மலைக்குப் பின்னால ஒளிஞ்சுக்குவோம். ஓடி அடுத்த ஊருக்குப் போறதுக்குப் பதிலா ஒளிஞ்சுக்குறது நல்லது. அந்த மலைக்குப் பின்னாடி நிறைய இடம் இருக்கு, அங்கே ஸ்ரீரங்கத்துப் பெண்கள் எல்லாரும் ஒளிஞ்சுக்கலாம்"
"அப்ப ஆண்களெல்லா என்ன செய்வார்கள் ?"
"அரங்க நாதர் மூர்த்தியை என்ன செய்ய ?" பொன்னி கேட்டாள்.
"லோகாச்சார்ய பிள்ளை மூர்த்தியை மைசூர் பக்கத்துச் சத்திய மங்கலத்துக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே உடையாரிடம் பெரிய படை இருக்கிறது. உலுக் கான் அங்கே தாக்க மாட்டான். ஆனா, கானின் படை சீக்கிரமே கோவிலுக்கு வந்துருச்சுன்னா, அவங்களுக்கு மூர்த்தியை எடுத்துச் செல்ல நேரம் இருக்காது. நடு வழியில் சிக்கிவிடுவர். பகவான் தான் காப்பாத்தனும்."
"என்ன பிரச்சனைன்னு புரியல்லையா...?" அப்பா கேட்டார்.
"இப்ப ஒரு விளக்கத்தோட சொல்றேன், இப்ப இங்க அமேரிக்காவுல நடக்குற ஹலோவீன் எடுத்துக்கோ, ஒரு சில பேருக்குப் பக்கத்துவீட்டுக் குழந்தைகள் வந்து மணி அடிப்பதே பிடிக்காது, கதவுகளில் "do not disturb" எழுதிப் போட்டிருப்பார்கள். சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. இது 'சுத்தமாக எதையும் புதிதாக ஏற்றுக் கொள்ளத்தெரியாத' stage. கொஞ்ச பேருக்கு ஹாலோவீன் பார்டி காஸ்டியூம் போட்டு வர்ர பசங்களுக்கு இனிப்பு கொடுப்பதும் பிடிக்காது, அவுங்கள do not disturb னு போட்டு விரட்டவும் மனசில்லை. அதனால அவுங்க காலிங் பெல் அடிச்சாலும் போயி கதவைத் திறக்கமாட்டார்கள். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குற மாதிரி stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகளுக்கு இனிப்பும் கொடுக்கணும் ஆனால் அடிக்கடி தொந்திரவும் இருக்கக் கூடாது, அதனால அவுங்க, கதவுல இனிப்புக் பாக்கெட்டை மாட்டி வைத்திருப்பார்கள். ஹாலோவீன் பார்டிக்காக வரும் குழந்தைகள் இனிப்பு எடுத்துக் கொண்டு போயிவிடலாம். இந்த stage கொஞ்சம் 'ஒத்துக் கொள்ளும்' stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகள் சந்தோஷமும் மிக முக்கியம், ஆகயால் குழந்தைகளுக்கு இனிப்பு தாங்களே வழங்குவதோடு, இந்த spiderman காஸ்டியூம் நல்லா இருக்கு போன்ற appreciation கொடுப்பார்கள். இது முழுதாக அவர்களுடன் ஒத்துப் போகும், அவர்களுடன் இரண்டரக் கலக்கும் stage 'பங்கெடுத்துக் கொள்ளும்' stage. இப்படி இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வந்தாலும் அதற்கேற்றார் போல் இசைந்து வாழக்கூடியவர்கள். அதாவது, இன்று ஹாலோவீனுக்கு இனிப்பு வழங்குவது ஒரு பண்பாடாக இருக்கிறது, நாளை வேறேதாவதாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் தங்களை ஈசியாக adapt செய்து கொள்வர்."
"அப்பா, நீங்க பிள்ளை வாளுடம் மைசூருக்குச் சென்றுவிடுங்கள். தயவு செய்து அரங்க நாதர் மூர்த்திக்கு ஏந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எனக்குச் சில காரியங்கள் செய்யணும்." என்ற பொன்னி, பணிப்பெண்ணிடம் திரும்பி, "எனக்கு ஒரு குதிரை உடனே வேண்டும், தயார் செய்!" என்று கட்டளையிட்டாள்.
ஏன் ? எதுக்கு ? என்ன செய்யப் போகிறாய் ? முக்கியமா உன்னைப் போலுள்ள இளம் பெண்கள் தான் முதலில் ஓடி ஒளிய வேண்டும் !" என்று சொல்லிய அப்பா, பொன்னியின் கண்களைப் பார்த்து அமைதியானார், அவளின் அம்மாவின் கண்களில் தெரியும் அதே தீர்க்கம். இனி இவள் முடிவை மாற்றா ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும் முயற்சித்தார்.
"அப்பா, உலுக் கான் படைகளை ஒரு சில மணி நேரமாவது தாமதப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. முஸ்லீம் படைகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், அவர்கள் இந்து அரசர்களைப் போல அல்ல, மிருகங்கள் அவர்கள், அவர்கள் முதியவர்களைக்கூட விட்டு வைக்காமல் வெட்டிவிடுவர். யாராவது ஒருவர் அவர்களை நிறுத்தவேண்டும், யாராவது ஒருவர் இந்தப் புதுக்கஷ்டத்துக்கு ஏத்த மாதிரி இசைந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்"
"அதுக்கு நீ என்ன செய்யப் போகிறாய் ?"
"அதை என்னிடம் விட்டுவிடுங்கள், ஒரு க்ஷத்திரியப் பெண் என்ற முறையில் அவர்களை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயம் எனக்குள்ளது. உங்களுக்கு அரங்க நாதர் மூர்த்தியை மைசூருக்கு எடுத்துச் செல்ல போதிய நேரம் கிடைக்கும் படி நான் பார்த்துக் கொள்கிறேன், புறப்படுங்கள்.."
"இப்ப நீ எப்படி இந்த விஷயத்தைப் பார்த்துக்கப் போறன்னு பார்ப்போம்." அப்பா ஆரம்பித்தார். "உனக்கு இந்த ஓபெரா பிடிக்கும் இல்ல ?"
