May 2, 2006

மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?

இந்த வார (மே 1 , 2006 ல் இருந்து) தமிழ்மண நட்சத்திர வலைபதிவாளரான முத்து (தமிழினி) இரண்டு பதிவுகள் போட்டிருந்தார்

  1. வங்கி அனுபவம் - கூடமலை கோபால்
  2. மார்க்சியம் சில குறிப்புகள் - கேள்விகள்


அதில், மார்க்ஸியம் பற்றி தமிழினி அவர்கள்,

ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.


இப்படி எழுதி வைக்க, நான் அதை தப்பித் தவறி படித்துத் தொலைத்து விட.

இப்படி ஒரு பதில் எழுதி வைத்தேன்.

அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).

நான் மார்க்ஸ்வாதம் தவறு என்று சொன்னால், என்னை வலது சாரி தீவிரவாதி/ ஹிந்துத்வா வாதி என்று பட்டம் கட்டி ஒதுக்கி விடுவார்கள். (அல்லாஹ் வை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காஃபிர், கிருத்துவ தத்துவத்திற்கு எதிர்ப்பு கூறுபவர்கள் apostate அல்லது blasphemy செய்துவிட்டதாக கூறுவது போல்).

மார்க்ஸியக் கொள்கை Falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? (உலகறிந்த உதாரணம் சிதருண்ட சோவியத் யூனியன்)


நமது கல்வி முறையின் கண்ணோட்டம், சாய்வின்றி இருப்பது நல்லது.

ஏற்கனவே, மார்க்ஸியம் போன்ற தீவிரமான கொள்கையின் (strong ideology) பாதிப்பு நம் பாடப் புத்தகங்களில் உணரப்பட்டதே. மார்க்ஸியக் கொள்கையின் கண்ணோட்டத்தில் நமது வரலாற்றை திரித்தவர்கள் யார்?


ஒரு பின்னூட்டப் "போராட்டத்தை" நான் தூண்டி விட்டேனோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, சரமாரியாக பதில்கள், பதில் ரூபத்தில் கேள்விகள்.

வந்தவைகளையும், நான் சொன்ன/கேட்ட, பதில்/கேள்விகளையும் இங்கு வைக்கிறேன்..

சங்கர் வரலாற்றை திருத்தியவர்கள் இடதுசாரிகள் இல்லை. இந்துத்துவவாதிகள்தான். சுதந்திரப்போராட்ட துரோகியான சவர்க்கரை ஹீரோவாக சித்தரித்தவர்கள் வாஜ்பாய் வகையறாக்கள்தான்... அடுத்து வாஜ்பாயே மிகப் பெரிய சுதந்திரப்போராட்ட துரோகி... இவர்கள் வெள்ளையனின் கையாள்.. இவரை உத்தம புருஷர் என்று பொய்யாய் சொல்லி புளுகியவர்கள் - திருத்தல்வாதிகள் இந்துத்துவாதிகள்தான்....

இப்படிச் சொன்னவர் சந்திப்பு

எனது பதில்,

நான் வரலாற்றைத் "திரி"த்தவர்களைப் பற்றிப் பேசினேன். "திருத்தி"யவர்களைப் பற்றி அல்ல.
திரித்தவர்கள் இடது சாரிகள் (Irfan Habib, Romila Thapar, போன்ற self proclaimed marxists).
உங்களால், வேறொரு கண்ணோட்டத்தில் சிந்திக்கக் கூட முடியவில்லை.
சாவர்கர் துரோகி, வாஜ்பாய் துரோகி, இவர்கள் வெள்ளயனின் கையாள் என்று, மார்க்ஸ்வாதிகள் கூறுவதைத் தவிர நீங்கள் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை. (baseless allegations).
யார் வெள்ளையனின் கையாள் என்பதை Mitrokhin நிருவி விட்டார் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. Mitrokhin ஒரு ஹிந்துத்வாவாதியா!? அல்லது மார்க்ஸியத்தை அழிக்க வந்த அமேரிக்க முதலாளித்துவக் கைப்பாவையா?
பார்த்தீர்களா! மார்க்ஸ்வாதத்தை பற்றி சற்றே சங்கடமான கேள்வி கேட்டால் இந்துத்வாவாதியை இழுப்பது!!
மார்க்ஸ்வாதம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்பதற்க்கு "சந்திப்பை"த் தவிர வேறு உதாரணம் வேண்டுமா?


