August 27, 2006

அந்த (கோழி) குஞ்சு என்னுடயது

அமேரிக்க பேச்சு ஆங்கிலத்தை தமிழில் அப்படியே மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மூலம் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்தது Funtoosh.com ல்.

..
Have a nice day! -- நல்ல நாளை எடுத்துக் கொள்

What's up? -- மேலே என்ன இருக்கு?

Yo, Baby, What's up? -- குழந்தை யோ, மேலே என்ன இருக்கு?

Cool man! -- குளிர் மானிடா!

Don't mess with me, dude. -- என்னுடன் அசிங்கம் பண்ணாதே, ஏய் தம்பி.

Check this out, man -- இதை சோதனை செய், மானிடா

Listen buddy, that chick's mine, okay!? -- கேளு நண்பா, அந்த (கோழி) குஞ்சு என்னுடயது, சரியா!?

Hey Good looking, What's cooking? -- ஏய் சுந்தரி, என்ன சமயல்?

Are you nuts? -- நீங்க கொட்டையா?

Son of gun -- துப்பாக்கி மகனே

General Body meeting -- பொதுவான உடல் சந்திப்பு

Keep in touch -- தொட்டுகிட்டே இருங்க

August 21, 2006

திண்ணையில் சில விளக்கங்கள்

சென்ற வாரம் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்களும், திரு. பீர்முகம்மது அவர்களும் இஸ்ரேல் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தனர்.

சின்னகருப்பன் அவர்களது மத்திய கிழக்கு போரும் இந்தியாவும்

பீர்முகம்மது அவர்களது புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

எனது விளக்கங்கள்

சின்னகருப்பன் அவர்களுக்கு

பீர்முகம்மது அவர்களுக்கு

August 20, 2006

A for Apple macintosh

ஏகப்பட்ட கணினி சார்ந்த பொருட்கள் மார்கெட்டில் வந்து கொண்டு தான் இருக்கின்றது...ஆனால் என்னைப் போன்ற ஆப்பிள் வெறியர்களுக்கு, ஆப்பிளின் புதிய சந்தை சமாச்சாரங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் தான்...

ஆப்பிளின் புதிய Camcoder ஐ பால் (iBall)



புதிய வருங்கால ஆப்பிள்



ஐ பாட் கைக் கடிகாரம்.



ஆப்பிளின் புதிய ஐ பாட் போன் iTalk.


ஆப்பிளின் 30 ஆண்டுகள் நிரைவையொட்டி வெளிவந்த Documentary
Apple 30th Anniversary Act I: the rise and fall
EpicEmpire.com


மேலும் விபரங்களுக்கு

1. Tech blog
2. The cult of mac
3. Cult of mac

August 15, 2006

போரின் ஞாயம்

இஸ்ரேல் - ஹெஸ்பல்லா போர் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் (ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தால்) என்னுடய சொந்த அனுபவம் சில,

மத்தியகிழக்கில் வாழ்ந்த சில காலத்தில் என் அரசியல் - சமூக நிலைப்பாடு பெரிதும் மாறுதல் அடைந்ததை நான் முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இருந்த வரை பாலஸ்தீனர்களுக்காகப் பரிதாபப் பட்டதும் உண்டு, இஸ்ரேலின் அராஜகங்கள் என்று படித்து கொதித்ததும் உண்டு. இன்று I Stand for Israel என்று என் வலைப்பதிவின் வலது புறத்தில் HTML கோடை சேர்த்துவிட்டு வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்ரேலில் கூடவே வேலை பார்க்கும் நண்பர்களுடன் பேசியதில் தெரியும்/அறியும் விஷயங்களில்,

இந்த லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஞாயமானதே என்று பலரும் கருதுகின்றனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால், ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பைக் கட்டுப்படுத்த லெபனான் அரசு முன் வரவில்லை. ஹெஸ்பல்லாக்கள் இஸ்ரேலிய படை வீரர்களைக் கடத்தி பணயக் கைதிகளாக்கித் ஏற்கனவே இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்கின்றனர். லெபனான் மக்கள் ஹெஸ்பல்லாக்களை ஆதரிக்கின்றனர். ஆகயால் தீவிரவாதிகள், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மேல் தாக்குதல் நடத்துவது தவறேதுமில்லை என்று கூறுகின்றனர்.