"ஆமா, ரொம்பப் பிடிக்கும்"
"ஒரு argument க்காக சுஹைல் ஓபெராவுக்கே போனது இல்ல, ஆனா அது என்னன்னு ஏதோ தெரியும் ன்னு வெச்சிக்குவோம். கல்யாணத்திற்கு அப்பறம், இதுல ஏதாவது ஒண்ணு நடக்கும், ஒண்ணு, எனக்குப் இஷ்டமில்லாத வேலையை நீயும் செய்யக் கூடாது ன்னு சொல்லி ஓபெராவுக்கு நீயும் போகக்கூடாது, and ஓபெரா ங்குறது கதோலிக்க மதம் சார்ந்த விஷயம்ன்னு சொல்லி தடுக்கலாம்"
"அப்பா, அது intolerance, எதையும் ஏத்துக்காதது, சுஹைல் அப்படி இல்ல"
"இரு, நான் இன்னும் முடிக்கல்ல, ரெண்டாவது, அவனுக்கு இஷ்டமில்லன்னாலும் நீ போயிட்டுவா ன்னு உன்னை அனுப்பலாம். அது ஏத்துக்குறது, அடுத்தது, மூணாவது ஆப்ஷன்ல, அவன் உன்னையும் குழந்தைகளையும் ஓபெரா ஹவுஸுல ட்ராப் செய்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுப்பான், ஆனால் கூட வர மாட்டான். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குறது. நாலாவது ஆப்ஷன்ல அவன் உன்னுடன் ஓபெராவுக்கு வருவான், அவனும் ஓபெரா பற்றிப் படித்து தெரிந்து கொண்டு அதைப்பற்றி கருத்துச் சொல்வான். இது தான் நான் சொன்ன "ஒண்ணாக் கலந்து விடுகிற, பங்கெடுத்துக்குற" best stage. நீ என் பொண்ணு உனக்கு எல்லாத்துலயும் best ஆப்ஷன் தான் வேணும்."
"ofcourse!"
"அதே மாதிரி சுஹைலுக்கு முஸ்லீம் பண்டிகையெல்லாம் கொண்டடும்னு ஆசையிருந்தால், அவனுடன் நீயும் போகனும்.!"
"அதனாலென்ன, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, அப்படித்தான் நீங்கள் எங்களை வளர்த்தீர்கள்"
அதே மாதிரி நீ கோவிலுக்குப் போகணும்னா அவன் உங்கூட வரணும்"
".........." அவள் அமைதியானாள்.
பக்கத்தில் இருந்த கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார் அப்பா.
"அப்பா, அவங்க மதப்படி, அவங்க மத்த மத கோவில்களுக்கெல்லாம் போக முடியாது..!"
"என்ன முட்டாள் தனம், ஜனாதிபதி அப்துல் கலாம் செய்யலைய்யா ?!"
"அது exception ப்பா, சாதாரண முஸ்லீம் செய்ய முடியாது"
"ஏன் முடியாது ?"
"Well, அது தேவையே இல்லையே, நான் தனியாக்கூட கோவிலுக்குப் போவேன்"
"அப்ப உனக்கு எல்லாத்துலயும், best option வேண்டாம். அவனுக்காக விட்டுக் கொடுக்க தயாராயிட்ட "
"அப்படி இல்லையே, "
"அப்படித்தான் இருக்கு"
"அதனால என்ன இப்ப"
"கல்யாணத்துக்கப்புறம் கொஞ்ச நாள் இப்படித் தனியாப் போவ, அப்பறம் போறதே நிறுத்திருவ, உனக்குப் பிறக்கிற குழந்தைகளும் இந்துவாக இருக்க மாட்டார்கள், அவர்களும் முஸ்லீம் ஆயிடுவார்கள். அது தான் நடக்கும்".
"அதுல என்ன தப்பு, எந்த மதமா இருந்தா என்ன ?"
"ஆமா, இதெல்லாம் natural தானேப்பா"
இங்கே அமேரிக்காவுல இனம் மாறிக் கல்யாணம் பண்ணிப் பிறந்த குழந்தைகளெல்லாம் பார்த்திருக்கிறியா ? அவர்கள் எந்த இனத்த்தை போல் இருப்பார்கள் ? அப்பாவா, இல்ல அம்மாவா ?"
"ரெண்டு பேர் மாதிரியும் தான் இருப்பாங்க"
"Nature ஒருத்தர் மாதிரித்தான் இருக்கணும் னு ஒண்ணும் கண்டிஷன் போடுறதில்ல. மசூதிலில தொழுகை பண்ணாத்தான் கடவுள் ஏத்துக்குமா? கோவில்ல பண்ணா ஏத்துக்காதா ?"
"அவங்க ரெண்டையும் பண்ணவேணாமே!" என்றாள்.
"Excellent, அவங்க எங்கெயும் போயி சாமி கும்பிட வேண்டாம், அவங்க பேஸ்பாலும் பாக்கவேணாம், ஓபெராவுக்கும் போகவேணாம், அவங்க பீஃபும் சாப்பிடவேணாம், போர்க்கும் சாப்பிடவேணாம். உன் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னாலயே அவங்களுக்கு கொடுக்குற ஆப்ஷன்ஸக் கட் பண்ணிட்ட, ரொம்ப நல்லது!"
"I am sorry ப்பா, அவரும் எல்லாத்துலயும் எங்கூட பங்கெடுத்துக்கணும், அதே மாதிரி நானும் அவர் கூட எல்லாத்துலயும் பங்கெடுத்துக்கணும்" என்று சொல்லிவிட்டு அவள் மனம் சுஹைலுடனான முதல் சந்திப்பிற்குச் சென்றது.
பாதை கரடுமுரடான பாதை, நன்கு குதிரை ஓட்டத்தெரிந்தவரால் தான் அந்த வழியாகச் செல்ல முடியும், பொன்னி அந்த வழியாக உலுக் கான் படைகள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
ஒரு சில மணி நேரத்தில் உலுக் கான் படைகள் இருக்கும் இடத்தை அடந்தாள், வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். நேராகச் சென்று அங்கே நின்றாள்,
"உங்கள் தலைவன் எங்கே" என்றாள்.
ஒரு பெண்ணிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுப் பழக்கமில்லாத போர் வீரர்கள் அவளின் பின் புறத்தைப் பிடித்து அவளை குதிரயின் மீதிருந்து இறக்குனர்.
"நான் உங்கள் தலைவருக்குச் சொந்தமான பொருள்" என்று சொன்னாள்.
உடனே அவர்கள் பயந்து தங்கள் பிடியை தழர்த்தி தலைவருக்கு செய்தி அனுப்பினர். உள்ளிருந்து அழைத்துவரச்சொல்லி உத்தரவு வந்தது.
"ஹலோ! " அப்பாவின் குரல்...சுஹைலுடனான முதல் சந்திப்பிலிருந்து திரும்பி வந்தாள்...