அடுத்ததாக மா.சிவகுமார்,
மார்க்ஸிசம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?
பொருளாதாரவியல் என்பது சமூக அறிவியலைச் சேர்ந்தது. அந்த வகையில் மார்க்ஸின் கோட்பாடுகள்
அறிவுபூர்வமாக நிரூபிக்கப்பட்டவைதான்.

அதற்கு எனது பதில்,
மார்க்ஸ்வாதிகளைப் பார்கவும்,

மார்க்ஸ்வாதத் தத்துவம் அதனால் அவர்கள் கொண்ட கண்ணோட்டத்தை தவிர வேறு ஒரு கண்ணோட்டம் இருக்கலாம் என்பதை உணர மறுப்பதை. (எதற்கெடுத்தாலும் இந்துத்வா, அமேரிக்க முதலாளித்துவம் என்று பேசுவது)

falsifiability என்பது,
//
"Falsifiability, or defeasibility, is an important concept in the philosophy of science. It is the principle that a proposition or theory cannot be considered scientific if it does not admit the possibility of being shown false."
//

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.

போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)

In here we see marxism not only being shown falsifiable, but also shown to be false or wrong economic concept which lead ultimately to the destruction of the countries following it.

According to science, a theory should accept the possibility of Falsifiability (which marxism does not) and if a theory is shown to be false, it should be discarded (according to science).


சந்திப்பு கூறியது,

மார்க்சியம் விஞ்ஞானப்பூர்வமானது. வரலாற்றை விஞ்ஞானப்பூர்வமாக அலசுகிறது. இயக்கவியல் ரீதியாக பரிசீலிக்கிறது. அந்த பரிசீலனையின் முடிவுதான் கீழ்க்கண்டவை:
1. புராதான பொதுவுடைமை சமூகம் (அதாவது, அனைத்து மனிதர்களும் கூட்டமாக - குழுவாக வாழ்ந்த காலகட்டம். கிடைத்ததை அனைவரும் சமமாக - அல்லது தேவைக்கேற்ப பகிர்ந்து உண்ட சமூகம்)
2. ஆண்டான் - அடிமை சமூகம்
3. நிலப்பிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்
5. சோசலிச சமூகம்
6. இறுதியில், கம்யூனிச சமூகம்.
சமூகம் எந்த இடத்திலும் மாறாமல் தேங்கிய குட்டையாய் நின்றுபோனது கிடையாது. அதனால் நிற்கவும் முடியாது. இது வளர்ச்சியை நோக்கித்தான் முன்னேறும். அந்த அடிப்படையில் நாம் கடந்து வந்திருக்கிற ஒவ்வொரு பாதையும் முற்போக்கானது. இதுவரை நாம் கண்டுள்ளது சோசலிச சமூகத்தின் ஆரம்பத்தைத்தான். கம்யூனிச சமூக அமைப்பை உலகில் இன்னும் எந்த மூளையிலும் வரவில்லை. இதுதான் விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்துத்துவ சமூகம் என்ற ஒன்று எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. அத்தோடு, அந்த இந்துத்துவ சமூகமும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே. அது பார(தீ)ய சமூகம். இது ஆண்டைகளுக்கும், ஜாதிய மேலாதிக்கத்திற்கும் வக்காலத்து வாங்கும் சமூகமே. எனவே இந்தியாவில் இந்துத்துவ சமூகம் எந்த காலத்திலும் உருவாகாது. ஏனென்றால் இது விஞ்ஞானமல்ல.


சிவகுமார் கூறியது,

மார்க்ஸிசம் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல், சோவியத் யூனியன், பெர்லின் சுவர், கியூபா என்று எதிர்மறை உதாரணங்களைக் காட்டாதீர்கள்.
சந்தைப் பொருளாதரத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அமல்படுத்தி அதனால் அவதியுற்ற நாடுகளும் உண்டு (தென்கிழக்கு ஆசிய பொருளாதார வீழ்ச்சி, தென் அமெரிக்க வாழைப்பழ குடியரசுகளின் தவறுகள் போன்றவை). அதனாலேயே சந்தைப் பொருளாதாரம்
பற்றிய தத்துவங்கள் தவறு என்று சொல்லி விடுவீர்களா?
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் மெய்ப்பொருள் காண்பது அறிவு.