என்னைப் பொருத்த வரையில் பிரச்சனை எப்போது பெரிதாகிறது என்றால், கோபம் கட்டுக் கடங்காமல் போகும் போது...!!

இரண்டு வீரர்களை ஹெஸ்பல்லாக்கள் கடத்தினர், இஸ்ரேலியர்கள் பதிலாக பெய்ரூத்தை விமானம் கொண்டு தாக்கினர், கற்பிணிப் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். கோபம் கட்டுக் கடங்காமல் போனது...! ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விழத்தொடங்கின.

கேட்டால் பல இஸ்ரேலியர்கள் ...ஆம், இது தான் இங்கே சகஜம்...என்கிறார்கள்...!! ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், ஆளைக் கொல்வதும் தான் சகஜமா?!! ஆம், இது தான் மத்திய கிழக்கு என்கிறார்கள்.

அவர் அவர் ஞாயம் அவர் அவருக்கு...!

யாருக்கும் விட்டுக் கொடுத்துச் செல்ல மனமில்லை. இஸ்ரேலில் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்றால் அதைவிட தீவிர அடிப்படை வாதிகள் அரபு நாடுகளில் உள்ளனர். ஓப்பனாக, இஸ்ரேலின் அழிவில் தான் அமைதி உள்ளது என்று பிரகடனம் செய்பவர்கள்.

இஸ்ரேலியர்கள் ஏன், பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இரண்டு வீரர்களைக் கடத்தியவுடன் லெபனான் மீது போர் தொடுத்தது என்று எனகும் தோன்றியது. நண்பர் IDFல் இருப்பவர், அவரிடம் கேட்டேன்...

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் இஸ்ரேலை ஒரு பலமில்லாத நாடாகப் பார்ப்பர் இந்த அரபு தேசத்தவர். சரி. அவர்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு பணயக் கைதிகளை விடுவித்தால் நாளை மேலும் பல படை வீரர்கள், சிவிலியன்கள் கடத்தப் படுவர். இஸ்ரேலின் ஞாயம் ஒரு போராட்டம், வாழ்வதற்கான போராட்டம். அமைதிப் பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்று பார்க்கும் அரபு வீரத்திடம் எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும்? என்று விளக்கமளித்தார்.

ஞாயமாகப் பட்டது.

இதன் காரணமாகவே IDF செயல்களில் ஞாயம் உள்ளது என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது...ஹெஸ்பல்லாக்கள், போர் நிறுத்தத்தை வெற்றி என்று கொண்டாடுவதிலேயே தெரியவில்லையா? எது மத்திய கிழக்கில் வீரம் என்று கருதப்படுவது?

வீரம் என்றால் எதிரியன் நேருக்கு நேர் நின்று போராடுவது அல்ல. எதிரியின் Weak spot ஐ அடிப்பதும், எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதும் தான் வீரம் உலகின் இந்தப் பகுதியில். இங்கே பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் எல்லாம் இல்லை. அவன் அழியவேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது.

இஸ்ரேலியர்கள இவர்களுக்கு நடுவில் வாழ்கின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது, சொகுசாக கலிபோர்னியாவிலோ, அல்லது தில்லியிலோ, சிங்கப்பூரிலோ உட்கார்ந்து கொண்டு உலக ஞாயம் பேசும் நாம்.

இஸ்ரேலுக்கு வரும் முன்னர், எல்லோரின் விருப்பமும் அமைதியாக வாழ்வதும் அவர் அவர் வேலையைச் செய்துகொள்வது தான் என்று எண்ணியிருந்தேன், இந்த இரண்டாடுகளில் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சிறு பிள்ளைத்தனம் என்பதை என்னால் உணர முடிந்தது.

