June 11, 2006

கூட்டுக்களவானித்துவம்

இஸ்லாமியத்தீவிரவாதத்தின் அறிவுசார் முகம் என்ன என்று யாராவது கேட்டீர்கள் என்றால், அது வேறு யாருமல்ல, போர் விரும்பாத, இடது சாரி அறிவு ஜீவிக்களே.

இஸ்லாமியத் தீவிரவாதத்தை இவர்கள் ஆதரிப்பது முகம் சுளிக்கவைக்கும் அளவிற்கு இன்று போய்விட்டது.

டேனியல் பைப்ஸின் வலைப்பக்கங்களைப் பார்க்க. இவர் இந்த இடது சாரிகளின் இஸ்லாமிய Fetish பற்றி நிரையவே எழுதியிருக்கிறார்.

இடது சாரிகள் புஷ், மற்றும் "சாம் மாமா" வைத் திட்டித் தீர்க்காத நாளே இல்லை என்றாகிவிட்ட சூளலில் எத்தனை இடது சாரிகள் ஒசாமாவின் அல் காயிதா செய்யும் அட்டூளியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றால்...ம்ம்ம்ம்ம்ம்.ஹும்!..எனக்குத் தெரிந்து இல்லை. (அப்படியே இருந்தாலும் பூசி மெழுகிஇருக்கிறார்கள்)

லீ ஹாரிஸ் என்கிற அட்லாண்டா எழுத்தாளர் ஒரு படி மேலே போய், தத்துவ அடிப்படையில் மார்க்ஸ்வாதிகள் செய்யும் இந்த இஸ்லாமிய திவிரவாத apologist வலைக்கு காரணம் சொல்கிறார்.

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தில் கூறப்படும் முதலாளித்துவத்தின் அழிவும், சோஷியலிச மக்கள் உருவாகும் Prophecy யும் கவனிக்கப் படவேண்டும்.

  • தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளில் வியாபாரம் படுக்கும்
  • முதலாளிகள் அதிக லாபம் பெற பாட்டாளிகளை நசுக்குவார்கள்
  • பாட்டாளிகள் நசுங்கி ஏழ்மைக்குத் தள்ளப்படுவர்
  • பாட்டாளிகள் புரட்சி வெடிக்கும்
  • சோஷியலிச ஆட்சி அமையும்


இது எல்லாமே, பாட்டாளிகள் அதாவது கீழ்மட்டத் தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்குச் செல்லுதலில் தான் நிறுத்தப்படுகிறது. மேலை நாடுகளில் நிச்சயம் அது நடக்கவில்லை. மாறாக தொழிலாளர்கள் ஏழ்மையிலிருந்து மீண்டு பணம் சேர்க்க ஆரம்பித்து பணக்காரர் ஆனார்கள் என்பது உலகறிந்த சரித்திர உண்மை. அதை மார்க்ஸ்வாதிகள் 50 களிலேயே உனர்ந்துவந்தனர். இதை உணர்ந்தும் மார்க்ஸின் தத்துவம் நடக்கவில்லை என்பதை அறிந்தும் அதை மாற்றிக் கொள்ள முடியாமல் தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களைவிட்டு ஏழை நாடுகளில் இருக்கும் மொத்த மக்களையும் புரட்சிக்குத் தூண்டும் விதமாக செயல்படத் துவங்கிவிட்டனர். ஆகயால் மூன்றாம் உலக நாட்டிலிருந்து முதலாளித்துவத்தின் முழுப்பரிணாமமான அமேரிக்காவைத் தாக்கும் சக்தி எதுவானாலும் இவர்கள் ஆதரிக்கின்றனர்.


அவர் சொல்லும் காரணம் உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

9/11 நடந்தது, அதை இந்த மார்க்ஸ்வாதிகள், மூன்றாம் உலக நாடுகளின், அமேரிக்க முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய புரட்சியின் துவக்கம், என்றெல்லாம் வர்ணித்தார்கள்.

இப்போதும் எந்த ஒரு இஸ்லாமிய அமேரிக்க எதிர்ப்பையும் வெட்கமில்லாமல் தூக்கிப் பிடிப்பது மார்க்ஸ்வாதிகளின் அறிவை கேள்வி கேட்க வைக்கிறது.

இஸ்லாமிய அமேரிக்க எதிர்ப்பு, இஸ்லாமிய இந்திய எதிர்ப்பு, எல்லாம் ஏழைகளின் புரட்சி என்பவர்கள் 9/11 போன்ற தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் பண வசதி படைத்த சவூதியிலிருந்து வந்தவர்கள், கஷ்மீர் தீவிரவாதிகள், மதானி போன்ற பயங்கரவாதிகள் ஒன்றும் ஏழைகள் அல்ல. (இன்று ஹிண்டுவில் வந்த செய்தியில் 104 கி. இருந்த மதானி 54 கி வாகிவிட்டதாக கவலைதெரிவித்து கேரள மார்க்ஸ்வாத முதல்வர் கருணானிதியைச் சந்தித்து பெயில் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 104 கி. எடை கொண்டவன் ஏழை என்றால் என்ன அபத்தம் ?) என்பதை யோசிக்கவேண்டும்.

இவர்களின் ஒரே நம்பிக்கை, இஸ்லாம், மிகவும் சோஷியலிசமான மதம். காரணம், இஸ்லாத்தில் சமத்துவம், சகோரதத்துவம் போதிக்கப் படுகின்றது என்பது. இந்த நம்பிக்கையே, இவர்கள், இஸ்லாத்தில் உள்ள குறைகளை பார்க்க மறுக்கின்ற காரணம். உதாரணமாக, பெண்கள் வெலைக்குச் செல்லக் கூடாது போன்ற அபத்தங்கள் மார்க்ஸ்வாத பெண்ணீயத்தில் பேசப் படமாட்டாது.

இதே நம்பிக்கைதான், இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஞாயப்படுத்துவது போன்ற அபத்தங்கள் இவர்கள் செய்யக் காரணமாக இருக்கின்றது என்பது என் எண்ணம். உதாரணமாக பாகிஸ்தான் அனுகுண்டு தயாரிக்க இந்தியா காரணம் என்று நம்பவைப்பது, கஷ்மீர் தீவிரவாதத்தை ஆதரிப்பது, பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை பற்றி பேசாமலிருப்பது.
இவர்கள் கூட்டுச் சேர்ந்து இப்படி செய்யும் அட்டூளியம் கூட்டுக்களவானித்தனம். இவர்களின் கொள்கை கூட்டுக்களவானித்துவம்.

பி. கு., மார்க்ஸ்வாதிகளுக்கு ஓப்பன் கேள்வி...
பாகிஸ்தானிலோ, அல்லது ஈரானிலோ ஏன், மார்க்ஸ்வாதிகள் பேச்சு எடுபடுவதில்லை என்பதை யாராவது யோசித்ததுண்டா?

52 comments:

Anonymous said...

அப்பு, உலகலாவிய விசயங்கள் இருக்கட்டும் நமது தமிழ் நாட்டில் காஞ்சி சங்கராச்சாரியாரின் அஜால் குஜால்களைப்பற்றியும், பாப்பா பட்டி, கீரிப்பட்டி பற்றியும் விவாதியுங்களேன்!

வஜ்ரா said...

அப்பு அனானி, அந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, குண்டுச்சட்டில குதிரை ஓட்டுரத நீங்கதான் பண்ணுங்களே...

பேர் போட்டு எழுதுரதுக்கு வக்கில்ல..வக்காலத்துக்கு வந்துற்ரது...

Unknown said...

உங்களைப் போன்ற உயர்ஜாதிவெறி கொண்ட எழுத்தர்களால்தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர். எல்லோரையும் சந்தேகத்துடனேயே பார்க்க வைக்கிறது.
இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற அறிவு கெட்ட வாதம். எந்தத் தீவரவாதத்தையும் தீவிரவாதமாகப் பாருங்கள். அதை எந்த மதத்துடனும் சம்பந்தப் படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்தே செய்யும் ஈனச்செயல்.
இதிலே இஸ்லாமிய இந்திய எதிர்ப்பு என்ற புது வாதம் - அதை கொயபல்ஸ்தனத்துடன் திரும்பத் திரும்பக் கூறல்
ஒருவன் செய்த தப்புக்கு தண்டணை கொடு. அதை விடுத்து அவனை விசாரணையில்லாமல் ஜெயிலில் நீண்ட நாட்கள் வைப்பது கடைந்தெடுத்த அயாக்கியத்தனமில்லையா? அதை உன் சகோதரனுக்குச் செய்தால் நீ ஸ்மரணை இல்லாமல் பார்ப்பாயா? வஜ்ரா தியரிப்படி 104கிலோ இருப்பவன் ஏழையாய் இருக்க மாட்டானோ?
இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றிருப்பதாக திரும்பத் திரும்பச் சொல்லும் கொயபல்ஸ் கணம் விடாதா? வேலைக்குச் செல்லும் முஸ்லீம் பெண்களை இஸ்லாத்தை விட்டு ஒதுக்கி விட்டார்களா? பார்த்தாவது திருந்த மாட்டீரா?
கயவாணித்தனம் கொண்டவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக மற்றவர்களை களவானியெனச் சொல்வது 'துரத்தப்படும் திருடனும் கூட்டத்தில் புகுந்து கொண்டு திருடன் திருடன் எனக் கத்துவதை ஒத்திருக்கிறது.

ஜயராமன் said...

ஷங்கர் அவர்களுக்கு,

மிக நல்ல பதிவு.

உலகெங்கிலும் தோற்றுப்போன ஒரு கம்யூனிஸ மதத்தை புதுப்பிக்கும் வேலையில் இவர்கள் இப்படி தேசத்துரோக வேலை செய்து ஓட்டுக்காக முஸ்லிம் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படை.

இவர்களை தோலுரிப்பது ரொம்ப சுலபம்.

Samuel Huntington அவர்களின் Clash of Civilizations படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிகவும் விவாதத்தில் சமீபத்தில் இருக்கும் புத்தகம்.

தங்கள் கருத்து அவரின் கருத்துடன் மிக நெருக்கமாக வருகிறது, ஆனால் வேறு விதமாக.

Samuel இனி நடக்கும் போர்கள் அரசுக்களால் இல்லாமல் சமுதாயங்களால் நடக்கும் என்கிறார்.