திருப்பியும் நான் விடாப்பிடியாக,
மா. சிவகுமார்,

மார்க்ஸிஸக் பொருளாதாரக் கொள்கை என்பது, ஒரு கொள்கை தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

நான் கேட்பதெல்லாம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? உலகில் அப்படி எத்தனை மார்க்ஸ்வதிகள் ஒத்துக் கொள்கிறார்கள்.?

//
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
//

இது மறுப்பதற்கில்லை.

ஆனால், நாடுகள் தழுவிய பரிசோதனைகள், தவறாக முடிந்தது என்பதை ஓப்பனாக ஒத்துக் கொள்ளும் முதல் மார்க்ஸிஸ்ட் நீங்கள் தான். (மற்றவர்களெல்லாம் அமேரிக்க சதி என்று சொன்னார்கள்) நன்றி. (நீங்கள் மார்க்ஸ்வாதி இல்லை என்று சொல்லி கவுத்திவுட்றாதீங்க!)

அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள்.? உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா?

நான் சந்தைப் பொருளாதாரத்தை மார்க்ஸிய கண் கொண்டு புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இன்றய நிலையில் சந்தைப் பொருளாதாரம் பலனளித்து முன்னேறிய நாடுகள் பல உள்ளன. அதனால் சந்தைப் பொருளாதாரம் தான் சரி மற்ற கொள்கைகளெல்லாம் தவறு என்று யாரும் வாதிடுவதில்லை.

இங்கு ஒரு தகவலை வலைப்பதிவாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இஸ்ரேலில் (சில காலமாக இங்கு தான் நம் வாழ்வு), 1940 களில் யூதர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து வாழ ஆரம்பித்த நிலையில், kibbutz என்று கிராமாமாக வாழ்ந்தார்கள் எல்லாமே பொதுவில் தான், நிலம், வீடு, எல்லாமே பொதுச் சொத்து தான். அவர்கள் kibbutz அமைத்த தத்துவம் From each according to his abilities, to each according to his needs என்ற அடிப்படை மார்க்ஸ் வாதத் தத்துவம் தான் (அது விவிலியத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?). இன்றும் ஆங்காங்கே இருக்கிறது இத்தகய கிப்பூட்ஸ். ஆனால் பெரும்பான்மையோர், வெளியேரிவிட்டனர். காரணம், அவர்களிடம் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல், போவது. ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது, ஒருவன் வேலையே செய்யாமல் வாழ்வது. மொத்தத்தில் அது சிறிய அளவில் failure. அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.


அதற்கு சிவகுமார் அவர்கள்,

சந்திப்பு எழுதிய சமூகப் பொருளாதரத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய பின்னூட்டத்தை இன்னும் ஒருமுறை
நன்றாகப் படித்து விடுங்கள்.

சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்தது தவறான புரிதலேயொழிய, அதனால் மார்க்சிஸம் தவறு
என்று ஆகி விடவில்லை. நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு சந்தைப் பொருளாதார சமூகமும், மார்க்ஸ் கணித்த பாதைகளைக் கடந்து கம்யூனிச (கெட்ட வார்த்தை !!) அமைப்பைத்தான்
அடையப் போகிறது.

உலகின் எல்லா நாடுகளிலும் அதுதான் நடக்கப் போகிறது. நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப் பார்க்கப் போனால் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்தப் பரிணாம வளர்ச்சியை இழுத்துப் பிடித்து தாமதப்படுத்த முனைகின்றனவா என்று கேட்டு விடாதீர்கள் :-)


கடைசியாக, சிவகுமார் கூறியது,

"பழம் தானாகப் பழுக்க வேண்டும். தல்லிப் பழுக்கக் கூடாது" என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். என்னுடைய புரிதலில், இந்த ஆயுதம் ஏந்திய புரட்சிகள் பெரிதாக சாதித்து விட முடியாது. நீங்கள் எழுதிய குறிப்புபடி, முதலாளித்துவம் முற்றி, சோஷலிசம் உருவாகி அதன் பின்னரே கம்யூனிசம் மலரும். இந்த மாறுதலை தாமதப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்க்கலாமே ஒழிய வலுக்கட்டாயமாக, குறுக்கு வழியில் கம்யூனிசம் காண முயன்றதுதான் சோதனைகளின் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

நிலவுடமைச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நிலை உயர்த்துதல், ஒடுக்கப்பட்டவரின் குரலை எடுபடச் செய்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பணிகள் இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பெரும்பங்காக உள்ளது என்பது என் கருத்து.