"நான் என்ன கேக்குறேன்ன்னா, அவரைக்கட்டிகிட்டா, உன் குழந்தைகளுக்கும் உனக்கும் இப்ப உனக்கு கிடைக்கிற best option கிடக்குமா, அவர் முழுசா ஒத்துப் போவரா, adapt பண்ணிக்குவாரா ?"
ஏம்பா, இந்த adaptation ல யே வந்து நிக்குறீங்க ?"
"adaptation தான் வாழ்க்கையே!, அப்படிப்பட்ட மன நிலை இருந்தால் தான் "நம்மளவிட வித்தியாசமாம் யோசிக்கிறவங்களோட நம்ம ஒத்துப் போக முடியும், இப்ப, பெண்கள் ஏன் ஆண்களைவிட அதிக நாள் வாழ்கிறார்கள் தெரியுமா ? அவர்கள் உடல் காலத்திற்கேற்றார் போல் இசைந்து கொடுக்கும். வயசுக்கு வர்ரப்ப ஒரு மாதிரி, பிள்ளை பெத்துக்குறப்ப ஒரு மாதிரி, வயசானப்பிறகு ஒரு மாதிரின்னு adapt செய்து கொள்ளும் பெண்ணின் உடல். எங்கே இந்த இசைந்து கொடுப்பதைப் பார்க்குறியோ அங்கே தான் தொடர்ச்சி இருக்கும், நான் இதை கிஷோர்-பாலு phenomenon ன்னு சொல்லுவேன்"
"கிஷோர்- என்னது?"
"பெரிய பெரிய பாடகரகள் எல்லாம் வந்து போயிட்டே தான் இருந்தார்கள். முகேஷ், ரஃபி, மன்னாடே ஹேமந்த் குமார்., ஆனா கிஷோர் குமார் மாதிரி யாருமே நிக்கல. ஏன் தெரியுமா, adaptation. அவர் அவரோட குரல ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்திப் பாடுவார். அதே மாதிரி தான் SPB யும். ஆனா SPB ஹீரோவுக்கு ஏத்த மாதிரி குரலை மாற்றுவது மட்டுமில்லாமல் பல மொழியிலயும் பாடுறார், அவர் சல்மான் கான் குரலுக்கேத்த மாதிரி மாடுலேட் செஞ்சு ஹிந்தில கூட பாடுறார், ஆனா, ஜெயச்சந்திரன், ஏசுதாஸ், பி.பீ. ஸ்ரீனிவாஸ் எல்லாம் இவர மாதிரி செய்ய முடியல."
"அவங்க adapt பண்ணிகிட்டாங்க, அதனால ஃபீல்டுல நின்னாங்க"
"எந்தச் சமுதாயம் இது மாதிரி மாறும் சூளலுக்கு adapt செஞ்சுக்குறதோ அது தான் பெரிய நாகரீகமா வளர்ச்சி அடையும்"
"இன்றைய சூளல்ல, மக்களாட்சிக்கு எந்த நாடு இசைகிறதுங்குறது தான் கேள்வி. எவ்வளவோ குறை நிறை இருக்கலாம் ஆனால் மக்களாட்சி இருந்தால் நல்லது. இன்னிக்கு நம்ம மேற்காசியாவில் பார்க்கும் பிரச்சனைக்கெல்லாம் காரணம் இஸ்லாம் கொடுத்த இந்த adaptation இல்லாத சமுதாயம் தங்களை புதிய உலகுடன் எப்போதும் பிரச்சனைக்குள்ளாக்கொள்கிறது என்பதனால் தான். கிறுத்தவத்திற்கு ஒரு renaissance தேவைப்பட்டது என்றால் யூதத்திற்கு ஒரு ஹோலோகாஸ்ட். இஸ்லாமுக்கு இன்னும் அந்த அறிவு வரவில்லை. இந்த அடிப்படை தான் தனி மனிதனுக்கும் ..."
"கல்யாணம்...அதப்பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருக்கோம் நம்ம, நீங்க தான் எதுலெயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டீங்க.."
"ம்ம்ம், கல்யாணம், இந்த விஷயத்துல தான் முஸ்லீம்கள் கொஞ்சம் தெளிவா நடந்துக்குறாங்க." அப்பா தொடர்ந்தார். " முக்கியமா இஸ்லாமியப் பெண்களை வெளியில் கல்யாணம் செய்துகொள்ள இஸ்லாத்தில் தடை உள்ளது, இல்லைன்னா கட்டிக்கப் போற பையன் இஸ்லாத்துக்கு மாறனும், அதே தடையை ஆண்கள் மீது விதிப்பதில்லை. ஏன்னா, பெண்கள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் மெஷின்கள் என்ற எண்ணம் தான் காரணம். எந்த நாட்டுல பார்த்தாலும், இப்படித்தான் இருக்கும், முஸ்லீம் ஆண்கள் தான் வேறு நாட்டுப் பெண்களை மணமுடிப்பர். ஆனால் முஸ்லீம் பெண்கள் வேறு நாட்டு ஆண்களை மணக்க மாட்டார்கள். இந்தியாவில் நடந்த 600 ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியில் ஒரு முகலாய மன்னனும் தனது பெண்ணை ஒரு இந்து அரசனுக்கு மண முடிக்கவில்லை. அந்த காலத்துல அடிக்கடி போருக்குச் செல்லும் அரச குடும்பங்கள் திருமணம் மூலம் ஒன்றிணைவது நடந்துவந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மாதிரி. கிரேக்கர்கள், ஹுன், என்று யாரெல்லாம் இந்தியாவுக்குள் படை எடுத்துவந்தார்களோ எல்லோரும் அப்படிச் செய்தனர். கிரேக்க அரசர்கள் இந்திய அரச பரம்பரைப் பெண்களையும், அதே போல் இந்திய அரசர்கள் கிரேக்கப் பெண்களையும் மணமுடித்தனர். ஆனால் இதெல்லாம் இஸ்லாமியர் வந்த பிறகு நடக்கவில்லை. இந்து ராஜாக்கள் தான் பெண்களை முகலாய மன்னர்களுக்குக் கொடுத்தனர். பதிலுக்கு அவர்கள் வீட்டில் பெண் எடுக்க முடியவில்லை. கொடுக்கல் இருந்தால் வாங்கலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்சனை தான். இஸ்லாமியர் இருக்கும் எல்லா நாடுகளிலும் இதே பிரச்சனை தான். அவர்கள் கொடுக்க இசையாததால் வரும் பிரச்சனை இது. பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஐரோப்பா என்று எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைக்குள்ளாகின்றனர்."
"சுஹைல் அப்படித்தான் இருப்பான்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க?"