Not every body is content with peaceful co-existence. என்று என்னுடன் ஒரே அப்பர்ட்மெண்டில் வாழும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நாகடானி கிண்டலாகச் சொன்னது நினைவுக்கு வருகின்றது...!! :D

August 11, 2006

குண்டுவெடிப்புகள் - நினைவுச்சின்னங்கள்

இஸ்ரேலில் பாலஸ்தீனர் தற்கொலைப் படை தொடர்ந்து குண்டுவெடிப்பு நடத்திய காலம் உண்டு. அத்தகய தருணத்தில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவீவ்ல் நடந்த குடுவெடிப்பும் அதில் உயிரிழந்தவர்கள் பெயரையும் வைத்து ஒரு சிறு நினைவிடம் கட்டி அந்த குண்டுவெடிப்பை மனதில் நீங்காத இடமாக்கிவைத்துள்ளனர். இதன் முக்கிய காரணம், மக்கள் தீவிரவாதத்தை என்றும் நினைத்துக் கொண்டு தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதலின் அவசியம் வேண்டும் என்றே. Constant vigilence is the price for freedom. அத்தகய constant vigilence தொடர்ந்து அதை மனதில் பதித்தால் தான் வரும்.



வரலாற்றில் கெட்ட சம்பவங்களை மறத்தல் கூடாது.

Those who forget the past are condemned to repeat it. என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

மும்பையில் இரண்டு முறை 1993ல் மற்றும் 2006 ல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எத்தனை நினைவிடங்கள் உள்ளன?

எத்தனை பேர். 1993ல் குண்டுவெடிப்பு நடந்தது பற்றி இன்று நினைத்துப் பார்க்கின்றனர்?

August 10, 2006

ஆரியக் கேள்வி!

திராவிடத் தமிழர்கள் என்று வலைத்தளம் அமைத்து சில வலைப்பதிவாளர்கள், முன்பு நான் விவாதித்திருந்த ஆரியர் என்றொரு இனமுண்டா? மற்றும் ஆரியர்-திராவிடர் பூர்வீகக் குடிகள் ஆதாரங்கள் என்று என் கருத்துக்களை ஏதோ மிகப் பெரும் ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியாளன் கருத்துப் போல் மதிப்பளித்து பதில் எழுதுகின்றோம் என்று என்னை உயர்த்தி வைக்கின்றனர். அதற்கு என் நன்றி.

திராவிடத் தமிழர்கள் தொடராக எழுதிய 4-5 பதிவிற்கும் என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னர் என் சில கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான முறையில் ஆம். இல்லை என்று விடையளிக்கவேண்டும்.


ஆரியர் என்றொரு இனம் (Race) உண்டா?

வட நாட்டு ஆரியர்கள் தென்னாட்டு திராவிடர்கள் என்ற கருத்தை நம்புகின்றீர்களா?

சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் அவர்கள் வந்தேறிய ஆரியர்களால் புலம் பெயர்ந்து தற்பொழுதய தமிழகத்தில் வந்தேறிவிட்டனர் என்று நம்புகிறீர்களா?

குதிரை ஆரியர் வருகைக்கு முன்னர் இல்லை என்று திருவாளர் விட்சல் பரைசாற்றுவதை நம்புகின்றீர்களா?

மொழியியல் ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு இந்தோ ஆரிய மொழி என்றும், திராவிட மொழி என்றும் பிரித்தது எதனால், மொழியினாலா, அல்லது இனத்தினாலா?

திராவிடம் என்ற கருத்தாக்கத்தை "ஆரியம்" என்ற கருத்தாக்கத்தின் எதிர் வினை என்றே சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் (அதில் இன அடிப்படை ஏதும் இல்லை), பிராமண எதிர்ப்பு ஏன்? தமிழ் பேசும் பிராமணர்கள் திராவிடர்கள் இல்லையா?