இதே கருத்தினை தமிழினி யும் ஆமேதித்திருக்கிறார்.

முக்கியமாக யாருமே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. என் பார்வையில் தவறு இருக்கிறது, நான் மார்க்ஸ்வாதத்தை வலது சாரி கண் கொண்டு பார்கிறேன் போன்ற குற்றசாட்டு தான் வந்தது.


நான் கேட்ட கேள்வி மறந்திருந்தால், இதோ மறுபடியும் கேட்கிறேன்.

ஒரு சித்தாந்தம் அல்லது theory அறிவியல்பூர்வமானதாக இருக்க Falsifiability மிக முக்கியம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா?


ஒரு சித்தாந்தம் அறிவியல்பூர்வமானதாக இருக்க,

  1. அந்த சித்தாந்தத்தின் confirmation ஐ மட்டுமே பார்பது தவறு. அத்தகய verification/confirmation எந்த விதமான theoryக்கும் சுலபமாக கிடைத்துவிடும்.
  2. அந்த சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை நாம் எதிர்பார்க்கவேண்டும்.
  3. ஒரு theory யை தவறு என்று நிரூபிக்க முடியாது என்றால் அந்த நொடியே அந்த theory அறிவியல்பூர்வமானது அல்ல என்ற நிலையய் அடைகிறது. Irrefutability is not a virtue of a theory but a vice.
  4. Theory யை உண்மையான முறையில் சோதனை செய்வது என்பது, அந்த தியரியை தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் உண்மையான முயற்சியே. அந்த Theory யை சரி என் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி அல்ல.
  5. ஒரு சில Theory க்கள் தவறு என்று நிரூபணமான பின்பும் அதன் சார்புடயவர்கள் அத்தகய சித்தாந்தத்தை விடாப்பிடியாகக் கடைபிடிப்பதும், பழய சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பிப்பதுமாக பல "Conventionalist twist" கொடுத்து theory யைக் காப்பற்ற முயற்சிகின்றனர்.அத்தகய முயற்சிகள், theory ன் அறிவியல் தன்மையினைப் போக்கிவிடும்.


ஷங்கர்.

8 comments:

Unknown said...

மார்க்ஸியம் என்றால் நீங்கள் எதை சொல்கிறீர்கள் என ஒரு வரையரை தந்தால் அது விஞ்ஞானமா என விவாதிக்க இயலும்.

நீங்கள் சொல்லும் காரல் பாப்பரின் falsifiability எனும் உண்மை அறியும் முறையில் பல குறைபாடுகள் உள்ளன.அதை நீண்ட பதிவின் மூலம் தான் விளக்க முடியுமே அன்றி பின்னூட்டம் மூலம் அல்ல.

Falsifiability மூலம் தான் விஞ்ஞான தத்துவம் தற்போது மெய்பிக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் அந்த தத்துவத்துக்கே மாற்றுக்கருத்துகள் தற்போது எழுகின்றன.(eg: theory of relativism,pragmatism)

இடதுசாரி வலதுசாரி விவாதத்தை ஒதுக்கி விட்டு மார்க்ஸியம்,விஞ்ஞானம் பற்றி மட்டுமே விவாதம் தொடர்வதை விரும்புகிறேன். வெள்ளியன்று மீண்டும் இதை பற்றி விவாதிக்க வருகிறேன்.

அன்புடன்
செல்வன்

வஜ்ரா said...

செல்வன்,

நீங்கள் எழுதிய மார்க்ஸும், காந்தியும் இப்பொழுது தான் படித்தேன். முன்னமே பார்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

நல்ல பதிவு, அதற்கு வந்த பின்னூட்டங்களும், உங்கள் பதில்களும் மிக நன்று.

//
மார்க்ஸியம் என்றால் நீங்கள் எதை சொல்கிறீர்கள் என ஒரு வரையரை தந்தால் அது விஞ்ஞானமா என விவாதிக்க இயலும்.
//

மார்க்ஸ்வாதப் பொருளாதாரக் கொள்கை. மற்றும் அவர் கூறிய Theory of social conflict கம்மியூனிச மக்கள் (utopian).

//
Falsifiability மூலம் தான் விஞ்ஞான தத்துவம் தற்போது மெய்பிக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் அந்த தத்துவத்துக்கே மாற்றுக்கருத்துகள் தற்போது எழுகின்றன.(eg: theory of relativism,pragmatism)
//

அதிலும் மார்க்ஸ்வாதம் தேருகிறதா என்று பார்ப்போம்?