அவர் கூற்றுப்படி முஸ்லிம் தேசங்கள், சைனா முதலிய கம்யூனிஸ நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவை தாக்கும் (அல்லது) நிலை குலைக்க முயற்சி செய்யும் என்கிறார்.

http://en.wikipedia.org/wiki/Clash_of_civilizations

இதில் கண்டுள்ள படத்தை பார்க்கவும்.

இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கின்றன என்பதும் அவர் கொள்கை.

தங்கள் கருத்து என்ன?

நன்றி

வஜ்ரா said...

//
இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற அறிவு கெட்ட வாதம்.
//

ஆம், அறிவு கெட்டவாதம் தான்..."செகுலர் தீவிரவாதம்" என்று ஒன்று இப்போது கடைப்டிக்கப் படுகிறது...அதைவைத்துப் பார்த்தால் இது அறிவு கெட்ட வாதம் தான்...எதன் பெயரில் தீவிரவாதம் நடத்தப் படுகிறதோ அதைவைத்துதானே பார்க்கவேண்டும்...!!?

ஷிவ சேனா தியேட்டர்களில் புகுந்து அடித்து நொருக்கினால், "ஹிந்து அடிப்படைவாதம்" என்று தானே சொல்கிறீர்கள்...!! அதை யாரும் தனி நபர் பெயர் சொல்லி அவரின் அடிப்படைவாதம் என்று சொல்வதில்லையே...!!

//
104கிலோ இருப்பவன் ஏழையாய் இருக்க மாட்டானோ?
//

இந்தியாவில் இருப்பானான்னு தெரியல சாமி...எங்க ஊர்ல ஏழைன்னா சோத்துக்குக் கூட கஷ்டப்படுறவந்தான்...!! உங்க ஊர்ல எப்படி...? டெய்லி மூணு வேளை கோழி பிரியாணி சாப்பிடறவன் தான் ஏழையா?

//
வேலைக்குச் செல்லும் முஸ்லீம் பெண்களை இஸ்லாத்தை விட்டு ஒதுக்கி விட்டார்களா?
//

நான் இங்கே இஸ்லாத்தை குறை சொல்லவில்லை. அது என் வேலையல்ல...எல்லா மதங்களில் இருப்பது போல் இஸ்லாத்தில் குறைகள் உள்ளன என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...அதையும் சுட்டிக்காட்டியாக வேண்டிய இடது சாரிகள் அதைச் செய்வதில்லையே..என்று நான் இடது சாரிகளைத்தான் வசை பாடிக் கொண்டிருக்கிறேன்...உங்களுக்கு ஏன் பொத்துக் கொண்டு வருகிறது...? கூட்டாளியை குத்திக் காட்டியவுடன் கோபம் வருகிறதோ?

உங்கள் மதானிக்கு வக்காலத்து தமிழக அரசிடம் போய் வாங்குங்கள்...தப்பான இடத்தில் வந்து கோபத்தைக் கொட்டித்தீர்க்காதீர்கள்.

வஜ்ரா said...

ஜெயராமன் அவர்களே...
நன்றி,

Clash of the civilization பற்றி படித்திருக்கிறேன்..ஆனால் அந்த புத்தகத்தைப் படித்ததில்லை.

விகிபீடியா சுட்டியை வைத்து அதை அளப்பது நல்லதல்ல. ஆனால், ஹண்டிங்டன் கூற்று 9/11 நடக்கவில்லை என்றால் திரும்பிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். ஏதோ வந்து போன புத்தகமாகியிருக்கும்.

Amar said...

I always held a notion that the leftists have a vested interest in keeping the poor - poor for their life.

Thanks for the link, I'm glad I was right.

இந்த மதானி மெட்டர் பத்தி ஒன்னு சொல்லிகிறேன்.

அந்த ஆள விடுதலை செய்ய சொல்லி ஒரு கொயம்புத்தூர் முஸ்லிம் கூட சொல்ல மாட்டார்.

(த.மு.மு.க நடத்துன ஆர்பாட்டத்துல கூட கொயம்புத்தூர்காரங்க ஜாஸ்தி ஈடுபாடு காட்டல)

குண்டு வச்சதால இங்கே ஒரு economic boycott நடந்துச்சு....அந்த மாதிரி இனி எதுவும் நடந்தா அவங்களுக்கு தான் கஷ்டம்.

குண்டு வெடிப்புக்கு அப்புறம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு ஏகபட்ட கலெக்ஷன்,logistic சப்பொர்ட்.

இதுக்கு சங்கத்துக்குகாரங்க pre-emptive action எடுக்க தவறிய கருனாநிதிக்கு தான் நன்றி சொல்லனும்.

ஒழுங்கா வோட்டு அரசியல் நடத்தாம இருந்து இருந்தா கோவை குண்டு வெடிப்பு நடந்தே இருக்காது....கேடு கெட்ட திராவக அரசியல்!

வஜ்ரா said...

சமுத்ரா,
தீவிரவாதிகள் அதில் முஸ்லீம்கள் ( politically correct! ) மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வருகிறார்கள் என்ற மாயையை உருவாக்குவதில் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ள இடது சாரிகளின் முட்டாள்தனத்தைக் காட்டத்தான் மதானி மேட்டர் சொன்னேன்...

அதுக்கே, 104 கிலோ எடை கொண்ட ஏழை இருக்கக் கூடாதான்னு ஒரு ஜீவன் கேள்வி கேட்குது...

ஜூலியன் said...

Quoting Daniel Pipes??
Sitting in Israel it is hard to get the things real. Come to California and watch the cable for sometime to understand what smokes out from Daniel's pipe. He, a neocon, who won Israel's Guardian of Zion award, lives on spitting venom on Islam and anything he thinks hurtful to Israel's interests. Probably his pipe dreams may fit your wistful thinking. You are entitled to believe whatever you believe. Yet you may want to slow down before quoting people like him. Unfortunately, Israel has no direct confrontation with India. Otherwise you may see him by now spitting and cursing India and Hinduism.

ஜூலியன் said...

By the way, Mr. Jeyaraman and people like you may glorify Clashes of Civilization as it may critique on Islam. However you many want read it in the light that West Vs. East, rather than Islam Vs. Christanity. After all Islam, Jewism and Christianity are all semitic religions.

Also, there have been number of books in the west pointing out the errors, wrong assumptions and the misforecasts of Huntington. You may want to read them too, or may you not??

அசுரன் said...

அய்யா,

அந்த இந்துக்கள் இந்துக்கள் என்று நீங்கள் சொல்லும் மக்கள் கூட்டத்திற்க்கு, நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள் என்று பார்த்துவிட்டு, மற்றவர்களை பற்றி பேசவும்.

the below comments I gave as a reply to sankar in Prasanna' blog:
//எந்த மக்கள் மீது நின்று கொண்டு தாங்கள்தான் பெரும்பான்மை என்று சங்கரின் இந்துத்துவ மற்றும் இந்து பேரபிமானிகள் குரல் எழுப்புகிறார்களோ அந்த மக்களின் நடைமுறை வாழ்வா, சாவா பிரச்சனைகளுக்கு பல இன்னுயிர் தியாகங்கள் செய்து போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் தான்.

பெரும்பான்மை என்று கூச்சல் எழுப்பும் இந்த அக்ரஹார கோஸ்டிகள்(அக்ரஹாரம் - எங்களது பார்வையில், பிறப்பின் அடிப்படையில் அல்ல) என்றைக்குமே அந்த பெரும்பான்மை மக்களுக்காக போராடியதில்லை.

இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் யாரை பிரதிநிதித்துவ படுத்துகிறார்கள். அப்புறம் வருத்தம் வேறுபட்டு கொள்கிறார்கள்.

இவர்கள் சொல்லுவது போல் இந்து மதம் பெரும்பான்மை என்றால் கம்யூனிஸ்டுகள் தான் அந்த பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு(இந்துக்களுக்கு)(இவர்கள் வாதத்தை சரி என்று வைத்துக்கொண்டால்) சுயநலமின்றி போராடியிருக்கிறார்கள், இந்துத்துவவாதிகள் அல்ல.//

+++++++++

Repeated assertion என்று நீங்கள் ஒன்று சொல்லுவீர்களே அதை யார் செய்கிறார்கள் என்று பரிசீலிக்கவும்.

அந்த இந்துக்கள் என்று பரவலாக சொல்லப்படும் மக்களுக்கு தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்வதை தவிர்த்து நீங்கள் என்ன கிழித்தீர்கள்?

- கங்கையை சூயஸ் டெமொடரண்டுக்கு எழுதி வைத்ததையா?
- Patent Rights க்கு அனுமதி அளித்து, ஏழை மக்களை ரேபிஸ் நோய்க்கு காவு கொடுப்பதையா?
- நச்சு கழிவு கப்பலை வரவேற்றதையா?
- லாபமீட்டும் பொது கம்பேனிகளை(NALCO) அடிமாட்டு விலைக்கு விற்றதையா, அல்லது விற்க்க முயற்சி செய்ததையா?


(அந்த தீவிரவாதமும் முக்கால் டவுசர் கிழிந்து, அருதி பெரும்பான்மையில் மாவொயிஸ்டுகள் வந்துவிட்டதால், அம்மணமாக நிற்கிறது இந்துத்துவம். ஆதரவாலர்களோ அடுத்த டவுசர் தேடும் அவசரத்தில் சிகப்பு டவுசரை மாட்ட முயற்சி செய்கிறார்கள்).

இவை(மேலே சொன்னவை) எல்லாம் இந்துத்துவவாதி செய்ததில்லையா? இல்லை மக்கள் விரோதமாக செயல்படும் பொழுது, மதத்துக்கு ஒரு முகமூடியும், பொருளாதாரத்துக்கு ஒரு முகமூடியும் போடுவீர்களா?

மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள், மேலும் இந்த இந்துத்துவவாதிகளின் பல்வேறு மக்கள் விரோத கொள்கைகளால் இறந்த/பாதி இறந்து இன்று நடைபிணமாக வழ்ந்து கொண்டிருக்கும் மக்களை கணக்கில் எடுத்தால், உங்கள் இந்துத்துவ வாதிகளைவிட, முஸ்லீம் தீவிரவாதிகளால் இறந்தவர்களின்/சிரமப்பட்டவர்களின் எண்ணிக்கை கால் தூசி கூட வராது(வேண்டுமானால் புள்ளிவிவரம் தந்து தங்கள் கூற்றை நிருபிக்கவும்).