August 7, 2006

ஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...

பார்க்க படம் (இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் தேவை)



இது கலாச்சாரங்களுக்கு இடையே ஆன போர் அல்ல...இது காட்டுமிராண்டித் தனத்திற்கும் மானுடத்திற்கும் இடையிலான போர் என்கிறார்.



நன்றி:

August 5, 2006

Turn left at the end of the World


Sof ha olam smola

2004ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் Israeli Film academy விறுது பெற்ற படம். இயக்குனர் அவி நெஷர் இஸ்ரேலில் பெரிய இயக்குனர்களில் ஒருவர். சமீபத்தில் அவரிடம் துணை இயக்குனராகப் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் பேசியதின் விளைவாக இந்த படத்தின் DVD வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன்.

ஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு இறக்குமதியாகும் பல யூதக் குட்ம்பங்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பில் ஒரு இந்தியக் குடும்பம் வருகிறாது. அந்த 1960 காலகட்டத்தில் (Post colonialism era) எத்தகய மனோபாவத்தில் மக்கள் இருந்தனர். குறிப்பாக இஸ்ரேலியப் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று கதை அமைந்திருக்கும். டெல் அவீவ், போன்ற பெரிய நகரவாழ்க்கை இல்லாமல் நெகவ் பாலைவனப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில், ஏர்கனவே வந்த மொராகன் மற்றும் புதிதாக வந்திறங்கிய இந்தியக் குட்ம்பமும் எவ்வாறு முட்டிக் கொள்கின்றனர்..முக்கியமாக மொராக்கன் குக்டும்பப் பெண் இந்தியர்கள கறுப்பாக இருப்பதை கிண்டல் செய்வதும், இந்தியக் குடும்பப் பெண் பிரஞ்சு மொழி பேசும் மொராக்கன் குடும்பத்துப் பெண்கள் எவ்வாறு வெட்கமில்லாமல் ஆடைஅணிகிறார்கள் என்று அங்கலாய்ப்பதும் ..படத்தில் இழையோடிய அந்தப் புராதன காலத்து Racist mentality தெளிவாகத் தெரியச் செய்திருக்கிறார் அவி நெஷர்.

வந்த இடத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கும் என்று நம்பி வந்த குடுமத்திற்கு மிஞ்சுவது ஏமாற்றமே...

சாரா ஒரு 17 வயதுப் பெண், அவள் தந்தை தாய் தம்பியுடன் வந்திறங்குகிறாள். நிகோல் ஒரு மொராக்கோ தேசத்திலிருந்து வந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளின் நட்பு சாரா விற்கு கிடைக்கிறது. சாரா எழுதும் தன் கதை புத்தகம் வாயிலாகச் சொல்லப்படுவது போல் அமைந்த இந்த கதையில் கொஞ்சம் காமெடி தனியாக இல்லாமல் கதையுடன் சேர்ந்தே வருவது சிறப்பு.


இந்தியக் குடும்பம் ஆன்கிலம் தான் சிறந்தது, ஆங்கில சோப்பு தான் சிறந்தது என்றும் மொராக்கன் குட்ம்பம் பிரஞ்ச் தான் சிறந்தது அந்த நாட்டு சோப்பு தான் சிறந்தது என்று துணி காயப்ப் போடும் இடத்தில் முறைத்துக் கொள்வதில் துவங்கி ஏகப்பட்ட சண்டைகள்.

இரண்டு குட்ம்பங்களும் வந்தது ஐரோப்பிய காலனியாதிக்க நாட்டிலிருந்து தான்.

எப்படி இந்த இரண்டு குடும்பங்களும் ஒண்றிணைகின்றன, எத்தகய நிகழ்வுகள் அவர்களை இணைய வைக்கிறது என்று சற்றே emotional ஆகும் பின்பாதி மற்றும் கொஞ்சம் சுவாரஸ்யம் என்று படம் ஜாலியாகப் போகும் ஒரு Drama.