//
இடதுசாரி வலதுசாரி விவாதத்தை ஒதுக்கி விட்டு மார்க்ஸியம்,விஞ்ஞானம் பற்றி மட்டுமே விவாதம் தொடர்வதை விரும்புகிறேன். வெள்ளியன்று மீண்டும் இதை பற்றி விவாதிக்க வருகிறேன்.
//

நிச்சயமாக நானும் அதைத்தான் எதிர் பார்கிறேன்.

வருகைக்கு நன்றி செல்வன்,

ஷங்கர்.

Ganesh said...

First time here,
very interesting and certain valid points.

Muthu said...

சங்கர்,

எனக்கு ஆர்வம் உண்டு...ஆனால் இந்த வாரம் என்னால் ஆக்டிவ்வாக இதைப்பற்றி எழுத முடியாது..

கண்டிப்பாக பேசுவோம்...

அன்புடன்

வஜ்ரா said...

வாங்க கனேஷ்,

முத்து (தமிழினி) சார், புரியுது, நட்சத்திர வாரத்துல உங்க பதிவுகளில் கவனம் செல்லுத்துங்கள். ஆபீஸுக்கு லீவா?

ஷங்கர்.

வஜ்ரா said...

திண்ணையில் வெளியான இந்த கட்டுரையைப் பார்க்க.

என்னைவிட பொப்பரின் தத்துவத்தை நன்றாகவே மொழிபெயர்திருக்கிறார்.

ஷங்கர்.

doondu said...

அந்நியன் என்ற வெங்கட்ரமணிக்கு பதில்:-

//நான் என் ஜாதியை பெருமையாக சொல்பவன் இல்லை என்பது என் பதிவுகளை படித்தாலே தெரியும். சொல்லப்போனால் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உயர்வுக்கு பாடுபடும் ஒரு லாபத்துக்கல்லாத அமைப்பில் சில ஆண்டுகள் தன்னார்வலராக (volunteer) பணிபுரிந்தேன். என்னை ஒரு Moderator ஆக கருதி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.//

வெங்கட்ரமணி, நீங்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனன் என்பது எங்கள் இயக்கத்திற்கு முன்பே தெரியும். உங்களின் தன்னார்வத் தொண்டுகளுக்கும் அது சார்ந்த செயல்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். நீங்கள் இன்னமும் செயல்படுவ்தாக இருந்தால் தயவு செய்து எமக்கு மின்மடல் இடவும். நாங்களூம் எம்மை இணைத்து தொண்டுகள் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.

//நீங்கள் நிஜமாகவே ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தை கொண்டவர்களாக இருந்தால் ஏன் ஒரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுகிறீர்கள்?//

பிரச்னையின் ஆரம்பம் தெரியாமல் நீங்கள் உளறுகிறீர்கள்! முதன்முதலில் எங்கள் இயக்கம் அருமையாகத்தான் ஆரம்பமானது. முதன்முதலில் நல்ல கருத்துக்களாக முன்வைத்தோம். ஆனால் கேடுகெட்ட சில பார்ப்பன வெறி பிடித்த பைத்தியக்கார பார்ப்பனர்கள் பிரச்னையை திசைதிருப்பவே நாங்கள் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைப் பின்பற்றினோம். எங்கள் இயக்கம் தீவிரவாத வழிமுறைகளைப் பின்பற்ற மாயவரத்தான் ரமேஷ்குமாரும் டோண்டு ராகவனும் முழுமுதற்காரணம். இன்றைக்கும் எம் இயக்கம் ஜாதி, மதம் கடந்த தொலைநோக்குப் பார்வையோடுதான் சிந்திக்கிறது, எழுதுகிறது. சில இடங்களில் தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் பார்ப்பான்களை தீவிரமாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

//இத்தனை பேரை, குறிப்பாக பிராமணர்களை ஏன் குறி வைக்கிறீர்கள்? அவர்கள் எல்லாரும் ஜாதிவெறியர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை.//