இதில் தங்கள் கோஸ்டிகள் உருவாக்கும் கலவரங்கள் வேறு. இதுவரை ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்திருக்கிறீர்களா என்று பார்த்தால், ம்ம்ம்ம்...ஒன்னையும் காணும்.

முஸ்லீம் தீவிரவாதியும், இந்து தீவிரவாதியும் செய்வது ஒன்றுதான். இதில் இந்து தீவிரவாதியை கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பதற்க்கு காரணம், பார்ப்பனியம் என்ற தத்துவத்தின்பால் இந்த சமூகத்தின் மீது அமர்ந்து கொண்டு, பெருவாரியான மக்களை அடக்கியாண்டதோடல்லாமல். இன்றும் அதிகாரத்தில் இருக்கும் அந்த பண்ப்பாட்டு விழுமியங்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு வெறி கொண்டு கிளம்பியுள்ளதே, அதனால்தான் அதை அம்பலப்படுத்தி எதிர்க்கிறோம். மேல் நிலையில் இந்த அடக்குமுறைக்கான பண்ப்பாட்டுச் சூழலை, கருத்து நிறுவணங்களை நிலை நிறுத்துவதன் மூலம் கீழ் நிலையில் அதை செயல்படுத்துவதில் வசதி ஏற்ப்படுத்தி கொடுக்கிறதே, அதற்க்காகத்தான். இந்த extra evil effect முஸ்லீம், மற்றும் கிறிஸ்த்துவ மதங்களில் இல்லை என்பதுதான் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்துக்கு sepcial terrorist அடையாளம் ஏற்ப்படுத்தி தருகிறது.

இந்த மேல்கட்டுமானம், கீழ்க்கட்டுமானம், உற்பத்தி உறவுகள் இவற்றை ஆய்வு செய்வதற்க்கு கம்யூனிச அடிப்படை அறிவாவது வேண்டும்.

இந்து மதத்தை விமர்சனம் செய்பவர்கள் அதன் தத்துவ மூலங்களை படித்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களே, நாமும் அதுபோல் கம்யூனிச மூலங்களை படித்துவிட்டு விமர்சனம் செய்யலாம் என்ற அடிப்படை நேர்மை கூட கிடையாது இந்த இந்துத்துவ வாதிகளுக்கு.

இவைதான் எமது மக்களின் பிரச்சனையாக உள்ளன. அதை தாண்டி இந்து காலாச்சாரம் அழிந்துவிடும் என்ற விசயத்தை, இந்து மதம் என்று சொல்லப்படும் மதம் சிறுபான்மை மதம் என்ற diclaimer-உடன் publish பன்னவும்.


அப்படி விமர்சனங்கள் பிடிக்கவில்லை என்றால், தங்கள் தளத்தை private ஆக்கிக் கொள்ளவும்.


மக்களுக்காக இந்துத்துவவாதிகள் - உயிரை அல்ல, மயிரைக்கூட பிடுங்கிப் போட்டதில்லை. மக்களுக்காக, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்துக்காக பல தியாகங்கள் செய்தவர்களை வக்கனையாக உட்கார்ந்து கொண்டு அம்மிக்கல் ஆட்டுவது ரொம்ப சுலபம் அப்பு!

அதுதான் நம்ம சங்கரே சொல்லிவிட்டாரே
//குண்டுச்சட்டில குதிரை ஓட்டுரத நீங்கதான் பண்ணுங்களே...//

அப்புறம் என்ன உள்நாட்டு பிரச்சனைகளுக்கு நாங்கள்(கம்யூனிஸ்டுகள், சமூக நீதி போராளிகள்), வெளி நாட்டு(குண்டு சட்டிக்கு வெளியே உள்ள) பிரச்சனைகளுக்கு அவர்கள் - இந்துத்துவவாதிகள்.

எவையெல்லாம் குண்டு சட்டிக்கு வெளியே உள்ளன?
- இஸ்ரேல் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுவது.
- பாகிஸ்தான் பற்றி இவர்களது உளவு பிரிவு அனுப்பும் தகவல்களை மக்களுக்கு சொல்லுவது.
- பில் கிளின்டனை உலகைக் காக்க வந்த கிருட்டினன் என்று சொல்லுவது(மோனிக லெவின்ஸ்கியிடம் வாய் போட செய்து சுகம் அனுபவித்த அதே கிளின்டன்தான்). This is not a insult to Hindhuism(this is known as appeasing politics).


தின்ன சோறு செரிக்கவேண்டாமா? அதுதானே உங்கள் அதிக பட்ச அரசியல்.

வஜ்ரா said...

ஜூலியன்...

Do not jump to conclusions right away...being in israel does not mean that we only listen to filtered media. I can read Daniel pipes and i can read Noam Chomsky sitting in Israel as much as you can read and praise Hugo Chavez, who does Media censorship, sitting in California.

I have not read Samuel huntington as of now...but i do not think i can straight away tell that i would agree with him in all. As i have already mentioned 9/11 made it famous. Otherwise we indians would have been shouting from the top of our voice that islamic fundamentalism is the root cause of trouble in India and the same is quite true to Jewish people who have faced as much terror as Hindus have.

But the scotch whisky, loony leftists from JNU campus would be supporting and eulogizing islamic terrorism in the name of social conflict.

//
Israel has no direct confrontation with India. Otherwise you may see him by now spitting and cursing India and Hinduism.
//

The point here is, what position would you take in that situation? Would you support Pipes because he is spewing venom against hinduism (which many loony leftist love to hate), or would you look in to the matter and decide on whats good for your country.

Amar said...

//Come to California//

LOL.
My American friends say DONT ever go to that "liberal" land . :)


//Clashes of Civilization //

It MIGHT turn out to be the rest of the world VS Islam.

I pray and hope that it does not.

The Chinese, the Russians - almost everybody have a 'problem' with Moslems.

Anonymous said...

//104கிலோ இருப்பவன் ஏழையாய் இருக்க மாட்டானோ? //

aaha,enna oru arivu poorvamaana keelvi:-)

we should erect a statue for the person who asked this question in the city center.

Muse (# 01429798200730556938) said...

Samudra,

>>> The Chinese, the Russians - almost everybody have a 'problem' with Moslems.<<<

You missed an important group that is afflicted by Moslems - It is none other than Islam itself. I guess that the religious violence within Islam is more in Islamic world than inflicted upon other societies.

வஜ்ரா said...

//
It MIGHT turn out to be the rest of the world VS Islam.

I pray and hope that it does not.
//

That is exactly my fear...the way these leftists soft pedal terrorist acts gives me such a sick feeling. This will alienate the moslems and most likely will make them more aggressive.

The entire responsibility for anything that follows should be taken by those leftists who support and glorify FBI "most wanted" celibrities and down play islamic terrorism.

Anonymous said...

மதானி பற்றி பேசுகிறீர்கள்... சரி... ஆனால் இன்று வரை அவர் ஒரு விசாரணை கைதிதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் நேரிடையாக குண்டு வெடிப்புகளில் கலந்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. இன்னும் சொன்னால் இன்றுவரை சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு விசாரணையும் குற்றப்பத்திரிகையும் இல்லாமல் தான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றனர்.

ஆனால், உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ என 'புகழ'ப்பட்ட அயோக்கியன் மோடியோ முதல்வர் பதவியில் ஒய்யராமாக! கேடுகெட்ட வக்கிரத்தன்மைகொண்ட சங்பரிவாரத்தின் அயோக்கிய பாசறையில் வளர்ந்த இவனின் நிலை வேறு எவ்வாறு இருக்கும். இவனைப்போன்ற அயோக்கியன்களுக்கு துணைபோக சில இந்துத்துவ பயங்கரவாதிகளும் அவர்களுக்கென்று சில 'பிளாக்கு'களும்.

உலக அளவில் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் முதல்வரும் இந்த அளவு கேவலப்பட்டிருப்பார்களா? அமெரிக்காவிற்கு விசா தடை, லண்டனில் நுழைந்தால் கைது செய்ய உத்தரவு என கேவலப்பட் ஒரு அயோக்கிய முதல்வரை கொண்டதற்காக இந்தியர்களாகிய நாம் கேவலப்படவேண்டும்ட. அதைவிட்டுவிட்டு இவனைப்போன்ற கொலைவெறி பிடித்தவர்களுக்கு ஆதரவாக பேசுவது என்பது அவனது அயோக்கியத்தனத்திற்கு துணைநின்ற பயனையே தரும். இங்கு பதிபவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க.

மனிதத்ததையும் மனிதாபிமானத்தையும் இழந்த கேடுகெட்ட சங்பரிவாரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து எரியும் நெருப்பில் இட்ட இவர்கள் சமாதானவாதிகள்அல்லாமல் வேறுயார்.

கூட்டம் கூட்டமாக பதினைந்தாயிரத்திற்கும அதிகமான முஸ்லிம்களை (அதில் பெண்கள், குழந்தைகள் அதிகம்) கொன்றொழித்த கயவர்கள் கோவை குண்டுவெடிப்பை பேசுவது ஆச்சரிமாக இருக்கிறது.

இப்படிக்கு
கண்ணன் ராஜா

குறிப்பு : பெயர் போட வக்கிலை.. bla bla bla... என்று பெசவேண்டாம். என் ஐடி என்ன என் அட்ரஸையே போடும் வக்கு உண்டு. ஆனால், உன் போன்றவர்களுக்கு வேண்டு ஒருமுறை லாகின் செய்யவேண்டுமா என்ன?

Anonymous said...

மதானி பற்றி பேசுகிறீர்கள்... சரி... ஆனால் இன்று வரை அவர் ஒரு விசாரணை கைதிதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் நேரிடையாக குண்டு வெடிப்புகளில் கலந்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. இன்னும் சொன்னால் இன்றுவரை சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் எந்த ஒரு விசாரணையும் குற்றப்பத்திரிகையும் இல்லாமல் தான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றனர்.

ஆனால், உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ என 'புகழ'ப்பட்ட அயோக்கியன் மோடியோ முதல்வர் பதவியில் ஒய்யராமாக! கேடுகெட்ட வக்கிரத்தன்மைகொண்ட சங்பரிவாரத்தின் அயோக்கிய பாசறையில் வளர்ந்த இவனின் நிலை வேறு எவ்வாறு இருக்கும். இவனைப்போன்ற அயோக்கியன்களுக்கு துணைபோக சில இந்துத்துவ பயங்கரவாதிகளும் அவர்களுக்கென்று சில 'பிளாக்கு'களும்.