படத்தில் இந்தியக் குடும்பங்கள் இருப்பதால் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் உண்டு. இந்தியக் குடும்பத்தின் தலைவர் அதாவது சாரா வின் தந்தையாக நம்மவூர் டீ. வி. மெகா சீரியல்களில் நடிக்கும்
பர்மீத் சேதி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் தன் அழுத்தமான நடிப்பினால். இன்ஸாப், சந்திரகாந்தா போன்ற தொ(ல்)லைகாட்சித் தொடர்களில் நடித்த கிருத்திகா தேசாய் கூட படத்தில் உண்டு.

படத்தின் மொழி: ஹீப்றூ (என்ற போதிலும் இந்தியக் குடும்பங்கள் பெறும்பாலும் ஆன்கிலமே பேசிக் கொள்வதும், மொராக்கன் தேசத்துக் குடும்பங்கள் பிரஞ்சு மொழி பேச்திக் கொள்வதுமாகவே இருக்கிறது....)

Amelie மற்றும் City of God

ஆமிலீ பிரஞ்சு மொழிப்படம், மென்மையான காதல் கதையில் மெல்லிய கமெடி இழையுடன் அறுமையான படம். தனிமையிலேயே சிறுவயதைக்கழிக்கும் சுட்டிப் பெண் தன் காதலனை எப்படி அடைகிறாள் என்பதுபற்றிய படம்.

சிடாடெ டெ டூஸ் அல்லது City of God பிரேசிலிலிருந்து 2002ல் வெளிவந்த போர்துகீசிய மொழிப் படம். உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகர சேரிகளில் வாழும் போதைப் பொருள் விற்கும் ரவுடிகள் பற்றிய கதையை அதே சேரியிலிருந்து வளர்ந்து வந்த ஒரு புகைப்படக்காரர் மூலமாகச் சொல்லப்பட்ட சீரியஸ் கதை.

சமீபத்தில் தான் இந்த இரண்டு படங்களையும் பார்த்தேன்...நிச்சயமாக இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமிலீ கதைச் சுறுக்கம்:
ஆமிலி என்ற இளம் பெண் சிறுவயதிலிருந்து ஒரு வித ஏக்கத்துடனேயே வாழ்கிறார்ள். யாரும் கவனிக்காத அல்லது சாதாரணமாக விட்டுவிடும் விஷயங்களில் அதீத அக்கரை கொண்டவள். ஒரு கபே யில் வெயிட்ரஸாக பணிபுரியும் இந்தப் பெண் ஒரு நாள் தன் வீட்டுச் சுவறில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு சிறுவனின் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த பெட்டியை கண்டுபிடிக்கிறாள். பிறகு அந்தப் பெட்டியின் சொந்தக்காரரை கண்டுபிடித்து அதை அவரிடம் வளங்கி அவரின் மகிழ்ச்சியால் தானும் சந்தோஷப்படுகிறாள். அப்போது அவளின் நினைவில் தட்டும் பொறி, ஏன் நாம் மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக் கூடாது என்பது...இதனால் தன் சுற்றியுள்ளவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று நூதன முறையில் யோசித்துச் செய்யும் ஆமிலீ பக்கது ரயில் நிலயத்தில் போட்டோ எடுக்கும் பூத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து கிழித்து போடப்பட்ட போட்டோக்களை சேகரிக்கும் தன் காதலனைச் சந்திக்கிறாள். அவனை எப்படி ஆமிலீ அடைகிறாள் எவ்வாறு தன் சுற்றாரை சந்தோஷப்படுத்துகிறாள் என்பதை மெல்லிய காமெடி கலந்த கதையாய் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் Jean-Pierre Jeunet.

படத்தில் வரும் ஒரு காமெடியான சம்பவம்.