அது என்ன குறிப்பாக பார்ப்பனர்களைச் சொன்னதும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது??? உங்களின் பார்ப்பன புத்தி எப்படிச் சிந்திகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாங்கள் குறிப்பாக எல்லாம் பார்ப்பனர்களைக் குறிவைக்கவில்லை. நான் வடகலையில் பிறந்த ஒரு ஐயங்கார், இந்த ஜாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழ் வலைப்பதிவர்கள் முன்னிலையில் முதமுதலில் சொன்னது உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன். அதனாலேயே நாங்கள் எதிர்க்க ஆரம்பித்தோம். எந்த தலித்தாவது நான் தலித்தாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று வலைப்பதிவில் எழுதி இருக்கிறானா? ஏன் மிருகத்தினைவிட மிகக்கேவலமான பாப்பான் மட்டும் இந்த இழிசெயலைப் புரிந்தான்? அதுபற்றி கொஞ்சமாவது நீ ங்கள் சிந்தித்தீர்களா? உம் கூட்டம் சிந்தித்ததா??? முதன்முதலில் வலைப்பதிவு உலகில் நான் இந்த ஜாதி என்று எவன் கூறினான்? உங்கள் ஜாதியைத்தவிர வேறு யாராவது கூறி இருக்கிறானா? அப்படி எவனும் சொன்னால் தயவு செய்து தெரிவிக்கவும்.

//ஏன் தமிழ்மணம் போன்ற ஒரு ஆக்கபூர்வமான வலைத்தளத்தில் பெண்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் உங்கள் கொள்கைக்கு ஒத்துப்போகாத விவகாரமான பின்னூட்டங்கள்?//

எது கொள்கைக்கு ஒப்பாத பின்னூட்டங்கள்? நீங்கள் பாப்பான் நல்லவன் வல்லவன் என்பீர்கள். கைகொட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் என்ன மட ஜென்மமா? அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது வெங்கட்ரமணி ஐயங்கார்! வேற உலகம் போங்க. கைபர் போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டத்திற்கே அவ்வளவு இருக்கும்போது இந்த மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

தமிழ்மணம் போன்ற ஆரோக்கியமான வலைத்தளத்தில் முதன்முதலில் என் ஜாதி இதுவென்று மார்த்தட்டிச் சொன்னது ஒரு அய்யங்கார். அன்று அவனைத் தட்டிக் கேட்காமல் எங்கே நீங்கள் சென்று இருந்தீர்கள்? செரைக்கவா? அன்றே அவனைத் தட்டி அவனை தனது தமிழ்மணத்தில் இருந்து நீக்காமல் காசி என்ற ஒரு இழிபிறவியும் அவனை வைத்திருந்ததால்தான் சண்டை பெரிதானது. இன்னமும் சண்டை நிறைவுறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உங்களைபோன்ற இன்னும் ஓராயிரம் மென்பொருளாளர்கள் வந்தாலும் எங்கள் இயக்கத்தின் மயிரைக்கூட உங்களால் புடுங்க முடியாது! எங்கள் இயக்கமும் மென்பொருளில் ஊறியது. எனவே உங்களுக்கு பெரிய சவாலை நாங்கள் கொடுப்போம் என்பது உண்மை.

தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டின்மூலம் தம்மை இணைத்துக் கொண்டு எழுதும் பெரும்பாலான பதிவாளர்கள் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது? அல்லது நிறுத்துவது? ரொம்ப சிம்பிள். முதலில் டோண்டு என்பவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். எங்கள் இயக்கம் தாமாகவே அடங்கிவிடும். எங்கள் தலைமைக் கழகம் மூலம் ஒவ்வொருவருக்கும் சொல்லி அனுப்பி எங்கள் இயக்கத்தினரை நேர்மையுடன் கருத்துகள் எழுதச் சொல்கிறோம். ஒன்று தெரியுமா உமக்கு? பார்ப்பான்களின் தீவிரவாதம் அதிகமாக அதிகமாக எங்களின் இயக்க தோழர்களும் அதிகமாகிறார்கள். ஆப்பு, போலி அன்னியன் போன்றோர் எம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

முதலில் டோண்டுராகவனையும் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கும் உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள். அப்படி இல்லாமல் அவர்களோடு சேர்ந்துகொண்டு பார்ப்பன சமுதாயத்துக்காக நீங்களும் குரைப்பீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்கியாள்வது என்று எங்களுக்கும் தெரியும்.


//என் பேரில் உள்ள போலி உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றால் உங்கள் இயக்கம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.//

உண்மைதான். இவ்வளவுக்கும் காரணம் யார்? மிருகத்தினை விடவும் கேவலமாகச் செயல்பட்ட நரசிம்மன் ராகவன் என்ற வடகலை அய்யங்காரால்! ஏன் சாவதானமாக அவனை மறந்து விடுகிறீர்கள்? ஏன் மாயவரத்தான் ரமேஷ்குமாரை மறந்து விடுகிறீர்கள்? இந்த இருவரும்தானே எம் இயக்கம் வளர முக்கிய காரணமானவர்கள்!!!