உலக அளவில் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் முதல்வரும் இந்த அளவு கேவலப்பட்டிருப்பார்களா? அமெரிக்காவிற்கு விசா தடை, லண்டனில் நுழைந்தால் கைது செய்ய உத்தரவு என கேவலப்பட் ஒரு அயோக்கிய முதல்வரை கொண்டதற்காக இந்தியர்களாகிய நாம் கேவலப்படவேண்டும்ட. அதைவிட்டுவிட்டு இவனைப்போன்ற கொலைவெறி பிடித்தவர்களுக்கு ஆதரவாக பேசுவது என்பது அவனது அயோக்கியத்தனத்திற்கு துணைநின்ற பயனையே தரும். இங்கு பதிபவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க.

மனிதத்ததையும் மனிதாபிமானத்தையும் இழந்த கேடுகெட்ட சங்பரிவாரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து எரியும் நெருப்பில் இட்ட இவர்கள் சமாதானவாதிகள்அல்லாமல் வேறுயார்.

கூட்டம் கூட்டமாக பதினைந்தாயிரத்திற்கும அதிகமான முஸ்லிம்களை (அதில் பெண்கள், குழந்தைகள் அதிகம்) கொன்றொழித்த கயவர்கள் கோவை குண்டுவெடிப்பை பேசுவது ஆச்சரிமாக இருக்கிறது.

இப்படிக்கு
கண்ணன் ராஜா

வஜ்ரா said...

அபு ஃபாதிமா, கண்ணன் ராஜா,

ஒரே பதிலை இருவர் ஈ அடிச்சான் காப்பி போல் எழுதி இருக்கிறீர்களே...?

அல்லது ஒருவர் இருவர் போல் இரண்டு ப்ன்னூட்டம் போட்டு இருக்கிறிர்களா?

Anonymous said...

/மதானி பற்றி பேசுகிறீர்கள்... சரி... ஆனால் இன்று வரை அவர் ஒரு விசாரணை கைதிதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அவர் நேரிடையாக குண்டு வெடிப்புகளில் கலந்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. /

என்ன விவரமா "நேரிடையாக குண்டு வெடிப்புகளில் கலந்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது" அப்படின்னு எழுதறீங்க.சபாசு..சபாசு..நாங்க நோட் பண்ணிகிட்டு தான் இருக்கோம்.:-)

அவர் மேல நேரடியா குண்டு வெச்சார்ன்னு குற்றச்சாட்டு கிடையாது.ஒசாமா பின்லேடன் கூடத்தான் நேரடியாக எந்த குண்டுவெடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை.அதுக்காக விட்டுட முடியுமா?மதானி கேசை எட்டு வருஷமா இழுத்தடிப்பது மதானிதான்.குற்றப்பத்திரிக்கை வாங்கமறுப்பு,உடம்பு சரியில்லை என நாடகம் ஆடுவது அத்தனையும் செய்து தப்பிக்க பார்க்கிறார்.

/ஆனால், உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ என 'புகழ'ப்பட்ட அயோக்கியன் மோடியோ முதல்வர் பதவியில் ஒய்யராமாக! /

உங்க பாசையிலேயே சொல்லணும்னா

"மோடி நேரடியா கலவரம் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது"

இப்படி சொன்னா கடுப்பாகுதுல்ல?அதை விட அதிக கடுப்பு நீங்க "அவர் நேரிடையாக குண்டு வெடிப்புகளில் கலந்துகொண்டார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது" அப்படின்னு சொல்றப்ப வருது.

Anonymous said...

கூட்டம் கூட்டமாக பதினைந்தாயிரத்திற்கும அதிகமான முஸ்லிம்களை (அதில் பெண்கள், குழந்தைகள் அதிகம்) கொன்றொழித்த கயவர்கள் கோவை குண்டுவெடிப்பை பேசுவது ஆச்சரிமாக இருக்கிறது.//

இதை நீங்க சொல்றீங்க?உலகம் பூரா குண்டுவெச்சு கொலை செய்யும் தீவிரவாதிகள் யாருன்னு எல்லாருக்கும் தெரியும்.அர்மேனியாவில் மட்டும் எத்தனை லட்சம் பேரை தீத்து கட்டினாங்க உங்க ஆளுங்கன்னு தெரியுமா?

ஆச்சரியப்பட வேண்டியவங்க காபிர்கள் தான்.நீங்க இல்லை

Anonymous said...

குறிப்பு : பெயர் போட வக்கிலை.. bla bla bla... என்று பெசவேண்டாம். என் ஐடி என்ன என் அட்ரஸையே போடும் வக்கு உண்டு. ஆனால், உன் போன்றவர்களுக்கு வேண்டு ஒருமுறை லாகின் செய்யவேண்டுமா என்ன?//

பொம்பளை பேரில் லாகின் செஞ்சு அதே பின்னூட்டத்தை இடும் மாவீரர் அட்ரஸையே தருகிறாராம்.:-)

Vaa.Manikandan said...

இந்த விவாதம் குறித்தான பின்னூட்டம் இல்லை.

அபு ·பாத்திமா என்ற பெயரில் இயங்கும் அனானி, இன்றுதான் இந்தப் பெயரை ·ப்ளாக்கரில் உருவாக்கி இருக்கிறீர்கள். நான் இராண்டாவது ஆளாக தங்களின் ·பிளாக்கர் Profile ஐ பார்க்கிறேன்.

இன்னொரு பெயர் கண்ணன் வேறு.

சில விவாதங்கள் நடை பெறும் போது பொருள் படத் தக்க வகையில் கருத்து சொல்ல இயலும் எனில் தைரியமாக பெயர் போட்டு கலந்து கொள்ளுங்கள். அல்லது அனானி என்ற பெயரிலேயே பங்கு பெறுங்கள். தங்களை யார் என்ன சொல்லப் போகிறார்கள். தங்களின் கருத்து சரியென்னும் பட்சத்தில் நிச்சயம் உங்களுக்கான ஆதரவு கிடைக்கும். தங்களின் கருத்து மீதான நம்பிக்கையில் சிறிதேனும் சந்தேகம் வருமெனில், தள்ளி நின்று விவாதத்தை கவனிக்கலாம்.

யாரும் எதையும் சிறு கணத்தில் தலை கீழாக மாற்றி விடப் போவதில்லை. பிறகு எதற்கு இருளில் பதுங்கி கல்லெறிபவன் போல நடந்து கொள்ள வேண்டும்?

சரி என்று தோன்றவில்லை.

வஜ்ரா said...

சரியாகச் சொன்னீர்கள் மணிகண்டன் அவர்களே...

ஏனோ நான் என் கோபத்தை இடது சாரிகள் மீது காட்டினால் இஸ்லாமிய முல்லாக்களுக்கு மூக்கில் வேர்த்து வந்து திட்டிவிட்டுப் போகின்றனர்... ஏன்? இது இந்த ஹைபாதீஸீஸ் கூட்டுக் களவாணித்தனத்திற்கு ப்ரூஃப் போல் ஆகிறது கூடத் தெரியவில்லை இந்த மர மண்டைகளுக்கு!!

Muse (# 01429798200730556938) said...

>>>> சங்பரிவாரங்கள், நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்து எரியும் நெருப்பில் இட்ட ......... <<<<

இது போன்ற பொய்யான கதைகள் ஒவ்வொரு கலவரத்தின்போதும் எல்லா குழுக்களும் சொல்லுவதுதான். அந்த கர்பிணிப் பெண்ணின் கணவரோ, உறவினரோ வெளிவந்து இது போன்ற விஷயங்களைக் கூறுவதில்லை. நடந்திருந்தால்தானே. வதந்திகளின் மூலம் வெறுப்பு ஏற்படுத்துவது பண்டைக்கால டெக்னிக். இன்றளவும் உபயோகப்படுகிறது. இதுபோன்ற வதந்திகள் பரப்புபவரின் நோக்கம் இந்த வதந்தியில் இருக்கும் நிகழ்வை தன் எதிர் கூட்டத்தாரின் மேல் நடத்த வேண்டும் என்பதே.

பி.கு: அந்த வரியை மீண்டும் படித்துப் பார்த்தேன். குலை நடுங்குகிறது. எப்படி இந்த அளவு கொடூரத்தை இந்த மனிதரால் கற்பனை செய்ய முடிகிறது?

மாமன்னன் said...

இது கற்பனை எல்லாம் இல்லை.

ஸூனான் அபுதாவுது புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. யார் யாரெல்லாம் முகம்மதுவை அவதூறு செய்கிறார்களோ அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் வயிற்றை கிழித்து கொல். அப்படி கொல்பவர்களுக்கு தண்டனையும் கிடையாது என்பது இஸ்லாமிய சட்டம்.

Book 38, Number 4348:
Narrated Abdullah Ibn Abbas:

A blind man had a slave-mother who used to abuse the Prophet (peace_be_upon_him) and disparage him. He forbade her but she did not stop. He rebuked her but she did not give up her habit. One night she began to slander the Prophet (peace_be_upon_him) and abuse him. So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet (peace_be_upon_him) was informed about it.

He assembled the people and said: I adjure by Allah the man who has done this action and I adjure him by my right to him that he should stand up. Jumping over the necks of the people and trembling the man stood up.

He sat before the Prophet (peace_be_upon_him) and said: Apostle of Allah! I am her master; she used to abuse you and disparage you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not abandon her habit. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.

Thereupon the Prophet (peace_be_upon_him) said: Oh be witness, no retaliation is payable for her blood.
----
இந்த புனித கழிசடையை எல்லாம் நீங்களே மொழி பெயர்த்துக்கொள்ளுங்கள்.

Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

வஜ்ரா said...

போனபார்டு ஐயா, உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டேன்...பதிவுக்கு ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா...என்பதை தெளிவுபடுத்தவும்...!

இங்கே இஸ்லாமியத் தீவிரவாதத்தை மார்க்ஸ்வாதிகள் பெரிது படுத்திப் பேசுவதில்லையே ஏன் என்கிற கேள்வி வைக்கப் பட்டுள்ளது...அதற்கும் நீங்கள் பதிந்த பின்னூட்டத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?