"இப்ப அப்படி இல்லாம இருக்கலாம். ஆனா, வயசாக ஆக அப்படி மாறலாமில்லையா ? இங்கே, இங்கிலாந்து, நெதர் லாந்து, ஆஸ்திரேலியா ல எல்லாம் முஸ்லீம் ஆண்கள் வெள்ளை இனப்பெண்ணை மண முடித்துப் பெண் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் திடீர் என்று அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு, சவுதி, பாகிஸ்தான் னு காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் நல்ல லிபரலாகத்தான் இருந்தார்கள், சின்ன வயதில் ஆனா ஒரு 45 ஐ த்தாண்டும் போது அடிப்படை வாதிகள் ஆயிடுறாங்க, இதை, Midlife crisis ன்னு சொல்லுவாங்க. இந்த 45 வயசுக்கப்பறம் இருக்குற காலத்துல அவங்க அடி மனசுல என்னவா இருந்தாங்களோ அப்படி மாறிவிடுவார்கள். சிலர், வேலை, வேலை என்று workaholic ஆயிடுவார்கள், சிலர் சின்ன வயதுப் பெண்கள் பின்னாடி அலைவார்கள். இதெல்லாம் எந்தச் சமுதாயம் adaptation செய்யத் தெரியாமல் இருக்கிறதோ அந்தச் சமுதாயத்து ஆண்கள் செய்யும் வேலை. எந்தச் சமுதாயத்தில் இசைந்துகொடுத்துப் போதல் ஒரு கொள்கையாக இருக்கோ அங்கே, midlife crisis ன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அவங்களுக்கு, பாலக் கொதிக்க வைக்கணும்னா பாலைக் கொதிக்கவைப்பார்கள், குப்பையை சுத்தம் செய்யணும்னு தோனினா அதைச் செய்வார்கள். குப்பைன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது...!"
"அப்பா...! இப்ப அதவிட முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கோம்....அத அப்பறம் பாத்துக்கலாம்"
சரி, நான் சொல்ற மாதிரி adapt பண்ணிக்கத் தெரிஞ்ச ஆளாப்பாரு. மத்ததெல்லாம் தானா வந்துரும்!"
"சுஹைல் அப்படி எல்லாம் இருக்கமாட்டான் பா! ஏன் நீங்க கவலைப்படறீங்க?"
அவன் நல்லவனாவே இருக்கட்டும், ஆனா, நீ அதை சரியான்னு பாத்துக்க. ஒரு சோதனை பண்ணிப்பாரு..!"
"இது தான் எனக்குச் சோதனைக்காலம்." கணவனை இழந்த பொன்னி மனதில் நினைத்துக் கொண்டே உலுக் கான் கூடாரத்தில் நுழைந்தாள். அவள் ஆடைகளை விலக்கிவிட்டிருந்தாள்.
உலுக் கான் கண்களாலேயே அவளை கற்பழித்துக்கொண்டே, "பெண்ணே, என்னவேண்டும்?"
"என் கணவனை உங்கள் படை கொன்றுவிட்டது ?"
உலுக் கான் கூடாரத்துக் காவலாளிகள் உஷார் ஆயினர். ஏதாவது கொலை முயற்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில். "எங்கள் சட்டத்தின் படி, வெற்றி கொண்டவர்கள் என்னை இந்த இரவுக்குள் ஏற்றுக் கொள்ளவேண்டும், இல்லையென்றால் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று விடவேண்டும், எனக்கு அப்படிப் போக இஷ்டமில்லை"
"இந்த நாடைப் புரிந்துகொள்ளவே முடியல்லையே!" தாடியைத் தடவிக்கொண்ட உலுக் கான் மனதில் கேள்வி எழுந்தது. "எங்கிருதாவது ஒரு 40 மைல் தள்ளிப்போனால் புது சட்டம், புது விதி, சில பெண்கள் அவர்கள் கணவனின் சிதையில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். சிலர் போர் களத்திற்கு வந்து இறந்த கணவனின் ஆயுதம் எடுத்தே சண்டைக்கு வருகிறார்கள்..இன்னும் சிலர் இப்படி!" பாரசீகத்திலிருந்து அல்ஜீரியா வரை ஒரே கடவுளை வணங்கி ஒரே மொழி பேசும் மக்களை அறிந்த உலுக் கானுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.
"இன்று இரவு போருக்குச் செல்ல வேண்டும், ஆக நீ காத்திருக்கவேண்டும்!" அவன் கண்கள் அவள் இடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது.
"இன்று இரவு இல்லையென்றால் நீங்கள் என்னை வலுக்கட்டாயமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும், உங்கள் போரை சற்று தாமதப்படுத்தினால் நான் உங்களுடையவளாகிவிடுவேன் இப்போதே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்"
"இந்த முடிவு தான் உன் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவு" என்றார் தந்தை. "உனக்கு நல்லது எதுவோ அதை நீ தான் செய்யணும், நான் வழி தான் சொல்ல முடியும். நூற்றாண்டுகள் இசைந்து கொடுத்து வாழும் கலாச்சாரத்தில் பிறந்த உனக்கு எப்போதுமே பிரச்சனைக்குள்ளாகும் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறந்தவனை கல்யாணம் செய்துகொள்ள முடியுமா ?"
"அப்பா, நான் என் இந்துக் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துத்தான் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று என் நினைக்கிறீர்கள் ?"
"இந்துக்கலாச்சார, முஸ்லீம் கலாச்சார, அமேரிக்க கலாச்சாரம் என்றெல்லாம் இல்லை. இரண்டே விதமான கலாச்சாரம் தான் இருக்கிறது. சரியான கலாச்சாரம், தவறான கலாச்சாரம். முதலாவது இசைந்து வாழக்கூடியது, இரண்டாவது இசைந்து கொடுக்கத் தெரியாதது. அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொல்வாது தவறாக கலாச்சாரம். வேற்று மதப் பெண்களை வழைத்துப்போட்டுக் கொள்வதும் அதே வேளையில் தன்னினப் பெண்களை வெளியில் போகத் தடை விதிப்பதும் தவறான கலாச்சாரம். முஸ்லீம்கள் அப்படி இருப்பதனால் இது முஸ்லீம் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. நீ கேக்கவேண்டியது என்னனா, சுஹைல் சரியான கலாச்சாரத்தை உடையவனா ? என்ற கேள்வி தான்"
"நான் இப்பப் போகணும் பா, நிறையவே பேசிட்டோம்!"
"அவனப்பாக்கப் போறியா..."
"ஆமா...இன்னும் ஒரு மணி நேரத்துல.."
"சு" என்றார்...
"என்ன ?"