சிறுவயதில் சேட்டை அதிகம் செய்கிறாள் என்று அமிலீயின் தாய் ஒரு பழய காமிராவை அவளிடம் கொடுத்துவிடுகிறாள். அதை வைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்று போட்டோ எடுக்கும் அமிலீ தன் கண்முன்னே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாவதைப் பார்த்து பயந்து விடுகிறாள். அந்த நேரத்தில் அவ்வளியாகச் செல்லும் பக்கத்து வீட்டுக்காரன் அமிலீயின் காமிராவால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று அமிலீயை பயமுறுத்தி நம்பபைத்து விடுகிறான். இதை சில நாட்கள் கழித்து உணர்ந்த அமிலீ, வஞ்சம் தீர்க்க ரேடியோவுடன் அந்த பக்கத்து வீட்டு அங்கிள் கூறையி அமர்ந்து Football மேட்சில் முக்கிய கட்டத்தை ஆண்டனா வயரை பிடுங்கி அந்த ஆசாமிக்கு எரிச்சல் வரவழைத்து பழி தீர்ப்பாள்.
இன்னொறு சம்பவம்,

படத்தில் சதா சர்வகாலமும் தன் காய்கரிக்கடையில் வேலைசெய்யும் பையனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் முதலாளியை கஷ்டப்படச் செய்யவேண்டும் என்ற நீக்கத்தில் அமிலீ செய்யும் திருகல்கள் பயங்கர காமெடி. ஷெவிங் க்ரீமையும் பேஸ்டையும் இடம் மாற்றி வைப்பதில் துவங்கி பாத்ரூம் கதவு knob ஐ இடம் மாற்றம் செய்து வைத்து...அலாரம் கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைத்து அடுத்த நாள் அந்த ஆசாமி படும் அவஸ்தையில் காமெடியோ காமடி.

2002ல் ஆஸ்கார் விருதுக்காக வெளி நாட்டுப் பட வரிசயில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

நிற்க.

City of God.



ஆறுபதுகளில் ரியோடி ஜெனீரோ நகரில் கட்டப்பட்ட ஏரியாவின் பெயர் தான் City of God. சேரிகளில் வசிக்கும் இந்த கறுப்பின மக்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை அடிதடி சண்டைகளில் ஈடுபடும் திருடர்களாகவே வாழ்ந்தனர். அக்காலத்தில் நடை பெறும் சம்பவங்களை அதே சேரியில் பிறந்து வளரும் ஒரு பையன் தன் திறமையால் முன்னுக்கு வரவேண்டும், படித்து முன்னேரவேண்டும் என்று எண்ணுபவன், புகைப்படத் தொழிலில் ஈடு பாடு கொண்டவன் கண்ணோட்டத்தில் கதை சொல்லப்படுகின்றது. படத்தில், ஏகப்பட்ட உட் கதைகள், ஒவ்வொறு கதாபத்திரமும் ஒரு கைத போல் சொல்லப்படுகின்றது. கதாபாத்திரங்கள் தங்கள் கதை தனிக்கதையாக இருந்த போதிலும் அவர்கள் அடிக்கடி Intersect ஆவதும் அதை இந்த காமிரா மேன் (Rocket என்பது படத்தில் அவர் பெயர், Busca pe என்பதை மொழி பெயர்த்து அப்படிச் சொல்லியிருப்பார்கள் subtitile ல்) தன் கோணத்தில் எப்படிப் பார்க்கிறான் என்பது தான் கதை சொல்லப்படும் விதம். புதுமையானதும் கூட...சற்றே நம் விறுமாண்டிபோல்..!




படத்தில் ஒரே ரத்தக் காட்சிகள் தான். Gang war கள், துப்பாக்கிச்சூடுகள், கொளைகள், மிரட்டல்கள், லஞ்சம், போலீஸ், நீயா நானா, யார் தான் பெரியவன் போன்ற ஈகோ மோதல்களினால் ஏற்படும் கொலைகள், சதா சர்வ காலமும் கைதுப்பாக்கியுடனேயே சுற்றும் 10 வயது வாண்டுகள். கவலையே இல்லாமல் கொலை செய்யும் 13 வயதுப் பையன்கள். கொலை செய்தால் தான் சமூகத்தில் மதிப்பு என்று எண்ணி வாழ்பவர்கள் என்று ஏகப்பட்ட intricate network களால் பின்னப்பட்ட கதை. கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதால் கடைசியில் உண்மையான பாத்திரங்கள் யார், என்பதையும் சொல்கிறார்கள்.

