November 29, 2006

சரித்திர சமநிலைப்பாடு

உலக அளவில் மிக பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களில் நய்பாலும் ஒருவர். அவரது முழு பெயர் Sir வித்யாதர் சூரஜ்பிரசாத் நய்பால் T.C. 2001 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டு கவுரவிக்கப் பட்டவர்.

ஆகஸ்ட் 17 1932ல் ட்ரினிடாட் ல் பிறந்தவர் இன்று இங்கிலாந்தில் வில்ட்ஷயர் என்ற இடத்தில் வசிக்கிறார். 1971 ல் Booker பரிசைப் பெற்ற முதல் இந்திய வம்சாவழி வந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரைப் பற்றி வலைப்பதியவேண்டும் என்ற எனது நீண்ட நாள் அசையைப் பூர்த்தி செய்துகொள்ளவே இந்தப் பதிவு.

இதற்கு பல காரணங்கள்.


முதலில் இவர் மார்க்ஸ்வாத சிந்தனையை எதிர்ப்பவர். ஆகவே நவயுக மார்க்ஸ்வாதிகளால் தீவிரமாக விமர்சிக்கப் படுபவர், politically correct மரமண்டைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைகளை வைப்பவர். இரண்டு, இஸ்லாம் பற்றிய இவர் பார்வை.

பலர் தீவிரமாக அதை அன்றைய நாளில் விமர்சித்திருந்தாலும் இறுதியில் இவரது கூற்றே நின்றது. சாமுவேல் ஹண்டிங்டன் சொல்லிய Clash of the civilization ன் மூல சிந்தனை இவரது இஸ்லாம் பற்றிய இரண்டு புத்தகங்களில் பரவலாகப் பார்க்கலாம்.

1. Among the believers: An Islamic Journey
2. Beyond Belief: Islamic excursion among the converted people

இந்த இரண்டு புத்தகத்திலும் அவர் கூறும் முக்கிய விஷயம்.


Islam is an Arab religion. Everyone who is not an Arab is a convert. Islam is a demanding religion. A convert to Islam changes his view of the world. His holy places are in another country, his sacred language is Arabic. He rejects his own history and turns away from his own historical background. In a profound way the converted Muslims are a colonised people.
..
இஸ்லாம் ஒரு அரபியர் மதம். அரபியர் அல்லாத இஸ்லாமியர் அனைவரும் மதம் மாற்றப் பட்டவர்கள். இஸ்லாம் அதனைப் பின்பற்றுபவர்களிடம் பல கட்டுப்பாடுகளை முன்வைக்கும் மதம். மதம் மாற்றப் பட்டவன் தன் பார்வையை மாற்றிக் கொள்கிறான். அவனது புனிதஸ்தலங்கள் வேறு நாட்டிற்கு மாறிவிடுகின்றன. அவனது புனித மொழி அரபியாக மாறிவிடுகிறது. அவன் தனது வரலாற்றை நிராகரித்துவிடுகிறான். ஒரு விதத்தில் மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியருக்கும் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழும் மக்களுக்கும் வித்தியாசமில்லை.


பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவர் முன் வைக்கும் பார்வை வித்தியாசமானது.

அவுட்லுக் இந்தியாவில் முன்பு வந்த இந்த சிறிய உரையாடலின் தொகுப்பில் குஷ்வந்த் சிங் பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவரிடம் கேட்டதற்கு நய்பால் அளித்த பதில்,


I would call it an act of historical balancing. The mosque built by Babar in Ayodhya was meant as an act of contempt. Babar was no lover of India. I think it is universally accepted that Babar despised India, the Indian people and their faith.

இதை ஒரு சரித்திர சமநிலைப்பாட்டினை நோக்கிச் செல்லும் முதல் படி என்று தான் சொல்வேன். பாபர் அயோத்தியாவில் கட்டிய "மசூதி" ஒரு அவமதிப்பின் சின்னம். பாபர் ஒன்றும் இந்தியாவை விரும்பியவரல்ல. பாபர் இந்தியாவைப் பற்றியும் இந்திய மக்கள் மற்றும் இந்திய மதங்களைப் பற்றியும் ஒரு இகழ்ச்சியான சிந்தனையைத்தான் வைத்திருந்தார் என்பது இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதே என் கருத்து.


இப்படியெல்லாம் பேசியதாலேயோ என்னவோ BJPயின் poster boy ஆகிவிட்டார் நய்பால். இதை சல்மான் ருஷ்டி எதிர்த்தார். ஆனால் ருஷ்டி satanic verses எழுதியதால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் அடி. ருஷ்டி எவ்வளவு தான் இஸ்லாமை எதிர்த்தாலும் அவர் முஸ்லீம் என்பதில் அலாதி பெருமை கொண்டுள்ளவர் அவர்.

ப.ஜ.க அரசியல் கொளகையை மீறி இன்று நாம் நய்பாலைப் பார்க்கவிரும்புவதில்லை என்ற நிலைக்குப் போய்விட்டோம். இதற்கு முக்கிய காரணம் லிபரல் சிந்தனை என்று சொல்லிக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதும் நவ யுக மார்க்ஸ்வாதிகள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கூஜா தூக்கும் இவர்கள் சல்மான் ருஷ்டியின் நிலை பற்றி மிக மிக அடக்கி வாசிப்பது திம்மித்தனத்தின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை.

பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில்கூட (இன்னும் உயிருடன் இருக்கும்) சிந்திக்கக் கூடிய மக்கள் சிலர் சல்மான் ருஷ்டியை ஏற்கின்றனர்.

ஒரு காலத்தில் An Area of Darkness என்று புத்தகம் எழுதி அதில் இந்தியாவை "உலகின் மிகப்பெரிய சேரி" என்று "வர்ணித்தவர்" தான் நய்பால்.

நெற்றியில் பொட்டு வைத்த பெண்ணைப் பற்றி, "அந்தப் பொட்டின் பொருள், என் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் என்பதே" என்றெல்லாம் கமெண்ட் அடித்தவர் இந்த நய்பால்.

இந்திரா காந்தியைப் போற்றியும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இஸ்லாமை விமர்சித்ததற்காக அவரை "ஹிந்து அடிப்படைவாதி", சாதி வெறியன், தீண்டாமை பார்க்கும் மேல்சாதி இந்து என்றெல்லம் பட்டங்கள் கொடுக்கும் இந்திய லிபரலிஸ்டுகள் முன்னிலையில், இஸ்லாமை விமர்சித்ததற்காகவே ப.ஜ.க அவரை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வேடிக்கையாகத் தெரிகின்றது.

அவர் இந்துக்கள், இந்தியர்கள் பற்றி வைத்த விமர்சனங்கள் ப.ஜ.க, சங் அமைப்புகள் இன்றும் பல கோணங்களில் எதிர்க்கும் விமர்சங்களே என்றாலும், இவர்கள் மாறி வருகின்றனர் என்பதற்கு நய்பாலை ஏற்பதிலிருந்தே தெரிகின்றது. அதே வேளையில் இன்று இந்தியாவில் எதையும் ஏற்க மனமில்லாமல் சோசியலிசமே குறி என்று இயங்கும் சிந்தனையாளர்களிடையே நிலவும் சிந்தனையை "லிபரல்" என்று சொல்வது உண்மையான லிபரல் சிந்தனைக்கு கேடு என்பதே என் கருத்து.

4 comments:

கால்கரி சிவா said...

இவருடைய புத்தகங்கள் படித்துள்ளேன்.

ஆனால் சரித்திரத்தை சமன் செய்வதால் அடைய போவது என்ன

அந்த லூஸ் ஸல்மான் ரஷ்டியின் புத்தகத்தைப் படித்தேன் அவரும் பயங்கர இங்கிலிஷ் . முல்லாக்கள் தடை செய்திருக்காவிட்டால் இவர் அட்ரஸ் இல்லாமல் இருந்திருப்பார்

வஜ்ரா said...

one upmanship என்று சொல்வார்களே.

அதுவாகக் கூட இருக்கலாம்.

இல்லை, அடக்கி வைக்கப் பட்ட கோபம் நல்லதல்ல என்பதற்கு உதாரணமாக இருக்கலாம். எதுவானாலும், இஸ்லாமியர், கிருத்தவரைப் பார்த்து சில இந்துக்கள் தங்கள் மதத்தை Assertive மதமாக்கிவிடுகின்றார்கள். அது தவிற்கப் படக்கூடியது என்பதைவிட logical ending என்பது தான் நய்பால் சொல்வது.

இவர் தாஜ் மஹாலையே symbol of slavery என்று சொன்னவர். யோசித்துப் பார்த்தால் அதையும் பாபர் கட்டிடம் போல் உடைத்துவிடலாமா ?

பின், கொஹ்மேனி செய்ததற்கும் நமக்கும் வித்தியாசமில்லை.

ஜடாயு said...

வஜ்ரா, இவரது india: a million mutinies now படித்திருக்கிறேன். காலனியக் கண்ணாடிகள் கொண்டே முழுக்க முழுக்க இந்தியா மற்றும் அதன் மக்களைப் பார்க்கும் புத்தகம் அது. சிவா சொல்வது போல கொஞ்சம் கடின ஆங்கிலம் தான். அதனால் தானோ என்னவோ மற்ற புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இல்லாமல் போனது.

இஸ்லாம் பற்றிய இவரது விமரிசனங்கள் சரியானவையே. அதுவும் புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளியில் வந்த ஒரு இந்துவாக இருந்துகொண்டு அவர் இதைச் சொல்வது முக்கியமானது.

Anonymous said...

இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ஆகவே இந்த கேள்விகள்

1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?

2. இன்று இருப்பதை காட்டிலும், வெள்ளையர் ஆட்சியில், கிறித்துவத்துக்கு, செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை இந்து மதம் எப்படி தாங்கியது ?

இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?

கிறித்தவர் ஆண்டபின்னும் 1950களில் இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் சதவிகிதம் இருந்தனர் ?

3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?

யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

- அனாதைகளான அருமை பெற்றோர்,

- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்