சமஸ்கிருதத்தில் "சு" என்றால் சுபம் என்பதற்கான வேர்ச்சொல், "நல்ல" என்ற பொருள் வரும். சுப்பிரபாத என்றால் நல்ல காலைப்பொழுது சுபாஷா என்றால் நல்ல வார்த்தைகள், அதே மாதிரி சுஹைலும் இருக்கட்டும்! அவரைப்பற்றிய என் பயமெல்லாம் தவறாகட்டும், அவர் ஒன்றும் 100% adapt பண்ணிக்கிற ஆளாக்கூட இருக்கவேணாம், நாம யாரும் அப்படி இல்ல. கொஞ்சம் திறந்த மனது இருந்தால் போதும்...just in case..!" தந்தை அங்கிருந்த chest ல் இருந்த draw வைத்திறந்து அதைக் கொடுத்தார்...
"இது எனக்குத் தேவைப்படாதுப்பா.."
"இருக்கட்டும் வெச்சுக்கோ, எதுக்கும்...."
கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்தாள். "இந்த முன் விளையாட்டை ரொம்ப நேரம் வெச்சிக்கணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டாள் பொன்னி. பிள்ளைவாளுக்கு ஸ்ரீரங்கத்துச் கிருஷ்ணர் மூர்த்தியை மைசூருக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நேரம் கொடுக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.
"அடுத்ததா என்ன பண்ணப்போறோம் ?" சுஹைல் கேட்டான். அப்போது தான் காரின் பின் சீட்டில் ஒரு முத்தம் கொடுக்கும் படலம் முடிந்திருந்தது. அவள் உடனே பதில் சொல்லவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள், பார்கிங் லாட்டில் கடைசியாக இருந்தது கார்.
"சீக்கிரமே.." என்றாள் சிறிது நேரம் கழித்து.
வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர். படு பயங்கர traffic ரோட்டில்.
"ஏதாவது Accident நடந்திருக்கணும். நம்ம பார்ட்டிக்கு கரெக்ட் டைமுக்குப் போகணும்னா வேகமாப் போகணும்னு நினைக்கிறேன்."
"சொல்ல மறந்துட்டேன், என் கசின் ரெண்டு பேரை வரச்சொல்லிருக்கேன் பார்ட்டிக்கு, சுபோத், பிரணை. பிரச்சனையில்லையே?"
"ஓ, sure, தாரளமா வரட்டும், எந்தப் பிரச்சனையுமில்ல"
"நீ ஏன் உன் கசின் ஷமீமை கூப்பிடக்கூடாது. அவ நல்லப் பொண்ணு actually, பிரணைக்கு ரொம்பப் பிடிச்சப் பொண்ணு. அவளுக்கும் பிரணையைப் பிடிச்சிருக்கு போலருக்கு. போன get together ல அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குறத நீ பாத்திருக்கணும்."
"Damn, traffic" என்று ஸ்டியரிங் வீல் மீது கையால் இடித்தான். அவள் கேட்டதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை.
"அப்ப, ஃபோன் பண்ணிக் கூப்பிடறியா ?" அவள் கேட்டாள்..
"யாருக்கு ஃபோன் போட்டு யாரைக் கூப்பிடுறது "
"ஷமீம்! நான் சொன்னதக் கேட்டியா இல்லையா?"
"ஓ, அதுவா, அது நடக்காது..thats not going to work out"
"ஏன் ?"
"ஆமா அது அப்படித்தான் விடு, அப்பறம் ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க, அதுவும் சின்ன அபார்ட்மெண்ட் தான்"
"சரி, நாம ஒரு இடத்துக்குப் போகணும், வர்ர ரைட்ல கட் பண்ணிக்கிறியா ?"
"Sure, எங்கே?"
"கோயிலுக்கு"
"நான் உன்ன ட்ராப் பண்ணிடறேன்"
"நீ என்ன ட்ராப் பண்ணவேணாம், நாம சேர்ந்து போகணும்"
"என்ன சொல்ற ?"
"நீ எங்கூட வரணும்னு சொல்றேன்..! நான் உங்கூட கடைசி வரை வரணும்னு எதிர்ப்பார்க்குறல்ல ?"
"ஆனா என்னால அது முடியாது"
"அது தான் ஏன் ?"
"நீ ஏன் இப்படி behave பண்ற "
"வண்டியை நிறுத்து.." பக்கத்து மாலின் பார்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தினான் சுஹைல்.
"ஏன் உள்ள வர மாட்டேன்னு சொல்ற? நீ மசூதிக்குப் போற தானே ?"
"ஆமா, ஆனா நான் ஏன் கோவிலுக்கு வரணும் ? நீ என்ன பண்ணனுமோ அதை நீ பண்ணிக்க உனக்கு உரிமையிருக்கு"
"சுஹைல்" காரின் கதவைத் திறந்து வெளியேறியபடி தொடர்ந்தாள் " நான் உன்னப் பாக்க விரும்பல"
"என்ன சொல்ற...? ஏன் ?"
"நான் விரும்பல அவ்வளவுதான்.." கொஞ்ச நேரத்திற்கு முன்பு சுஹைல் பேசிய அதே தோறணையில் இந்தப் பதில் அவளிடமிருந்து வந்தது.
"நீங்க என்ன, அவ்வளவு தானா ? " உலுக் கான் தன் உடைகளை சரி செய்துகொண்டிருந்தான்.
"நான் இப்ப போகணும், ஸ்ரீரங்கத்து சிலையில் ரெண்டு ரத்தினக்கற்கள் இருக்கிறதாம், நீ இங்கேயே இரு, நான் அதை உடைத்து எடுத்து வருகிறேன். அதை வைத்து நீ பிழைத்துக் கொள்ளலாம்"
ஒரு வெற்றிப் புன்னகை தான் உலுக் கானுக்கு அவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.
"அது இன்னேரம் மைசூருக்குப் போயிருக்கும், அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சில மணி நேரம் கிடைத்துவிட்டது" என்றாள்.
"அடித் தே$%$%, என்னை ஏமாற்றிவிட்டாயா ?" உலுக் கானின் முகம் கோபத்தில் சிவந்தது.
"ஸ்ரீரங்கத்துப் பெண்கள் உன் இந்த முகத்தைப் பார்க்க காசு கொடுப்பார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் பொன்னி.
"உன்ன என்ன செய்கிறேன் பார்..."
"என் கணவரை கொன்று விட்டார்கள் அதைவிட கொடிய தண்டனை வேறேது. உன்னால் என்ன செய்ய முடியும் ?"
"யாரங்கே, இவள் உங்களுக்குத்தான்...என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்!, சீக்கிரம் குதிரைகளைத் தயார் செய்யுங்கள், கோவிலைப் பிடிக்கவேண்டும்"
எட்டு காவலாளிகள் அவளை நெருங்கிவந்தனர, பசியால் தவிக்கும் ஓனாய்க்கூட்டம் போல.