பில் கிளிண்டன், மோனிகா லெவின்ஸ்கி, இந்துத்வா, கம்யூனிச சித்தாந்தம், இதைப் பற்றிய விவாதமா இது..?

அதெல்லாம் இருக்கட்டும்...

//
இந்து மதத்தை விமர்சனம் செய்பவர்கள் அதன் தத்துவ மூலங்களை படித்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களே,
//

ஓ அப்படியா...நீச பாஷை என ஒதுக்கிய சமஸ்கிறுதத்தைப் படிக்க கூடத் தெரியாது இந்த இந்து மத ஆராய்ச்சியாளர்களுக்கு என்பது உமக்குத் தெரியுமா?

உங்களுக்காக மார்க்ஸ்வாத அடிப்படைகளைப் பற்றி நான் படிக்கும் தளம்

எங்கே நீங்கள் இந்து மதத்தைப் பற்றி படிக்கும் புத்தகத்தின் ஆசிரியர்களைப் பட்டியலிடுங்கள் பார்ப்போம்...!

//
சுயநலமின்றி போராடியிருக்கிறார்கள், இந்துத்துவவாதிகள் அல்ல.
//

நான் எங்காவது இந்துத்வாவாதிகளுக்குக் கொடி பிடித்திருக்கிறேனா...உங்களுக்கு இந்துத்வா மேல் வெறுப்பு இருந்தால் அதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்...நான் இந்துத்வாவாதி என்று ஏன் "சீல்" வைக்கிறீர்கள்...?

இது போல் முட்டாள்தனமான விவாதங்கள் செய்யவேண்டாம் என்கிற நல்லெண்ணத்தில் உங்கள் பின்னூட்டத்தை வெளியிடாமல் இருந்தேன்,

அனேகமாக கமாண்டர் நெல்சனை திரும்ப அழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...!! :)


எல்லாம் இருக்கட்டும்...

நீங்கள் மார்க்ஸ்வாதி தானே....ஆம் என்றால்..

//
பி. கு., மார்க்ஸ்வாதிகளுக்கு ஓப்பன் கேள்வி...
பாகிஸ்தானிலோ, அல்லது ஈரானிலோ ஏன், மார்க்ஸ்வாதிகள் பேச்சு எடுபடுவதில்லை என்பதை யாராவது யோசித்ததுண்டா?
//

இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்...?

வஜ்ரா said...

//
எந்த ஆபிரகாமிய மதமும்(மார்க்சியம் உட்பட) மற்றெந்த ஆபிரகாமிய மதத்தையும் சகித்துக் கொள்வதில்லை.
//

எந்த ஆபிரகாமிய மதமும் மற்றென்த மதத்தையும் சகித்துக் கொள்வதில்லை...அது ஆபிரகாமிய மதங்களில் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி.

Unknown said...

/////104கிலோ இருப்பவன் ஏழையாய் இருக்க மாட்டானோ? //

aaha,enna oru arivu poorvamaana keelvi:-)

we should erect a statue for the person who asked this question in the city center. ///
ஐயா அனானி! சங்கரா!
104கிலோவுக்கு மேலேயே இருந்து கொண்டு புணூலும் அணிந்து கொண்டு ஏழையாயிருப்பவரைக் காட்டினால் முகத்தை பின்னால் திருப்பிக் கொள்வீர்களோ! போட்டோ வேண்டுமோ தோழரே?!

Muse (# 01429798200730556938) said...

நேச குமார்,

>>> நீங்கள் அறியாமல் குறிப்பிட்டிருக்கும் வாதத்தைத்தான் மற்றவர்கள் முன்வைத்து, <<<<

"ஒரு தீவிரவாதக் குழு மற்றவற்றின் மேல்" என்கிற த்வனி தவறுதலாய் ஏற்பட்டுவிட்டது. நான் கூற வந்தது இஸ்லாமில் இருக்கும் ஒவ்வொரு பிரிவும் மற்ற பிரிவுகளின் மேல் கட்டவிழ்த்து விடும் வன்முறையைத்தான். (இதில் சூஃபியிஸத்தைத் தவிர்த்துவிடலாம் என்று தோன்றுகிறது).

எது எப்படியோ, உங்கள் விளக்கம் புதிய தகவல்களைத் தந்தது. நன்றிகள்.

எனது உறுதிப் படுத்தப்பட்ட புரிதல் குழுக்களைவிட தனிமனிதர்களின் வல்லமையையே எந்த நல்ல/கெட்ட விஷயங்களிலும் கைகாட்டுகிறது. ஆயினும் இஸ்லாமிய வரலாறு நன்மையை அளிக்கும் தலைவர்கள் பெரும்பாலும் ஊக்குவிக்கவில்லை. இதற்கும் இதை ஆரம்பித்து வைத்த, முதல் இரண்டாம் தலைவர்களே காரணம். எந்த கருத்துக்கள் வல்லவர்களால் ஆதரிக்கப்படுகிறதோ அக்கருத்துக்களே பலம் பெறுகின்றன.

Muse (# 01429798200730556938) said...

சுல்தான்,

விதிவிலக்குகள் விதிகள் ஆக மாட்டா.

இதைத் தெரிந்து கொண்டே, அறிந்தும் அறியாததுபோல இதுபோன்ற விஷயங்களின் மேல் கவனத்தைத் திருப்புவது பல சமயங்களில் பலன் தருகின்ற கவனச் சிதறடிப்பு உத்தி.

கேள்வி மதானி செல்வந்தரா, இல்லையா என்பதுதான்.

வன்முறை செய்பவர் யாராயிருந்தாலும் அதை கண்டிப்பது தாங்கள் பின்பற்றும் கொள்கைக்கு மரியாதை சேர்க்கும். அங்கனம் நீங்கள் செய்யாவிடில் தங்களுடைய கொள்கையின் வன்முறை ஆதரவு மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

கோயம்பத்தூரில் மட்டுமல்ல, குஜராத்தில் நடந்த வன்முறையும் வருந்தத்தக்க, கண்டிக்கத்தக்க நிகழ்வுகள்தான்.

யார் ஆரம்பித்துவைத்தார்கள் என்பது பற்றிக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, முடித்து வைக்க எந்தெந்த குழுவில், என்ன வழிகள் இருக்கின்றன என்பது பற்றி ஆரயவும், அதை நம்மளவில் நடைமுறைப்படுத்தவும் செய்வோமே.

உதாரணமாக, பிற்போக்கு கருத்தியல்வாதங்களுக்கு எதிராக தீண்டாமையை ஆர். எஸ். எஸ் எதிர்க்கிறது. இந்திய தேசியத்திற்கு உதபுபவர்களை அவர் எம்மதத்தை சார்ந்தவரெனினும் அது கொண்டாடுகிறது. உதாரணமாக நமது ஜனாதிபதி ஜனாப். அப்துல் கலாமை அது மரியாதையுடன் நடத்துகிறது (நாக்பூர் ஆர். எஸ். எஸ் அலுவலகத்தில் அவரது திருவுருவப் படம் திறக்கப்பட்டதாக எங்கோ படித்திருக்கிறேன்). இவ்வளவு ஏன், தங்கள் போன்றவர்களாலும், திம்மித்துவவாதிகளாலும் பாஸிஸக் கட்ஷியாக வர்ணிக்கப்படும் பா ஜா காவின் மிகப் பெரிய பதவியான பொதுச் செயலாளர் பதவியில் ஒரு இஸ்லாமியர் உள்ளார். அது போன்ற ஒன்று முஸ்லீம் லீக்கில் நடக்குமா? குறைந்த பக்ஷம் முஸ்லீம் லீக்கில் ஒரு அடிப்படை தொண்டராகவாவது ஒரு ஹிந்துவை அனுமதிப்பர்களா?

இஸ்லாமில் முற்போக்காய் சிந்திப்பவர்களே இல்லை என்பதும் தவறு. என் இஸ்லாமிய நண்பர்கள் பலர் முற்போக்காய் யோசிப்பவர்கள்தான். ஆனால் அவர்களால் பகிரங்கமாக இந்த கருத்துக்களை இஸ்லாமிய சமூகத்திற்குள் வைக்க முடியாது.

அதே சமயத்தில் இந்த மாறுதல்களை, இஸ்லாமில் முற்போக்கான விஷயங்களுக்கான முயற்சிகள் நடக்கவே இல்லை என்று சொல்லுவதும் உண்மைக்குப் புறம்பானதே. பெண்களுக்கான ஜமாத் போன்றவை போராட்ட நிலையில் இருக்கின்றன. அவை வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. அப்படியே வெற்றிபெற்றாலும் ஆயுஸு கம்மி. சவலைப் பிள்ளை போராட்டங்கள். வருத்தம்தான் எனக்கு.

வஜ்ரா said...

நன்றி நேசகுமார் அவர்களே...

சூஃபிக்கள் இன்ன பிற மத "பாபா"க்கள்...! போல் அன்று லோக்கல் ஃப்ளேவரில் இஸ்லாத்தைக் கொண்டு சென்றவர்கள்..செல்பவர்கள், இந்தோனேஷியாவில் முகம்மது தான் கல்கி பகவான் என்று சொல்லி இஸ்லாத்திற்கு மாற்றியவர்கள் சூஃபிக்கள் தானே..!!

அசுரன் said...

//
பி. கு., மார்க்ஸ்வாதிகளுக்கு ஓப்பன் கேள்வி...
பாகிஸ்தானிலோ, அல்லது ஈரானிலோ ஏன், மார்க்ஸ்வாதிகள் பேச்சு எடுபடுவதில்லை என்பதை யாராவது யோசித்ததுண்டா?
//

மார்க்சியம் பற்றிய தங்களது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்பதற்க்கு, நீங்களே அந்த கேள்விக்கான பதிலையும்(பிந்தைய பின்னுட்டம் ஒன்றில்) கொடுத்துள்ளீர்களே அதிலேயெ தெளிவாக உள்ளது. இது தங்களது மார்க்சியம் பற்றிய அதிமேதவித்தனத்தின் போலித்தனத்தையும் காட்டுகிறது(ஏதாவது குட்டையை குழப்பி விளம்பரம் தேடி அதன் ஊடாக hate propaganda).

