பண்டைகாலத்து எகிப்தியர்கள் pi ன் அறுமை தெரிந்து அதனை அவர்கள் கணிதத்தில் பயன் படுத்தியதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. கிரேக்கர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தியதாக வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Place value system எனப்படும் decimal system பத்து என்ற எண்ணை அடிப்படை எண்ணாக வைத்து எழுதப்படும் எண்களின் முறையை கண்டுபிடித்துப் பயன் படுத்திய இந்தியர்கள் pi ன் மகத்துவம் அறியாமல் இருந்திருப்பார்களா ?
गोपिभाग्यमधुव्रात - श्रुग्डिशोदधिसन्धिग ।।
खलजीवितखाताव गलहालारसँधर ।।
கோபி பாக்ய மதுவ்ரத ஸ்ரீங்கிசொ ததி சந்திக
கல ஜீவித காதாவ கால ஹாலா ரசந்தார.
இதன் அர்த்தம் ஆங்கிலத்தில்
O Lord anointed with the yogurt of the milkmaids' worship (Krishna), O savior of the fallen, O master of Shiva, please protect me
சமஸ்கிருத "அனுஸ்துப்" இது. இதில் pi யை பத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணைக் குறிப்பிடுகிறார்களாம். எப்படி ?
எண் கணிதம் போல் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படும் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களுக்கு உரிய எண்களைக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர். அதன் படி இதில் வரும் எழுத்துக்களுக்கு எண்களை சரியாகப் போட்டால் கிடைப்பது,
pi/10 = 0.31415926535897932384626433832792
இது முற்றிலும் co incidental ஆக இருக்க probablity யை கணித்தால் 1/10^32 அதாவது 10 க்குப்பிறகு 32 பூஜ்யங்கள் அதில் ஒரு வாய்ப்பு உள்ளது! நிச்சயம் இது எதேச்சையான ஒன்று அல்ல.
இது போலுள்ள பல விஷயங்கள் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று திட்டி ஒதுக்கிவைக்காமல் தேடினாலே கிடைக்கும்.
என்ன, அதுவும் நம் மொழிதான், நம் சரித்திரப் பெருமை சொல்லும் மொழி என்ற சுய கவுரவத்துடன் அதனைப் படிக்கவேண்டும். இதெல்லாம் பள்ளிகளில் சொல்லித் தந்தால் Saffronization என்று ஒரு வெத்து வேட்டு கோஷ்டி கத்திக் கொடி பிடிக்கும்.
21 ம் நூற்றாண்டு இந்தியாவின் சாபக்கேடு எது என்றால் சுய ஏளனத்தின் உச்சத்தை தொடும் "சிந்தனா வியாதிகளை" அறிவு சீவிகளாக ஆக்கி வைத்திருப்பது தான்.
http://www.vedicmaths.org/