"கிருஷ்ணா, திரௌபதியின் மானத்தைக் காத்தது போல என்னையும் காக்க மாட்டாயா " என்று எண்ணிக்கொண்டே தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கடித்து அதிலிருந்த வைரத்தை முழுங்கினாள். வன்புணர்ச்சி நடக்கும் முன்னரே அவள் அவளது கணவனை அடைந்தாள்.
"நில்லு" சுஹைல் கத்தினான்.
"முடியாது"...அவள் நடந்து கொண்டிருந்தாள்.
"நீ இப்படிப்பண்ண முடியாது"
"பாத்துகிட்டே இரு.."
"நில்லுடீ" கையைப் பிடித்து இழுத்தான்...
அவள் உதரிவிட்டு வேகமாக நடந்தாள். அதைப் பார்த்து பார்க்கிங் லாட்டில் யாரோ 911 க்கு ஃபோன் செய்தனர்.
"வாடீன்னா..."
சடார் எனத் திரும்பி டேசரைக் காண்பித்தாள்.
"நீ செய்ய மாட்ட!" என்றான்
அவனது நெஞ்சில் வைத்து fire செய்தாள், ஐம்பதாயிரம் வோல்டேஜ் அவன் மூளையையும், உடலையும் 15 நிமிடத்திற்குப் பிரித்துவிட்டது. ஒரு வினாடியில் மூர்ச்சையாய் கீழே விழுந்தான். 3 நிமிடத்தில் போலீஸ் அங்கே வந்தது.
அவள் பக்கத்திலிருந்த pay phone ல் அப்பாவை அழைத்தாள். அவர் வந்து இவளை பிக்கப் செய்துகொண்டு இருவரும் வீடு திரும்பினர்.
(இது ஒரு சுறுக்கப்பட்ட கதை. மூலம் இங்கே)
असतोमा सद्गमय। तमसोमा ज्योतिर्गमय। பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு...
Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts
February 25, 2007
February 24, 2007
நான் இங்கேயே இருக்கிறேன்
'நான் யார் என்று இந்த வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது?'
'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'
'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'
'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'
தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.
'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'
'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'
- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.
இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.
'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.
ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.
நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.
தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.
தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.
அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.
'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'
இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.
'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.
அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.
'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'
சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.
'என் கை, என் கால் என்று சொல்வது...'
'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'
கையைப் பார்த்துக் கொண்டார்.
'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'
'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'
'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'
வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.
மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.
அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.
'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'
வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.
வெளியே ஏகக் கலவரம்.
தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.
ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.
'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.
வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.
'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.
முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.
''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.
"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.
"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"
வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.
"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"
பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.
தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.
அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.
விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.
ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.
வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.
"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"
"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.
"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.
"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.
எங்கும் நிசப்தம்.
தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.
உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.
(நிறைந்தது)
நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.
'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'
'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'
'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'
தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.
'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'
'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'
- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.
இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.
'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.
ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.
நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.
தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.
தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.
அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.
'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'
இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.
'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.
அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.
'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'
சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.
'என் கை, என் கால் என்று சொல்வது...'
'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'
கையைப் பார்த்துக் கொண்டார்.
'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'
'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'
'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'
வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.
மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.
அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.
'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'
வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.
வெளியே ஏகக் கலவரம்.
தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.
ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.
'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.
வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.
'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.
முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.
''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.
"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.
"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"
வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.
"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"
பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.
தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.
அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.
விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.
ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.
வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.
"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"
"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.
"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.
"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.
எங்கும் நிசப்தம்.
தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.
உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.
(நிறைந்தது)
நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.
யார் நீ ? எங்கிருக்கிறாய் ?
அந்த ஊரின் பெயர் அழகாபுரி. பெயருக்கேற்ப மிக அழகான ஊரது. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலுமாய் வளம் செழிக்க மக்கள் குறையொன்றும் இல்லாமல் வாழ்ந்திருந்தனர்.
இயற்கை குறை வைக்காவிட்டாலும் மனிதன் எதையாவது உருவாக்கிக் கொள்வது வழக்கம் அல்லவா? அந்த ஊரிலும் அப்படி ஓர் அக்கப்போர் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடையே ஒற்றுமை குலைந்தது.
ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்று இரு குழுக்கள் ஏற்பட்டு அந்த ஊரின் நிம்மதி பறி போனது. இரண்டு பக்கங்களிலும் மூடர்களும், அயோக்கியர்களும், சிந்தனாவாதிகளும் இருந்தனர். ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை.
ஆனால் நாத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களும் அயோக்கியர்களும் சும்மா இருக்காமல் ஊரை அடிக்கடி கலகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிந்தனாவாதிகளும் பல நூதனமான கருத்தாக்கங்களை உண்டாக்கிக் கலகம் விளைவிக்கக் காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
ஆனால் பெருவாரி ஆத்திக மக்கள் அவர்கள் பக்கம் கூட போவது கிடையாது. அவர்களை ஆத்திகர்களாக மாற்ற முயற்சி செய்யவும் இல்லை. ஆனாலும் நாத்திகர்கள் தாங்களாகவே ஓர் எதிரியைக் கற்பித்துக் கொண்டு ரகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகமாகி வந்தது.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த ஊரின் தலைவர் இந்த நாத்திகவாதிகளின் அட்டகாசங்களின் மூலம் பதவியைப் பிடித்தவர். ஆதலால் இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் காணாதது போல இருந்து விடுவார்.
'கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது நாங்கள்தான்' என்று கூறிக் கொண்டு மக்களை மிரட்டத் தொடங்கினர் நாத்திகர்கள். தலைவர் உதவியால் கோவில் நிர்வாகிகளாகவும் மற்றும் கோவில் சம்பந்தமான பொதுநிதியைப் பராமரிக்கும் குழுவிலும் அவர்கள் ஊடுருவி இருந்தனர். ஆண்டவனுக்கு எதற்கு செல்வம், ஏழைகளுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றித் தாங்கள் செல்வந்தர்களாக மாறி வந்தார்கள். திருவிழாக்களில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை மானபங்கப் படுத்திவிட்டு 'ஆண்டவன் வந்து உங்களைக் காப்பாற்றுவான் பாருங்கள்' என்று கேலியும் பேசினர்.