தங்களுக்கு உண்மையே பேச வாராதா? மார்க்சியம் பற்றி மூல நூல்களை marxist.org -ல் இவர் படிக்கிறாராம். சமீபத்தில் இன்ன விசயமாக இன்ன புத்தகத்தை தாங்கள் refer செய்தீர்கள் என்று தங்களது நேர்மைக்கு விட்ட சாவாலாக எண்ணி இங்கு பகிர்ந்து கொள்ளவும். (ஒரு சின்ன கொசுறு செய்தி, தங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் போடுகிறேன்: தனிச் சொத்துடமையை பாதுகாக்கும் எதுவும் மார்க்சியத்தின் எதிரிதான். அரசுக்கு அடுத்து அதில் முதன்மையாக இருப்பது மதம்).

google-ல் தேடி வலைகளை எடுப்பது ஒன்றும் பெரிய வித்தை இல்லை(விக்கிபீடியாவகவும் இருக்கலாம்). தங்களது மார்கஸிய அறிவுக்கு ஒரு சின்ன உதாரணம் 'லீ ஹாரிஸ்' -ன் புத்தகத்தில் மார்க்சியம் பற்றி சொன்னதாக சில வரிகளை கொடுத்துள்ளீர்களே? அதுதான் தங்களது மார்கசிய அறிவை மிக எடுப்பாக காட்டுகிறது.

ஆனால் இந்து மதத்தின் ஆன்மா சாதி தான் என்பதும் தாங்கள் எவ்வளவு சப்பைக் கட்டு கட்டினாலும் வரலாற்று ரீதியாக இந்து மதம் அந்த ஆன்மாவுடன் தான் அறியப்படுகிறது(இதை பல இந்து மத பெரியவர்களும் கூறியுள்ளனர்- செத்துப்போன சங்கராச்சாரி, பாரதியார் வரை) என்ற அளவில் இந்து மத நூல்களையும், இந்திய வரலாற்றையும் verify செய்து விட்டு தான் வாதாடுகிறேன்(சமீபத்தில் எதுவும் மூல நுல்களை நான் புரட்டவில்லை ஆனால் பகவத் கீதை பற்றிய ஒரு ஆய்வு நூலை புரட்டினேன் - ஒரு முற்போக்காளர் எழுதியதுதான்)(இதேயொத்த கேள்விகளுக்கு பதிலாகத்தான் திண்ணையில் வந்த குடவோலைமுறை பற்றிய கல்வெட்டு ஆதரம் பற்றிய ஒரு கட்டுரையை பரிந்துரைக்கிறேன்.).


அவ்வப்பொழுது(வெகு அரிதாக) நான் உலாவும் ஹிந்து வலைத்தளம் http://www.hindunet.org/gita/(இது google -ல் தேடி எடுத்தது அல்ல. பகவத்கீதையில் நால் வருணம் பற்றி வரும் பகுதிகளைப் பற்றி பல்வேறு உரைகளை தேடிய பொழுது, ஒரு அன்பர் கொடுத்தது. எனக்கு சம்ஸ்கிருதம் தெரியாது. ஆனால் மார்க்சிய மூல நூல்களெல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது அல்ல. மூல நூல்களை படிக்க நீங்கள் ஜெர்மன் கற்றுக் கொள்ளுங்கள்).


//இங்கே இஸ்லாமியத் தீவிரவாதத்தை மார்க்ஸ்வாதிகள் பெரிது படுத்திப் பேசுவதில்லையே ஏன் என்கிற கேள்வி வைக்கப் பட்டுள்ளது...அதற்கும் நீங்கள் பதிந்த பின்னூட்டத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?//

ஒரு யூகம் அல்லது தங்களது சொந்த கருத்தின் அடிப்படையில் அல்லது ஒரு தந்திரத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து அதன் பேரில் ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள். அதன் அடிப்படையில் ஒரு கேள்வியும் கேட்டுள்ளீர்கள்.

கம்யூனிசத்துக்கும் இஸ்லாமுக்கும் இருப்பதாக் தாங்கள் கூறும் விசயம் அடிப்படையடையற்றது என்பது இருக்க,
முஸ்லீம் திவிரவாதத்தை அதை கண்டிக்க வேண்டிய அளவில் கண்டித்திருக்கிறோம். அப்படி கட்டாயம் ஆதாரம் வேண்டுமென்றால் நேசகுமாருக்கு கொடுத்த பதிலில் தேடவும்(http://www.blogger.com/comment.g?blogID=28837873&postID=115002862554097175).

முதன்மையான பயங்கரவாதமான அமெரிக்க ஏகாதிபத்திய பயங்கரவாதத்தையும், அதன் உள்ளூர் கூட்டாளியான நிலப்பிரபுத்துவ பயங்கரவாதியின் தத்துவ மூலாமான பார்ப்பன பயங்கரவாதமும் தான் கடுமையாக கண்டித்து அடிக்கப்பட வேண்டியது(from 1998 to 2006 one lakh farmers suicide death due to Imperialist terrorism and it's ally parpana terrorism, may be you would find it difficult to corelate this two terrorism). இதன் அடிப்படையில் தான், இதை விளக்கித்தான், (அதாவது ஏன் இந்து பயந்கரவாதம் முதன்மையாக கண்டிக்கப்படவேண்டிய நச்சு) எனது சம்பந்தா சம்பந்தாமில்லாதது என்று சொன்ன பதிவு உள்ளது. அதை தவிர்த்து extra வாக நான் அந்த பதிவில் சேர்த்திருந்தது(குற்றச்சாட்டுக்கள்) இந்து மதம் பெரும்பான்மை என்ற மாயையின் அடிப்படையிலேயெ தங்களது பதிவுகள் உள்ளதால் அதை உடைக்க வேண்டிய தேவை கருதி உள்ள பகுதிகள்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு prefrence level இருக்கும். அந்த prefrence-ன் நோக்கம் என்ன என்பதுதான் அவர்களை அடையாளம் காண உதவும் விசயம். கம்யூனிஸ்டுகளின் level of prefrence, between இஸ்லாம் மற்றும் இந்து பயங்கரவாதத்தில் அவர்களது சமூக மாற்றத் தேவை, மக்களின் துயரம் அடிப்படையாக உள்ளது.

இந்து பயங்கரவாதிகளின் prefrence between இஸ்லாம் மற்றும் இந்து பயங்கரவாதத்தில் அவர்களது ஆள் பிடிக்கும் வேட்கை தான் தெரிகிறது(அதாவது பிரியானிக்கு ஆடு பிடிக்கும்..). அதனால்தான் இந்து பயங்கரவாதத்தின் கேடுகளை அனானி முன்வைத்தவுடன் நம்ம சங்கர் குண்டுசட்டி, குதிரை என்று வாய் விட்டு மக்கள் பிரச்சனையைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று கூறிவிட்டார்(இதையும் எனது சம்பந்தா சம்பந்தாமில்லாத பதிவு அம்பலப்படுத்துகிறது).

இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் சம்பந்தப்படுத்தி எழுதியுள்ள ஒரு பதிவைத்தான் அவர் சம்பந்தா சம்பந்த மில்லாதது என்று கூறுகிறார்.

ஒரு வேளை சமஸ்கிருதம் மட்டுமே நம்ம சங்கருக்கு நன்றாக புரியுமோ?

அடுத்தமுறை பதிவு போடும் போது கூடவே ஒரு விளக்கவுரை பின்ணைப்பாக கொடுக்க வேண்டும்.


போனபர்ட்டின் மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஹைக்கூவை நம்ம ஜனநாயக சிற்பி சங்கர் ஒரு கண்டனம் கூட எழுப்பாமல் போடுவாராம். ஆனால் நல்லெண்ணத்தின் அடிப்படையில் எனது பதிவை போட மாட்டாராம்.
எனக்கு என்னமோ உள்ளுக்குள்ளே ரொம்ப நடுங்கி போய் இருக்கிறேர்களோ என்ற உணர்வு ஏற்ப்படுகிறது.

கூப்பிடுங்களேன் உங்கள் கூலிப்படைத் தளபதி நெல்சனை(Body strongu...basement கொஞ்சம் வீக்கு..- வடிவேலு காமெடி in film 'தலைநகரம்').

+++++++++
சங்கர் கூறுகிறார்,
//நான் எங்காவது இந்துத்துவவாதிகளுக்குக் கொடி பிடித்திருக்கிறேனா...//
//நான் இந்துத்துவவாதி என்று ஏன் சீல் வைக்கிறேர்கள்?//

இதைப் பற்றி மீண்டும் விரைவில் வந்து அம்பலப்படுத்துகிறேன். இதற்க்கு எனது நியாபக சிறகுகளை தட்டி சங்கர் பல்வேறு தளங்களில் பதிய வைத்துள்ள கருத்து முத்துக்களை கோர்க்க வேண்டியுள்ளது.

and every body knows how dubious, vicious these above claims of sankar.

வஜ்ரா said...

வாங்க போன பார்ட்டு...!

உங்கள் மாப்ளா கலகமும் மலர்மன்னனும் பதிவிற்கான பின்னூட்டத்தில் ஆரோக்கியம் இட்ட பின்னூட்டம் தான் என் பதில்.
//
இஸ்லாமிய பாசிசம் என்று பேசும்போதெல்லாம் இந்துத்துவ பாசிசம் என்று திசை திருப்பும் வேலை செய்யும் நீங்களும் உங்களது கூட்டாளிகளும்
//

அவ்வளாவு பெரிய பின்னூட்டத்தில் பதிவுக்குச் சம்பந்தமாக ஒரே ஒரு கேள்விதான் என் கண்ணில் அகப்பட்டது...
//
ஒரு யூகம் அல்லது தங்களது சொந்த கருத்தின் அடிப்படையில் அல்லது ஒரு தந்திரத்தின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்து அதன் பேரில் ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளீர்கள். அதன் அடிப்படையில் ஒரு கேள்வியும் கேட்டுள்ளீர்கள்.
//
(ஹி ஹி ஹி..மார்க்ஸ்வாதத்தைத் தவிர மற்ற புத்தகத்தையும் படித்தால் தானே உலக நடத்தை தெரியும்!! :) )

உலகில் பலர் பேச ஆரம்பித்துவிட்ட இந்த கருத்தைத் தான் இங்கே நான் சொல்லியுள்ளேன்...
உங்கள் பார்வைக்காக சில பக்கங்கள்.

