March 10, 2007

கம்யூனிசத்திற்கு ஒரு மியூசியம்

communism என்பது ஒரு அரசியல் கொள்கை. அதன் தாக்கம் உலகெங்கும் காணப்படுகின்றது.

ஆனால் அந்தக் கொள்கையினால் நடந்த மனித உரிமை மீரலகள் வெகுவாக மக்கள் ஆறியாமல் இருக்கிறார்கள்.

அதற்காக, ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் துரை ஒரு விர்ச்சுவல் முயூசியத்தை வடிவமைத்து அனைத்துவித தகவல்களையும் தந்துள்ளனர்.

அதன் முகவரி

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm

இந்த வலைத்தளத்தில் கம்யூனிசத்தை ஒரு controlled experiment என்ற முறையில் ஆராய்ந்து அதன் முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

Government is at best a necessary evil and at worst an intolerable one.

Free markets lead to prosperity and socialism leads to poverty.

The history of Communism provides one important argument for libertarianism. Communism deprived its people of both personal and economic freedom.

இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தார்கள் என்பதை அந்த வலைத்தளத்திலேயே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக தமிழ் வலைப்பதிவுலகில் கம்யூனிஸ்டுகள் அதிகம். அவர்கள் இதில் என்ன நினைக்கிறார்கள் ? இல்லை, இது கொள்கையின் எதிரி என்று "கம்" என்று கிடந்துவிடுவார்களா ?

After all, மாற்றுக் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பதினால் தான் தம் கருத்துக்கள் செறிவடையும் என்பது அடிப்படை உண்மையாயிற்றே!!

10 comments:

Anonymous said...

Great Post!
Thanks for educating Thamizmanam reader on Free-Market.

கால்கரி சிவா said...

//After all, மாற்றுக் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பதினால் தான் தம் கருத்துக்கள் செறிவடையும் என்பது அடிப்படை உண்மையாயிற்றே!!
//

அதெல்லாம் தெரியாது. என் கொள்கைதான் உயர்ந்தது மற்றதெல்லாம் தாழ்ந்தது என்பதே எங்களின் முழக்கம்.

வஜ்ரா said...

//
அதெல்லாம் தெரியாது. என் கொள்கைதான் உயர்ந்தது மற்றதெல்லாம் தாழ்ந்தது என்பதே எங்களின் முழக்கம்.
//

கொள்கைப் பிடிப்பு அடிப்படைவாதம் (கொளுகைப் பிடிப்படைவாதம்!!) என்றால் இது தானே ?

dondu(#11168674346665545885) said...

கம்யூப்னிஸ்டுகளால் முடியாத காரியத்தை செய்யச் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதுதான் வெளிப்படையான விவாதம். தாங்கள் அதிகாரத்தில் இல்லாதவரை விவாதம் என்றெல்லாம் பேசி ஜனநாயக முறை என்னெல்லாம் சுதந்திரம் தருகிறதோ அதெல்லாம் போதாது இன்னும் வேண்டும் என்றெல்லாம் கூச்சலிடுவார்கள்.

அதுவே அவர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டால்? மூச். விவாதம் எல்லாம் பூர்ஷுவாத்தனம் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

தொழிலாளிகளின் சர்வாதிகாரம் என்று கூட கூறுவார்கள். ஆனால் அதே தொழிலாளிகள் ஸ்ட்ரைக் எல்லாம் செய்ய முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

வஜ்ரா அய்யா,

ஜார்ஜ் மேசன் யுனிவர்சிட்ய் அமைத்தது உண்மையான கம்யூனிச மியூசியம் இல்லை.உண்மையான மியூசியம் சென்னையில எங்க அசுரன் அய்யா தலைமையில இயங்கி வருகிறது.அதற்கு ம க இ க என்று பெயர்.ஆனாக்க, நீங்க கலை/இலக்கியதுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கக் கூடாது.

பாலா

Anonymous said...

"செத்துப்போன" கம்யூனிசத்துக்கு ஏன் தொடர்ச்சியாக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? (நீங்களும் தான் உங்கள் மேற்கோள்களும்தான்)

அவ்வளவு வலிமையான தத்துவமா அது?

வஜ்ரா said...

இன்னும் இந்த கொளுகையை வைத்து எத்தனை பேர் பிழைக்கிறார்கள் வலைப்பதிவுலகில் ஜல்லிகள் இரக்குகிறார்கள் என்று பாருங்கள், நான் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று புரியும்.

ஐயன் காளி said...

"செத்துப்போன" கம்யூனிசத்துக்கு ஏன் தொடர்ச்சியாக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க? (நீங்களும் தான் உங்கள் மேற்கோள்களும்தான்)

அவ்வளவு வலிமையான தத்துவமா அது?


ஏனெனின், இல்லாத ஒன்றை இருப்பதாய்காட்டும் நாடகத்தை கொண்டாட கும்பல் சேர்க்க கொலைகளையும், கொள்ளைகளையும், கலை இலக்கிய கம்யூனிஸம் என்கின்ற பெயரில் கட்டுப் பணத்திற்காய் கட்டுப்பாடாய் உழைக்கின்ற ஆபிரகாமிய அடிவருடிகளினால் வரவிருக்கும் ஆபத்தை அறிவிக்க.

வரவிருக்கிற வறண்ட காலத்தின்மேல், மினுக்கும் தாள் ஒட்டி மிகச்சிறப்பாய் நடக்கும் ஆபிரகாமியத் தரகின் தராதரம் பொய்யை தரித்தது என்பதை புரியவைக்க.

(ஹான்ஸ் க்ரிஸ்ட்டியன் ஆண்டர்ஸனால் எழுதப்பட்டது) அரசனுடைய புதிய ஆடையின் புகழ்பாடும் புல்லர்களை, அவர்களது அளத்தலின் அருவருப்பை அறிவிக்க.

ஐயன் காளி

ஜடாயு said...

நல்ல சுட்டி வஜ்ரா. இதில் பல விசயங்கள் நம் தோழர்கள் அறிந்தது தான், இருந்தாலும் நடிப்பார்கள். "குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி" என்று திருமூலர் சொல்வது போல் தான்.

தமிழில் கம்யூனிசத்தையும் சோவியத் வீழ்ச்சியையும் அருமையாக புனைகதை வாயிலாகத் தோலுரித்தது ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்" நாவல் தான். இது பற்றி மேலும் என் பதிவில் -
http://jataayu.blogspot.com/2007/03/blog-post_16.html

இது பற்றி நான் எழுதியதும், பி.தொ.நி.க மட்டமான நாவல் என்று கம்யூனிஸ்டு வெறியர்கள் தங்கள் பதிவுகளில் ஜல்லியடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது மூளையை ஆக்கிரமித்திருக்கும் சில அடிப்படைகளை இது அசைத்துப் பார்க்கும்! அந்த பயம் தான்.

Anonymous said...

விட்டது சிகப்பு பதிவு தற்பொழுது தமிழ்மணத்தில் வருவதில்லை என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவரின் சமீபத்திய பதிவைப் பாருங்கள். http://vittudhusigappu.blogspot.com/2007/03/blog-post_31.html முடிந்தால் சிகப்பிற்கு நன்றி என இப்பதிவை மீள் பதிவு செய்து தமிழ்மணம் வாசகர்களுக்குப் படிக்கத் தாருங்களேன். நன்றி.