2004ல் ஆஸ்கார் விருதுக்கு பிரேஸிலிலிருந்து அனுப்பப் பட்ட படம். Foreign movies விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் ஒன்றும் கூட.

திருப்தியான படங்கள் இரண்டுமே....


இதை ஏன் பதிகிறேன் என்றால்,

நாம் இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பும் படங்களின் தரத்தையும் இவற்றையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

பஹேலி, தேவதாஸ், ஜீன்ஸ், தேவர் மகன். இத்தகய படங்களே இந்திய அரசு இந்தியாவின் Official entry யாக அனுப்பியிருக்கிறது. நாம் ஆஸ்கார் வெல்லவேண்டாம், அது நம் நோக்கமுமாக இருக்கவேண்டாம்,

படத்தின் தரத்தைப் பாருங்கள். ஜீன்ஸ், பஹேலி எல்லாம் ஒரு படமா? ஆஸ்காருக்கு இந்தியா அரசு அனுப்பும் தரத்தில் உள்ள படங்களா?

அங்கே என்ன, பட்டிக்காட்டான்களா உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள், கலர் கலர் உடைகள், ஐஷ்வர்யா ராய் பார்த்தவுடன் ஜொள்ளு வடிவதற்கு.

இதுவரை, லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா மட்டுமே நாமினேஷன் பெற்றிருக்கிறது.

August 3, 2006

Protocols of the elders of the Islamists

கூகிள் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது...
இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், எப்படி நாஜிசத்துடன் ஒத்துப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு நல்ல படவிளக்கம் இல்லை.

பார்க்க.

இதில் சொல்வது கேட்ட பிறகாவது, இந்த Denial ல் இருக்கும் நம் இடது சாரிக்கள் மாறுவார்கள் என்று நம்புவோமாக.

Democracy now!!

மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் குற்றம் கூறியபோது "மதச்சார்பற்ற" இந்திய அரசு வலைப்பதிவுகளைத் தடைசெய்தது. கேவலம், பாகிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத நாடு, மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவுடன் லிஸ்டில் சேர்கப்பட்டுவிட்டது இந்தியா...கருத்துச் சுதந்திரத்தில்...(so much for liberal left!!)

Indiblogs blogspot ban alternative.

August 2, 2006

Marxist-Islamist-ஆறு விளையாட்டு

  • மார்க்ஸ்வாதிகள் கார்ல் மார்க்ஸ் என்கிற உலக தொழிலாளர்கள் ரட்சகரை நம்பும் கூட்டம். இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த "ரட்சகரை" நம்பும் கூட்டம்.


  • மார்க்ஸ்வாதிகள் ஆயுதம் ஏந்தும் புரட்சி மூலம் தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஜனனாயகத்தை உடைத்து தூய கம்யூனிச உலகை உருவாக்கவேண்டும் என்று நம்புபவர்கள். இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.



  • மார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள். (ஸ்டாலின், லெனின், மாவோ மார்க்ஸ்வாதி என்றால், நாஸர், இடி அமீன், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், ஈரானின் கொஹ்மேனி இஸ்லாமிஸ்டுகள்.)



  • மார்க்ஸ்வாதிகளுக்கு ஒரே கொள்கை மார்க்ஸ்வாத சோஷியலிசம், ஒரே புத்தகம் கார்ல் மார்க்ஸின் "தாஸ் காபிடல்". இஸ்லாமிஸ்டுகளுக்கு ஒரே கொள்கை இஸ்லாம், ஒரே புத்தகம் குர்-ஆன்.