அமீர் தஹீரி என்கிற ஈரானிய பத்திரிக்கையாளர் ஜெரூசலம் போஸ்டில் ஜுன் 10 தேதியில் எழுதி வெளியிட்ட கட்டுரை

பிறகு அமேரிக்க neo-con டேவிட் ஹோரோவிட்ஸ் எழுதிய புத்தகம் Unholy Alliance: Radical Islam and the American Left இதை நீங்கள் படிக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பல்லாயிரங்கோடி பேர் படித்துத் தெளிந்துவருகின்றனர்.

சாம்ஸ்கி

//
கம்யூனிஸ்டுகளின் level of prefrence, between இஸ்லாம் மற்றும் இந்து பயங்கரவாதத்தில் அவர்களது சமூக மாற்றத் தேவை, மக்களின் துயரம் அடிப்படையாக உள்ளது.
//

ஆக கம்யூனிஸ்டுகள் சப்போர்ட்டு இஸ்லாம்யத் தீவிரவாதத்திற்கு உள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்...ஆனால் கம்யூனிஸ்டுகளின் எண்ணம் சமூக மாறுதலுக்காக!! அப்படித்தானே...வாயக் கொடுத்து மாட்டிக்கிறதுன்னா இது தானே...!! தேவையில்லாம வள வள ன்னு எழுதாம இருந்தா தப்பிச்சிருக்கலாம்!!

Anonymous said...

//இந்தோனேஷியாவில் முகம்மது தான் கல்கி பகவான் என்று சொல்லி இஸ்லாத்திற்கு மாற்றியவர்கள் சூஃபிக்கள் தானே..!!
//

புத்தர் கூட விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்று வட இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளதே, ஒருவேளை நிஜமா இருக்குமோ சங்கர்? இல்லை, அதை யாரும் பரப்பவில்லை, அந்த நம்பிக்கைக்குக் கை காலெல்லாம் முளைத்து அங்கே உள்ளவர்கள் வீட்டுக்குள்ளெல்லாம் தானாய்ப் போய் உட்கார்ந்துகொண்டது என்று சொல்லப்போகிறீர்களா? யோக்கியர் வர்றாரு சொம்பை எடுத்து உள்ள வை பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

வஜ்ரா said...

அனானி,

பௌத்தம் தளைத்தது இந்தியாவில் தான். இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னர் காணாமல் போன மதங்களில் பௌத்தமும் ஒன்று...இந்துக்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகப் பார்த்தால் உங்களுக்க என்ன..?

புத்தர் மதத்தின் பெயரால் கொலை செய்தால் 72 கன்னிகள் கிடைப்பார்கள் சொர்கத்தில் என்று "ஆசை" காட்டினாரா?

உங்கள் கருத்தின் மேல் உக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதால் தான் பெயர்கூட போடாமல் அனானி யாக பின்னூட்டம் போட்டு ஓடிப் போவது...!

Anonymous said...

//இந்துக்கள் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகப் பார்த்தால் உங்களுக்க என்ன..?//

சப்பைக்கட்டு கட்டுவதென்று ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல. நடத்துங்கள். உங்கள் வாதப்படி, கல்கி அவதாரத்தை முகம்மதாகப் பார்த்தால் உங்களுக்கு என்ன?

//உங்கள் கருத்தின் மேல் உக்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதால் தான் பெயர்கூட போடாமல் அனானி யாக பின்னூட்டம் போட்டு ஓடிப் போவது...!//

சும்மா இதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்காமல், அனானியாகச் சொல்லும் நியாயமான கருத்துக்களைக்கூடச் சகிக்க முடியவில்லை என்றால் அனானிமஸ் பின்னூட்டமிடும் வசதியை உங்கள் பதிவிலிருந்து தூக்கவும். தவத்தில் அமர்ந்திருக்கும் ததீசி எழுந்தால் அவரது தலை வெடிக்கும், அவரை எழவைப்பதற்கு அவரது மகனின் தலையைச் சீவி அவரது மடியில் போட்டார்கள், அதைக்கண்டு அதிர்ந்து எழுந்த ததீசி தலை வெடித்து இறந்தபின் அவரது எலும்புகளைக்கொண்டு செய்யப்பட்டதுதான் வஜ்ராயுதம் என்ற புராணக் கதையைப் படித்திருக்கிறேன் - இப்படியொரு பெயரைக்கொண்ட வஜ்ரா சங்கர் என்று உங்கள் பெயர் தெரிந்ததால் உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதென்று எனக்குத் தெரிந்துவிடுமா?

வஜ்ரா said...

//
சப்பைக்கட்டு கட்டுவதென்று ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல. நடத்துங்கள். உங்கள் வாதப்படி, கல்கி அவதாரத்தை முகம்மதாகப் பார்த்தால் உங்களுக்கு என்ன?
//

ஐயா அனானி, சூஃபிக்கள் நல்லவர்கள், அமைதியானவர்கள் என்றெல்லாம் சொன்ன போது, பொய் சொல்லி மதமாற்றம் செய்தவர்கள் என்கிற உண்மையைச் சொன்னேன்...அதற்கு பதில் சொல்லவேண்டும் என்றால் சொல்லுங்கள்...

நான் சொன்ன விஷயத்திற்கும் நீங்கள் சொன்ன விஷயத்திற்கும் உள்ள ஒற்றுமை இது தான்...

எனது வாதமான

இந்தோனேஷியாவில் முகம்மது தான் கல்கி பகவான் என்று சொல்லி இஸ்லாத்திற்கு மாற்றியவர்கள் சூஃபிக்கள் தானே..

என்பதை புத்த மதத்திற்கு apply செய்தால்..

புத்தரை விஷ்னுவின் அவதாரம் என்று சொல்லி வைஷ்ணவர்களை புத்தமதத்திற்கு யாராவது மாற்றினார்களா?

//
புத்தர் கூட விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று என்று வட இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளதே, ஒருவேளை நிஜமா இருக்குமோ சங்கர்?
//

ஆனால், நீங்கள் தர்க ரிதியாக அந்த வதந்தி இருக்கிறதே வட இந்தியாவில், அதனால் இந்த வதந்தியும் ஞாயம் என்று வாதிடுகிறீர்கள்...உங்கள் வாதமே முதலில் தவறு...

சூஃபிக்களுக்குத் தேவை மதமாற்றம் அதை அறிவுப் பூர்வமாகச் செய்தார்கள் என்பது உண்மை, அதுவே வட இந்தியாவில் இந்துக்கள் புத்தமதத்தவர்களுகுச் செய்தார்கள் என்று சொல்லிவிட்டால் இது ஞாயமாகிவிடுமா?

(இந்துக்கள் அப்படி செய்தார்களா என்பது எனக்குத்தெரியாது..ஆனால் உண்மையான புத்த மதத்தவர் யாரும் இப்படி ஒரு Accusation வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.)

Two wrongs do not make a right!!

வஜ்ரா said...

//
அனானியாகச் சொல்லும் நியாயமான கருத்துக்களைக்கூடச் சகிக்க முடியவில்லை என்றால் அனானிமஸ் பின்னூட்டமிடும் வசதியை உங்கள் பதிவிலிருந்து தூக்கவும்.
//

இங்கேயே பார்க்கலாம், அபு ஃபாதிமா, மற்றும் அதற்கு மேலுள்ள அனானிமஸ் பின்னூட்டங்களை..இது போல் செய்வதனால் தான் அந்தப் பல்லவி பாடவேண்டியிருந்தது...!!:)) சரணத்தைப் பாடி நீங்களே முடித்துவையுங்கள்..!!


//
தவத்தில் அமர்ந்திருக்கும் ததீசி ...
//


அந்தக் கதை எனக்கும் தெரியும்...புத்த மதத்தைப் பற்றி பேசினீர்களே, புத்தர் வலது கையில் இருப்பதுகூட அதே வஜ்ராயுதம் தான் என்பதை எழுத மறந்துவிட்டீர்களா?

Anonymous said...

//புத்தரை விஷ்னுவின் அவதாரம் என்று சொல்லி வைஷ்ணவர்களை புத்தமதத்திற்கு யாராவது மாற்றினார்களா?//

சரியாகத்தான் கேட்டுள்ளீர்களா? ஆம் எனில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி. உங்கள் வாதங்கள் பிரமிக்க வைக்கின்றன.

//சூஃபிக்களுக்குத் தேவை மதமாற்றம் அதை அறிவுப் பூர்வமாகச் செய்தார்கள் என்பது உண்மை//
//இந்துக்கள் அப்படி செய்தார்களா என்பது எனக்குத்தெரியாது..//

புத்தரை விஷ்ணு அவதாரமாகச் சித்தரிக்கும் குழந்தைகளுக்கான அமர் சித்திர கதா புத்தகங்களைப் படித்ததுண்டா/பார்த்ததுண்டா?

//Two wrongs do not make a right!!//

Of course.

வஜ்ரா said...

//
சரியாகத்தான் கேட்டுள்ளீர்களா? ஆம் எனில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி. உங்கள் வாதங்கள் பிரமிக்க வைக்கின்றன.
//

நீங்கள் எடுத்துக் கொண்ட எடுத்துக்காட்டை பௌத்தத்திற்கும் வைஷ்ணவத்திற்கும் apply செய்தால் இப்ப்படித்தான் இருக்கும் என்பதர்காகத்தான் அப்படிக் கேட்டேன்..அதில் கிருஷ்ணகிரி கிழியும் அளவிற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே...இருந்தால் எடுத்துரைக்கவும்..

//
புத்தரை விஷ்ணு அவதாரமாகச் சித்தரிக்கும் குழந்தைகளுக்கான அமர் சித்திர கதா புத்தகங்களைப் படித்ததுண்டா/பார்த்ததுண்டா?
//

நான் இன்னும் பார்க்கவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்..

சரி..இருக்கட்டும்..அதனால் என்ன பிரச்சனை...புத்த மதத்தவரே அதை எதிர்ப்பதில்லையே...!!

//
/Two wrongs do not make a right!!//

Of course.
//

atleast we agree that sufi's have made a blunder...then why are we arguing?

Anonymous said...

புத்தரை விஷ்ணுவாக பார்க்கும் வழக்கம் அவர் முன்பு இந்துவாக அதுவும் அரசனாகவே பிறந்தவர் என்பதால்.அக்காலத்தில் அரசர்களை மகாவிஷ்ணுவின் அவதாரமாகவே கருதினர்.அரச குலத்தில் பிறந்து ஞானி ஆனதும் மகாவிஷ்ணுவாகவே கருதினர்.குருதேவோ மகேஸ்வரஹ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்துக்கள் புத்தரை கடவுளாக கருதினர்.

புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சொல்லி பவுத்தர்களை யாரும் மதமாற்றம் செய்யவில்லை.முஸ்லிமான வாபர் என்பவரை கூட கடவுள் அவதாரம் என சொல்லி சபரிமலையில் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாகூர் ஆண்டவர்,ஏசு,கன்னிமேரி,ஷிரடி சாய்பாபா என அனைத்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும் மதபேதமில்லாமல் கும்பிடுபவர்கள் இந்துக்கள் தான்.

அனைத்து மார்க்கங்களும் ஒரே இறைவனை அடையும் வழியே என நம்பும் இந்துமத கொள்கையே இதற்கு காரணம்.

புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனும் இந்துக்கள் புத்தர் கோயிலுக்கு கண்டிப்பாக போவார்கள்.கல்கி தான் முகமது என சொல்லுபவர்கள் கல்கி கோயிலுக்கு போக தயாரா?

வஜ்ரா said...

அனானி க்களே,

யார் என்ன சொன்னார்கள் என்றே தெரியவில்லை...குறைந்தது ஒரு பெயராவது போட்டால் சரி, திடீர் வாதம் செய்யவந்த அனானி இவர் தான், பதில் சொல்ல வந்த அனானி இவர் என்பது புரியும்..

//
புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனும் இந்துக்கள் புத்தர் கோயிலுக்கு கண்டிப்பாக போவார்கள்.கல்கி தான் முகமது என சொல்லுபவர்கள் கல்கி கோயிலுக்கு போக தயாரா?
//

நல்ல கேள்வி..

Anonymous said...

இந்தியாவில் தோன்றிய மதங்கள் அனைத்து மத கடவுள்களையும் வழிபட்டனர்.இந்துக்கள் புத்தரை வழிபட்டதுபோல் பவுத்தர்கள் வினாயகரை வழிபட்டனர்.வினாயகர் மதம் மாறி பவுத்தத்தில் சேர்ந்ததாகவே பவுத்தர்கள் கருதுகின்றனர்.

வினாயகரை இன்றும் சீனாவிலும் ஜப்பானிலும் உள்ள பவுத்தர்கள் காங்கிடென் எனும் பெயரில் வணங்குகிறார்கள்.

இந்திய மதங்களுக்கு மத வெறி இல்லை.அனைத்து மத கடவுள்களையும் தம் மதத்தை சேர்ந்தவராகவே கருதி ஏற்றுக்கொண்டனர்.அப்படி கருத காரணம் மதமாற்ற எண்ணம் இல்லை.சர்வதர்மமும் சமம் என நினைக்கும் உயர்ந்த மனோபாவம் தான் காரணம்.வினாயகரை புத்த அவதாரமாக கருதும் பவுத்தர்களும்,புத்தரை விஷ்ணு அவதாரமாக கருதும் இந்துக்களும் எவ்வளவு பரந்த மனப்பான்மை உடையவராக இருந்திருப்பர் என எண்ணிப் பாருங்கள்.


ஆதாரம் இங்கு உள்ளது
http://www.samachar.com/religion/ganesh.html
Scholars commonly date the presence of Ganesha in Japan with the age of Kukai (774- 834), the founder of the Shingon sect of Japanese Buddhism. The centrality of the worship of Ganesha or Vinayaka or Kangiten, as he is popularly called in Japan, is a distinguishing feature of this cult. The doctrines, rituals and beliefs of the sect have a number of parallels with the cult of Ganpatyas, to which belonged saints like Gajanan Maharaj of Shegao, Maharashtra.

China, the land through which the Elephant-headed divinity entered Japan has Ganesha Sculptures dating back to the fourth century, which surprisingly predates any depiction of Ganesh in India. Both the lands recognize Ganesha as having converted to Buddhism.

Ganesha’s most popular form in Japan is the dual-Vinayaka or the Embracing Kangi. Two tall figures, elephant headed but human bodied, male and female, stand in embrace. The female wears a jeweled crown, a patched monks robe and a red surplice.

அசுரன் said...

'level of prefrence' பற்றிய தங்களது பதிலின் மூலம் தங்களுக்கு ஆங்கிலமும் தகிடுதத்தம் என்று தெரியப்படுத்தியதற்க்கு நன்றி.

நான் கூறியது கீழே உள்ளது.
//கம்யூனிஸ்டுகளின் level of prefrence, between இஸ்லாம் மற்றும் இந்து பயங்கரவாதத்தில் அவர்களது சமூக மாற்றத் தேவை, மக்களின் துயரம் அடிப்படையாக உள்ளது.
//
இரண்டு பய்ங்கரவாதங்களில் prefrence-ன் level-யைத் தான் சொல்லியுள்ளேனேயொழிய, I didn't say anything like entirely not preferring something, ஆனால் அதையே தங்களது திரிபுவாத பாணியில் //ஆக கம்யூனிஸ்டுகள் சப்போர்ட்டு இஸ்லாம்யத் தீவிரவாதத்திற்கு உள்ளது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்// என்று முடிவுக்கு வந்து மீண்டும் மீண்டும் தங்களது நேர்மையின்மையை அம்பலப்படுத்துகிறீர்கள்.

The below also I said in my previous reply
//முஸ்லீம் திவிரவாதத்தை அதை கண்டிக்க வேண்டிய அளவில் கண்டித்திருக்கிறோம். அப்படி கட்டாயம் ஆதாரம் வேண்டுமென்றால் நேசகுமாருக்கு கொடுத்த பதிலில் தேடவும்(http://www.blogger.com/comment.g?blogID=28837873&postID=115002862554097175).//



//
உங்கள் மாப்ளா கலகமும் மலர்மன்னனும் பதிவிற்கான பின்னூட்டத்தில் ஆரோக்கியம் இட்ட பின்னூட்டம் தான் என் பதில்.
//

இதற்க்கு நான் அளித்த fitting பதிலை படிக்கவில்லையோ நீங்கள். படித்தாலும் மலைமுழுங்கி கள்ளன் போல கமுக்கமா இருப்போமுள்ள நாங்க.....

Muse (# 01429798200730556938) said...

ஷங்கர்,

பதிலளிக்க ஆரம்பித்தேன். அது சற்று பெரியதாகவிருந்ததால் என்னுடைய ப்ளாக்கிலேயே ஒரு தனிப் பதிவாகப் போட்டுவிட்டென். பார்க்க http://bliss192.blogspot.com/2006/06/blog-post_16.html.

நன்றிகள்.

Muse (# 01429798200730556938) said...

நேசகுமார்,

என்னிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது உங்களது கருத்துக்கள். என்னதான் இதயம் ஏற்றுக்கொள்ள தயங்கினாலும், தாங்கள் கூறுவது உண்மை என்றே தோன்றுகிறது. லேசாக வேதனிக்கிறேன்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்.

இரா.சுகுமாரன் said...

//இடது சாரிகள் புஷ், மற்றும் "சாம் மாமா" வைத் திட்டித் தீர்க்காத நாளே இல்லை//

உண்மைதான் சங்கர். நீங்கள் எப்போதும் மார்க்சியம் பேசுரவங்கள திட்ரீங்க இல்லையா? அது போல அவங்களும் அப்படி செய்ராங்க. அப்படி அவங்க திட்டுரது கண்டிக்கனும் தான்.

உங்க எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆனா நீங்க ஒரே மாதிரி எழுதிரீங்க.அதனால இனிமே,

நீங்க சாதிய ஒழிக்கனும், எல்லா பிராமனாளும் சேரியிலயும் பொண்ணு எடுக்கனும், அப்படின்னு சமூக அக்கரையான கட்டுரைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

நன்றி சங்கர்.

இரா.சுகுமாரன் said...

//Communism, Christianity, and Islam share with Nazism its worst characteristics -- racism, anti-Semitism, exclusivism, totalitarianism, and terrorism. Dr. Koenraad Elst//

அப்படின்னு உங்க பதிவுக்கு கீழே உள்ளது. அதுல சாதிய காணவில்லையே அது நல்ல குணாம்சமே!

மாமன்னன் said...

என்ன பிட்டிங் ரிப்ளை? தான் எழுதியதை தானே கொஞ்சம் படித்து பார்க்கவேண்டும். அம்பேத்கார் எழுதியதை கொஞ்சமேனும் கணக்கில் எடுத்திருக்கிறோமா என்று..


Ennamopo.Blogsome.Com
Those who forget the past are condemned to repeat it

வஜ்ரா said...

வாங்க சுகுமாரன்,

சில நாட்களாக உங்களை இந்தப்பக்கம் பார்க்கவில்லையே!! வருகைக்கு நன்றி.

//
ஒரே மாதிரி எழுதிரீங்க
//

மாத்திகிறேன்...சீக்கிரமே...

Muse (# 01429798200730556938) said...

சுகுமாரன் அவர்களே,

>>>எல்லா பிராமனாளும் சேரியிலயும் பொண்ணு எடுக்கனும், <<<

நீங்கள் சொன்ன விஷயங்களைத்தான் ஷங்கர் சொல்லிவருவதாக எனக்குத் தோன்றுகிறது. எந்த ஒரு குழுவும் அந்த குழுவில் பிறந்துவிட்டதாலேயே தங்களை மட்டும் உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ நினைக்கக் கூடாது என்பதுதான் அவர் சொல்லிவருகின்ற கருத்து என்று எனக்குப்படுகிறது. ஹிந்துத்துவவாதம்கூட அதுதானே.

பிராமணர்கள் மட்டுமல்ல. சேரியில் உள்ளவர்களும், இந்த இரு குழுக்கள் தவிர்த்த மற்ற குழுக்களும் கூட சேரியில் பெண் எடுப்பதையோ, பிள்ளை எடுப்பதையோ தாழ்வாகக் கருதக்கூடாது என்பதுதான் என் கருத்தும்.

சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடின்றி நீங்கள் சேரியிலிருந்தே பெண் எடுத்தவர் என நம்புகிறேன். தங்கள் குடும்பத்தினரும் சேரியிலிருந்தே பெண் எடுக்க வேண்டும் என்று தூண்டுபவரும்கூட என்று கேள்விப்பட்டேன். தங்களைப் போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை. வாழ்த்துக்கள்.