ஆத்திகர்கர்களோ, ஆண்டவன் உண்மையிலேயே ஏதாவது அவதாரம் செய்து தங்களைக் காப்பாற்ற வரமாட்டானா என்று ஏங்கி வேண்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாற்போல் அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்து சேர்ந்தார். ஆத்திகர்கள் அவரைத் தங்கள் துன்பம் துடைக்க ஆண்டவனே நேரில் வந்ததாய்க் கருதினர். எல்லோரும் அவரிடம் நாத்திகக் கோஷ்டியின் அட்டகாசத்தை எல்லாம் ஒரு பாட்டம் சொல்லி அழுதனர். அற்புதம் ஏதாவது நிகழ்த்தியாவது தங்களைக் காக்க வேண்டினர்.
அந்தச் சித்தர் சிரித்தார்.
'நாத்திகக் கோஷ்டியில் இருக்கும் உண்மையான அறிஞர்களையும் சிந்தனையாளரையும் வாதத்தால் திருத்திவிட முயற்சி செய்கிறேன். அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அயோக்கியர்களைத் திருத்துகிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. பார்ப்போம். நீங்கள் போய் அவர்களை அழைத்து வாருங்கள்' என்றார்.
நாத்திகர் பக்கமிருந்து அறிஞர்களும் சிந்தனையாளரும், இந்தச் சித்தரை வாதத்தில் வென்று அவரை இந்த ஊரை விட்டே துரத்துவோம் என்ற ஆவலில் வாதம் செய்ய முன்வந்தனர்.
மலையடிவாரத்திலுள்ள குகை ஒன்றின் வாசலில் கூட்டம் நடந்தது. தன்னைப் பெரிய சிந்தனையாளனாகக் காட்டிக் கொண்ட தலைவரும் கலந்து கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. நாத்திகக் கோஷ்டியின் பல விதண்டாவாதங்களுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்தார் சித்தர்.
நேரம் போகப்போக விதண்டாவாதம்தான் வளர்ந்ததே ஒழிய நாத்திகர் தரப்பு எதையும் ஏற்பதாயில்லை. கடவுளையும் அவருடைய சக்தியையும் நேரில் கண்டால்தான் அடங்குவார்கள் போலத் தோன்றியது.
சித்தரும் கடைசியில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் குகை வாயிலில் ஒரு கல்லை நட்டு ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாரணம் செய்து இதுதான் கடவுள் என்று சொல்லி நாத்திகவாதிகளின் கேள்விகளுக்குக் கடவுளே இனி பதில் சொல்வார் என்றார்.
நாத்திகவாதிகள் சிரித்தனர். கல் எப்படித் தங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என்று கேலி பேசினர். சிலர் சித்தரைத் திட்டவும் செய்தனர், தங்களைக் கேவலப் படுத்துகிறார் என்று. ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்போம் என்று தலைவர் சம்மதிக்க, அதற்குப் பதில் வராவிட்டால் சித்தர் ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.
சித்தர் சம்மதம் என்றார்.
நல்ல குரல்வளம் கொண்ட தலைவர், நாத்திகர் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முன்வந்தார்.
எங்கும் நிசப்தம்.
தலைவர் கல்லின் முன்னால் போய் நின்று உரக்கக் கேட்டார்.
'யார் நீ எங்கிருக்கிறாய்?'
யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லிடமிருந்து பதில் வந்தது. அதுவும் ஒரு கேள்வியாக.
'யார் நீ எங்கிருக்கிறாய்?'
அது கடவுளே கேட்டாரா அல்லது வெறும் எதிரொலியா என்று யாருக்கும் புரியவில்லை. தலைவரின் அல்லக்கைகள் இது ஏமாற்று வேலை என்று கூவ ஆரம்பித்தன. ஆனால் தலைவர் மட்டும் சற்று அயர்ந்து போயிருந்தார். அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அமைதியாய் நின்றிருந்தார். அருகிலிருந்து
கேட்ட அவர் காதுகளில், ஒலித்த குரல் சித்தர் குரல் போலவும் தோன்றியது.
திரும்பிப் பார்த்தார்.
பின்னால் தொலைவில் அவர் கண்மூடிக் கைகூப்பி நின்றிருப்பது தெரிந்தது.
கண்திறந்த அந்தச் சித்தர் தலைவரை அருகில் அழைத்து அவர் தோள்மேல் கைபோட்டு குகைக்குள் அழைத்துப் போனார்.
'வா என் செல்லமே!' என்று அவர் வாஞ்சையாய் அழைத்தது தந்தையையே பார்த்து வளர்ந்திராத தலைவருக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே போனார். உள்ளே போனதும் அவரை அருகில் அமர்த்தி அந்தச் சித்தர் சொன்னார். 'குழந்தாய், கல்லின் மூலம் கடவுள் எப்படிப் பேசினார், அது என் குரலா, கடவுளின் குரலா, அல்லது வெறும் எதிரொலியா என்று ஆராய்ச்சி செய்யாதே. அது வீண்வேலை. ஆனால் திருப்பிக் கேட்ட அந்தக் கேள்வியை மட்டும் மனதில் வை!
உண்மையில் நீ யார் எங்கிருக்கிறாய் என்று தேடிக் கண்டுபிடி. கடவுளைச் சுலபமாய்க் கண்டுபிடிக்க அது ஒன்றே வழி' என்று சொல்லி, தலைவர் கையில் ஒரு பெரிய வெங்காயத்தைக் கொடுத்தார்.
ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு ஆச்சரியம்.
தொடரும்..
இயற்கை குறை வைக்காவிட்டாலும் மனிதன் எதையாவது உருவாக்கிக் கொள்வது வழக்கம் அல்லவா? அந்த ஊரிலும் அப்படி ஓர் அக்கப்போர் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடையே ஒற்றுமை குலைந்தது.
ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்று இரு குழுக்கள் ஏற்பட்டு அந்த ஊரின் நிம்மதி பறி போனது. இரண்டு பக்கங்களிலும் மூடர்களும், அயோக்கியர்களும், சிந்தனாவாதிகளும் இருந்தனர். ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை.
ஆனால் நாத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களும் அயோக்கியர்களும் சும்மா இருக்காமல் ஊரை அடிக்கடி கலகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிந்தனாவாதிகளும் பல நூதனமான கருத்தாக்கங்களை உண்டாக்கிக் கலகம் விளைவிக்கக் காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
ஆனால் பெருவாரி ஆத்திக மக்கள் அவர்கள் பக்கம் கூட போவது கிடையாது. அவர்களை ஆத்திகர்களாக மாற்ற முயற்சி செய்யவும் இல்லை. ஆனாலும் நாத்திகர்கள் தாங்களாகவே ஓர் எதிரியைக் கற்பித்துக் கொண்டு ரகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகமாகி வந்தது.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த ஊரின் தலைவர் இந்த நாத்திகவாதிகளின் அட்டகாசங்களின் மூலம் பதவியைப் பிடித்தவர். ஆதலால் இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் காணாதது போல இருந்து விடுவார்.
'கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது நாங்கள்தான்' என்று கூறிக் கொண்டு மக்களை மிரட்டத் தொடங்கினர் நாத்திகர்கள். தலைவர் உதவியால் கோவில் நிர்வாகிகளாகவும் மற்றும் கோவில் சம்பந்தமான பொதுநிதியைப் பராமரிக்கும் குழுவிலும் அவர்கள் ஊடுருவி இருந்தனர். ஆண்டவனுக்கு எதற்கு செல்வம், ஏழைகளுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றித் தாங்கள் செல்வந்தர்களாக மாறி வந்தார்கள். திருவிழாக்களில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை மானபங்கப் படுத்திவிட்டு 'ஆண்டவன் வந்து உங்களைக் காப்பாற்றுவான் பாருங்கள்' என்று கேலியும் பேசினர்.
ஆத்திகர்கர்களோ, ஆண்டவன் உண்மையிலேயே ஏதாவது அவதாரம் செய்து தங்களைக் காப்பாற்ற வரமாட்டானா என்று ஏங்கி வேண்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாற்போல் அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்து சேர்ந்தார். ஆத்திகர்கள் அவரைத் தங்கள் துன்பம் துடைக்க ஆண்டவனே நேரில் வந்ததாய்க் கருதினர். எல்லோரும் அவரிடம் நாத்திகக் கோஷ்டியின் அட்டகாசத்தை எல்லாம் ஒரு பாட்டம் சொல்லி அழுதனர். அற்புதம் ஏதாவது நிகழ்த்தியாவது தங்களைக் காக்க வேண்டினர்.
அந்தச் சித்தர் சிரித்தார்.
'நாத்திகக் கோஷ்டியில் இருக்கும் உண்மையான அறிஞர்களையும் சிந்தனையாளரையும் வாதத்தால் திருத்திவிட முயற்சி செய்கிறேன். அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அயோக்கியர்களைத் திருத்துகிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. பார்ப்போம். நீங்கள் போய் அவர்களை அழைத்து வாருங்கள்' என்றார்.
நாத்திகர் பக்கமிருந்து அறிஞர்களும் சிந்தனையாளரும், இந்தச் சித்தரை வாதத்தில் வென்று அவரை இந்த ஊரை விட்டே துரத்துவோம் என்ற ஆவலில் வாதம் செய்ய முன்வந்தனர்.
மலையடிவாரத்திலுள்ள குகை ஒன்றின் வாசலில் கூட்டம் நடந்தது. தன்னைப் பெரிய சிந்தனையாளனாகக் காட்டிக் கொண்ட தலைவரும் கலந்து கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. நாத்திகக் கோஷ்டியின் பல விதண்டாவாதங்களுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்தார் சித்தர்.
நேரம் போகப்போக விதண்டாவாதம்தான் வளர்ந்ததே ஒழிய நாத்திகர் தரப்பு எதையும் ஏற்பதாயில்லை. கடவுளையும் அவருடைய சக்தியையும் நேரில் கண்டால்தான் அடங்குவார்கள் போலத் தோன்றியது.
சித்தரும் கடைசியில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் குகை வாயிலில் ஒரு கல்லை நட்டு ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாரணம் செய்து இதுதான் கடவுள் என்று சொல்லி நாத்திகவாதிகளின் கேள்விகளுக்குக் கடவுளே இனி பதில் சொல்வார் என்றார்.
நாத்திகவாதிகள் சிரித்தனர். கல் எப்படித் தங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என்று கேலி பேசினர். சிலர் சித்தரைத் திட்டவும் செய்தனர், தங்களைக் கேவலப் படுத்துகிறார் என்று. ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்போம் என்று தலைவர் சம்மதிக்க, அதற்குப் பதில் வராவிட்டால் சித்தர் ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.
சித்தர் சம்மதம் என்றார்.
நல்ல குரல்வளம் கொண்ட தலைவர், நாத்திகர் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முன்வந்தார்.
எங்கும் நிசப்தம்.
தலைவர் கல்லின் முன்னால் போய் நின்று உரக்கக் கேட்டார்.
'யார் நீ எங்கிருக்கிறாய்?'
யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லிடமிருந்து பதில் வந்தது. அதுவும் ஒரு கேள்வியாக.
'யார் நீ எங்கிருக்கிறாய்?'
அது கடவுளே கேட்டாரா அல்லது வெறும் எதிரொலியா என்று யாருக்கும் புரியவில்லை. தலைவரின் அல்லக்கைகள் இது ஏமாற்று வேலை என்று கூவ ஆரம்பித்தன. ஆனால் தலைவர் மட்டும் சற்று அயர்ந்து போயிருந்தார். அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அமைதியாய் நின்றிருந்தார். அருகிலிருந்து
கேட்ட அவர் காதுகளில், ஒலித்த குரல் சித்தர் குரல் போலவும் தோன்றியது.
திரும்பிப் பார்த்தார்.
பின்னால் தொலைவில் அவர் கண்மூடிக் கைகூப்பி நின்றிருப்பது தெரிந்தது.
கண்திறந்த அந்தச் சித்தர் தலைவரை அருகில் அழைத்து அவர் தோள்மேல் கைபோட்டு குகைக்குள் அழைத்துப் போனார்.
'வா என் செல்லமே!' என்று அவர் வாஞ்சையாய் அழைத்தது தந்தையையே பார்த்து வளர்ந்திராத தலைவருக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே போனார். உள்ளே போனதும் அவரை அருகில் அமர்த்தி அந்தச் சித்தர் சொன்னார். 'குழந்தாய், கல்லின் மூலம் கடவுள் எப்படிப் பேசினார், அது என் குரலா, கடவுளின் குரலா, அல்லது வெறும் எதிரொலியா என்று ஆராய்ச்சி செய்யாதே. அது வீண்வேலை. ஆனால் திருப்பிக் கேட்ட அந்தக் கேள்வியை மட்டும் மனதில் வை!
உண்மையில் நீ யார் எங்கிருக்கிறாய் என்று தேடிக் கண்டுபிடி. கடவுளைச் சுலபமாய்க் கண்டுபிடிக்க அது ஒன்றே வழி' என்று சொல்லி, தலைவர் கையில் ஒரு பெரிய வெங்காயத்தைக் கொடுத்தார்.
ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு ஆச்சரியம்.
தொடரும்..
Subscribe to:
Posts (Atom)