//கீழ்க்கண்ட புனைபெயர்களில் எவர்கள் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியுமா?
மத்தளராயன்
திருப்பாச்சி
போலியன்//

இவர்கள் எம் இயக்கம் இல்லை. விட்டால் ஊரில் உள்ள எல்லா பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் எம் இயக்கம் என்பீர்கள் போலத் தெரிகிறது! உங்களுக்கு என்ன? வலைப்பதிவாளர்கள் எல்லோரும் பார்ப்பான் வாழ்க என்று கோஷம்போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா??? உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா???

//இதைப்போல் நிறைய பேர் கிளம்புவதால்தான் தமிழ்மணத்தின் நலன்மேல் அக்கறை கொண்ட எங்களைப்போன்றவர்கள் இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் கொண்டுவர வேண்டியதாய் இருக்கிறது. உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.//

டோண்டுராகவன் போன்ற கீழ்த்தரமான இழிபிறவிகள் தங்கள் ஜாதியைப் பெருமையாகச் சொன்னதால்தான் எங்கள் இயக்கமே ஆரம்பமானது. அவன் முன்வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எங்கள் இயக்கம் முற்றாக கலைக்கப்படும். அவனுக்கு ஆதரவுக்கரம் அளிக்கும் காசி போன்ற கீழ்த்தரமானவர்கள் என்னதான் நினைத்தும் எங்கள் முடியைக்கூட அசைக்க முடியவில்லை!!! நான் முன்பே சொன்னதுபோல எத்தனை மென்பொருள் வல்லுனர்கள் வந்து தீர்வுகள் கண்டாலும் இதனைக் கட்டுபடுத்த இயலாது. காரணம் எமக்கும் மென்பொருள் தெரியும் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விடுகிறீர்கள். நம்மைவிட எதிரி பன்மடங்கு வலுவானவன் என்று நினைத்து நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடங்கினால் எளிதில் எங்களை வென்றுவிடலாம். ஆனால் கேவலமான பார்ப்பன இனம் அவ்வாறு நினைக்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

நீங்கள் மட்டுமில்லை, இன்னும் ஓராயிரம் மென்பொருள் வல்லுனர்கள் வந்தாலும்கூட எம் இயக்கத்தினை அழிக்க முடியாது. டோண்டுராகவன், மாயவரத்தான் ரமேஷ்குமார் போன்ற இழிந்த பிறவிகள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே எம் இயக்கம் கலைக்கப்படும். அதுவரையில் எம் விளையாட்டு தொடரும். முடிந்தால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய்.

வஜ்ரா said...

//
You people can flourish
in this milieu because not many
bloggers are aware of Popper, Kuhn,
Feyeraband or issues in philosophy
of science.In other words charalatans like you are having
a field day here.
//

Srinidhi, Plesae read others comments on the Blog before you start commenting.

You opinion about tamil bloggers is pathetic.
Just because they write in tamil does not mean that they are not aware of Karl Popper and other philosophers.

And stop getting into personal attacks.

//
If Romila Thapar has distorted history how is that her articles
appear in top ranking, peer reviewed journals in history
and historians all over the world
cite her or refer to her works.
//

You scratch my back, and i scratch yours!!!

//
Is that all a conspiracy of the left.
Dont peddle your hindutva bullshit here as history.
//

Did i tell like that..? And where have i "peddled" history here? You guys just cannot digest any opinion other than yours, then its not my fault.

Listen lady,

I have no intention of getting into non sensical arguments with you. If you want to talk about Marxism please talk about philosophy here. I am not interested in Hindutva.

//
//
இடதுசாரி வலதுசாரி விவாதத்தை ஒதுக்கி விட்டு மார்க்ஸியம்,விஞ்ஞானம் பற்றி மட்டுமே விவாதம் தொடர்வதை விரும்புகிறேன். வெள்ளியன்று மீண்டும் இதை பற்றி விவாதிக்க வருகிறேன்.
//

நிச்சயமாக நானும் அதைத்தான் எதிர் பார்கிறேன்.
//

This is what the issue was supposed to be.

sankar.