  • இருவரும் கொடிய யூத வெறுப்பு (Anti-semite) கொண்டவர்கள். இந்தியாவில் இனவாதம் பேசுபவர்கள், பிராமண வெறுப்பு (Anti-brahminism) கொண்டவர்கள். வர்க்கப் போராட்டம் என்கிற பெயரில் வக்கிர தாண்டவம் ஆடும் கேடு கெட்ட தீவிரவாதிகள்.



  • இந்தியாவில் மார்க்ஸ்வாதிகள் காலஞ்சென்ற சோவியத், மற்றும் சீனா போன்ற வெளி நாட்டு முதலாளிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் என்றால், இஸ்லாமிஸ்டுகள் சவூதி, ஈரான் போன்ற வெளிநாட்டு காட்டரபிகளுக்கும், கொடுங்கோலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள். இருவரும் மொத்தத்தில் தன் நாட்டை தரம் தாழ்த்திப் பிர நாட்டுக்காரர்களிடம் விசுவாசம் காட்டும் "பரதேசீய" வாதிகள்.



  • ஈரானின் இஸ்மிஸ்டுகள் புரட்சி, மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் புரட்சி.














  • இருவரும் தமது கொள்கையில் நம்பிக்கையில்லாதவரை சிறைவைப்பர், கொன்றுவிடுவர் அல்லது இரண்டாந்தர குடிமக்களாக்கிவிட்டு, தமது கொள்கையை திணிப்பர்.



  • மார்க்ஸ்வாத நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. (சீனா, வட கொரியா), இஸ்மாமிஸ்ட் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை (ஈரான், சவூதி)



  • இந்திய மார்க்ஸ்வாத திம்மிக்கள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை வெள்ளையடித்து சரித்திரத்தை மாற்றி எழுதுவர். இஸ்லாமிஸ்டுகள் ஈரானின், எகிப்தின் சரித்திரத்தை திரித்து எழுதுவர்.



  • சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது எரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனையோ.. அதே போல் இஸ்லாமிஸ்டுகள் கொளுத்திய நலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்கள் எண்ணிலடங்கா...!! மொத்தத்தில் இறுவரும் மாற்றுகாருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..



  • இஸ்லாமிஸ்டுகளும், மார்க்ஸ்வாதிகளும் ஹோலோகாஸ்டை மறுப்பவர்கள், (holocaust deniers).



  • விளையாட்டு என்று சொல்லிவிட்டு விளையாடவில்லை என்றால் எப்படி,

    கொடுக்கப்பட்ட 12ல் பிடித்த ஆறை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..Marxist-ismaist கள் ஒற்றுமை பட்டியல் போட முடியாத அளவிற்கு நீண்ட ஒன்று..கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்றை நீக்கிவிட்டால் இறுவரும் ஒன்றே...

    Hezbollah-civilians

    வலைப்பதிவு, தொலைகாட்சி, செய்தித் தாள் என்று ஒரு ஊடகம் விடாமல் இஸ்ரேல் லெபனான் பொதுமக்கள் மீது வன் தாக்குதல் நடத்துகின்றது என்று திட்டித் தீர்காத நாளில்லை. ஆனால் போர் நடக்கும் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட ரகசிய படங்கள் ஹெஸ்பொல்லாக்களின் உண்மை ரூபத்தைக் காட்டுகின்றது.



    எத்தனை ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் அவர்களது போராட்டக் குளுவின் அங்கி அணிந்து இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலின் பதில் தாக்குதலில் மடிந்தால், மடிந்தது பொது மக்களே!! நம்புங்கள் திம்மிக்களே!!
    உங்களைப் போல் திம்மிக்கள், திம்மித்துவாவாதிகள், மார்க்ஸ்வாத மடையர்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்கிற தீவிரவாத மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கயவர்கள், எல்லாம் ஹீரோக்கள் ஆவார்கள்.